Skip to main content

மூன்றாவது நபர்



நான் உன்னிடம்


ஒரு எதிரியாக

முழுமையாக ஒப்புக் கொண்ட போது

உன்னிடம் பேச வார்த்தைகளே

இருக்கவில்லை


உன்னிடம் காட்ட

உணர்ச்சிகளே இல்லை

எதிரியை இவ்வளவு

நெருக்கமாய் பார்ப்பதைப் போல்

திக்குமுக்காட செய்வது

வேறொன்று இல்லை என்கிறாய்

புணர்ச்சியின் போது

சட்டென்று ஒளியின் பிம்பம் விழுவது போல்

நீ என்னை அவ்வளவு

சந்தேகமாய் பார்க்கிறாய்.

என்னிடம் பேச நினைத்தது அத்தனையும்

வேறொருவருக்கானது

என்று உணர்கிறாய்

ஒரு குழந்தையின் பழுதான பொம்மைகளைப் போல

உனது ஆயுதங்களை மறைக்கிறாய்

உனது கூர்நகங்கள் நெகிழ்ந்து

என் மயிர்க்கால்களை மிருதுவாக ஸ்பரிசிக்க

நான்

ஒரு பனிப்பிரதேசத்தை போல விரிசல் காண்கிறேன்.



பிறகு

என் கையை பிடித்துக் கொண்டு

விறுவிறுவென்று

என்னை அழைத்துச் சென்று நிறுத்துகிறாய்

துலங்கும் ஒரு கண்ணாடி முன்பு

நான் சொன்னேன்

“இந்த கண்ணாடி ஒரு குறியீடு

இந்த கண்ணாடி காட்டுவது

என்னை அல்ல

உனது பிம்பத்தை தான்”

நீ சொன்னாய்

”நான் அதைப் பார்க்க

உன்னை அழைத்து வரவில்லை”

அப்போது சட்டென்று நீ

என் கையை விடுத்து

விலகிச் செல்கிறாய்

காலதாமதித்த ஒரு பனித்திரையைப் போல.



உற்றுப் பார்க்க

அக்கண்ணாடியில் மூவர் இருப்பது

புலப்படுகிறது

நீ என்னை தனியே விட்டுப் போன

பின் இத்தனைக் காலமும்

நான் இங்கெயே தான்

நிற்கிறேன்

அந்த மூன்றாவது நபரின்

அடையாளம் தேடியபடி.

ஒருநாள் எதேச்சையாய்

நீ

கடந்து சென்ற போது கேட்டேன்

மூன்றாவது நபர் யாரென்று

கண்ணாடியை பார்ப்பவன் முதலாவது ஆள் என்றாய்

கண்ணாடியில் பார்க்கப்படுபவன் இரண்டாவது ஆள் என்றாய்

கண்ணாடியை குறியீடாய் பார்ப்பவன் மூன்றாவது ஆள்

ஒரு எதிரியை

இவ்வளவு பக்கத்தில் வந்து

அறிந்து விட்ட

உன்னை

மூன்றாவது நபரைக் கொண்டல்லாவது

வேறு எப்படி கொல்வது என்றாய்.

Comments

உணர்வுகளில் வெளிபாடு

அருமையாக இருக்கிறது ..........

உள்ளத்தின் ஓசை அதிர்வுகளை ஒளிகிறது

என் தளத்திலும் உண்டு கவிதைகள் ...
http://kovaimusaraladevi.blogspot.in/
Anonymous said…
தேசாந்திரி தொடரின் ஆரம்பத்தில் குட்டி குட்டியாக வந்த கவிதைகளை படித்தேன். நன்றாகவும் எளிமையாகவும் இருந்தன. மற்றபடி பெரிய கவிதைகளை நான் படிப்பதில்லை. கவிதை எழுதுபவர்கள் லூசு என எனக்கு ஒரு எண்ணம். அவர்களைப் பார்த்தால் எனக்கு பயம். அலர்ஜி. உங்களைச் சொல்லவில்லை.
Anonymous said…
http://www.imdb.com/title/tt1650407/

fa meg pa for faen

இப்படத்தில் அங்கங்கே ரிப்பீட்டாக ஓர் அருமையான பின்னணி இசை வருகின்றது.
Sai Ram said…
நான் உன்னிடம் ஒரு எதிரியாக முழுமையாக ஒப்புக் கொண்ட போது உன்னிடம் பேச வார்த்தைகளே இருக்கவில்லை
உறவுகளில் எப்போதுமே 'ஒப்பு கொள்ளுதலும்' 'பணிதலும்'இருந்தால் ஒழிய அந்த உறவு தடங்கல் இன்றி நீடிப்பதற்கான சாத்தியங்கள் குறைவு.ஆனாலும் வெளிப்படையாக/உண்மையைக் காட்டுதல் ஒரு ரிஸ்க்கான விஷயம் தான். உயிர் பிழைத்தவன் மீணடும் ஒரு சாகசத்தில் மாட்டி கொள்ளவது போல தான்.
நன்றி கோவை மு சரளா
ஆம் சாய்ராம்!

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...