முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்கு கல்யாணம் - உனக்கு சாவு


எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். பெயரளவில் தான். ஒரு முறை நான் ஆஸ்பத்திரியில் சாகக் கிடக்கும் போது போன் பண்ணினான். நான் மயக்கத்தில் இருந்தேன். என் மனைவியிடம் பேசினான்.


மனைவி: “ஹலோ யாருங்க? அபிலாஷ் கோமாவில இருக்காரு. பேச முடியாது”
நண்பன்: “எனக்கு 22தேதி கல்யாணம் நடக்கப் போவுது. அவனை அழைக்கலாமுன்னு தான் கூப்பிட்டேன்”
மனைவி: “அவரு ரொம்ப சீரியஸா ஆஸ்பத்திரியில இருக்காருங்க.”
நண்பன்: “ஆமா அதுக்குத் தான் கூப்பிட்டேன். எனக்கு கல்யாணம் 22ஆம் தேதி. சொல்லாமுன்னு கூப்பிட்டேன்”
மனைவி: “இல்லை அவருக்கு...”
நண்பன்: “எனக்கு கல்யாணம்...எனக்கு கல்யாணம்...எனக்கு கல்யாணம்”

நான் நலமான பிறகு இதை தெரிந்து கொண்டேன். ஒருவேளை போன் லைனில் ஏதாவது தகராறு இருந்திருக்கலாம். அதனால் தான் அவன் புரியாமல் சொன்னதையே சொல்லி இருப்பான் என நினைத்துக் கொண்டேன். ஆனால் கொஞ்ச நேரத்தில் அதே நண்பன் அழைத்தான்.

“டேய்  உன்னை எவ்வளவு நாளா புடிக்க டிரை பண்றேண்டா. இன்னும் ஒரு வாரத்துல எனக்கு கல்யாணம் டா”

“நான் இப்போ தான் உயிருக்கு போராடி பொழைச்சு வந்திருக்கேன். ரெஸ்டில இருக்கேன்”

“அதாண்டா. உனக்கு போன் பண்ணினா நீ பேச மாட்டேங்குற. உன்  மனைவி தான் பேசுறா. எனக்கு கல்யாணம்னு உங்கிட்ட சொல்ல ஆசையா வந்தேன்”

“டேய் நான் அப்போ கோமாவில இருந்தேன். எப்பிடி பேச முடியும்?”

“ஆங்...? சரி உனக்கு போன் பண்ணினா நீ எடுக்க மாட்டேங்குற. ஆளை பிடிக்க முடியல. ரொம்ப பெரிய ஆளாயிட்ட இப்போ. சரி எனக்கு கல்யாணம். அதுக்காவது இப்போ வந்து தொலை”
அதுக்கு மேல் முடியாமல் கட் செய்து விட்டேன்.

இந்த அளவுக்கு இல்லையென்றாலும் கிட்டத்தட்ட இதோ போன்ற பலருடன் தினமும் உரையாடி வருகிறேன். “என்னடா மச்சான் எப்படி இருக்க?” அல்லது “வணக்கம் எப்பிடி இருக்கீங்க?” என்று வாஞ்சையாக கூட கேட்பார்கள்/நலம் விசாரிப்பார்கள். நீங்கள் உங்கள் நிலைமையை விவரித்தால் அதை கேட்காமல் தம்மைப் பற்றி பேச ஆரம்பிப்பார்கள். அதெப்படி நான் பேசும் போது மட்டும் உங்களுக்கு காது கேட்காம போகுதுடா?

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தயவு செய்து அவரை எல்லாம் (இவர்களை போன்றவர்களிடம்) நண்பர் என்று சொல்லாதீர்கள்... நினைக்காதீர்கள்...
ப.கந்தசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
//அதெப்படி நான் பேசும் போது மட்டும் உங்களுக்கு காது கேட்காம போகுதுடா?//

அது ஒரு தீராத சீக்குங்க. நல்லாகாதுங்க.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...