முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்கு கல்யாணம் - உனக்கு சாவு


எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். பெயரளவில் தான். ஒரு முறை நான் ஆஸ்பத்திரியில் சாகக் கிடக்கும் போது போன் பண்ணினான். நான் மயக்கத்தில் இருந்தேன். என் மனைவியிடம் பேசினான்.


மனைவி: “ஹலோ யாருங்க? அபிலாஷ் கோமாவில இருக்காரு. பேச முடியாது”
நண்பன்: “எனக்கு 22தேதி கல்யாணம் நடக்கப் போவுது. அவனை அழைக்கலாமுன்னு தான் கூப்பிட்டேன்”
மனைவி: “அவரு ரொம்ப சீரியஸா ஆஸ்பத்திரியில இருக்காருங்க.”
நண்பன்: “ஆமா அதுக்குத் தான் கூப்பிட்டேன். எனக்கு கல்யாணம் 22ஆம் தேதி. சொல்லாமுன்னு கூப்பிட்டேன்”
மனைவி: “இல்லை அவருக்கு...”
நண்பன்: “எனக்கு கல்யாணம்...எனக்கு கல்யாணம்...எனக்கு கல்யாணம்”

நான் நலமான பிறகு இதை தெரிந்து கொண்டேன். ஒருவேளை போன் லைனில் ஏதாவது தகராறு இருந்திருக்கலாம். அதனால் தான் அவன் புரியாமல் சொன்னதையே சொல்லி இருப்பான் என நினைத்துக் கொண்டேன். ஆனால் கொஞ்ச நேரத்தில் அதே நண்பன் அழைத்தான்.

“டேய்  உன்னை எவ்வளவு நாளா புடிக்க டிரை பண்றேண்டா. இன்னும் ஒரு வாரத்துல எனக்கு கல்யாணம் டா”

“நான் இப்போ தான் உயிருக்கு போராடி பொழைச்சு வந்திருக்கேன். ரெஸ்டில இருக்கேன்”

“அதாண்டா. உனக்கு போன் பண்ணினா நீ பேச மாட்டேங்குற. உன்  மனைவி தான் பேசுறா. எனக்கு கல்யாணம்னு உங்கிட்ட சொல்ல ஆசையா வந்தேன்”

“டேய் நான் அப்போ கோமாவில இருந்தேன். எப்பிடி பேச முடியும்?”

“ஆங்...? சரி உனக்கு போன் பண்ணினா நீ எடுக்க மாட்டேங்குற. ஆளை பிடிக்க முடியல. ரொம்ப பெரிய ஆளாயிட்ட இப்போ. சரி எனக்கு கல்யாணம். அதுக்காவது இப்போ வந்து தொலை”
அதுக்கு மேல் முடியாமல் கட் செய்து விட்டேன்.

இந்த அளவுக்கு இல்லையென்றாலும் கிட்டத்தட்ட இதோ போன்ற பலருடன் தினமும் உரையாடி வருகிறேன். “என்னடா மச்சான் எப்படி இருக்க?” அல்லது “வணக்கம் எப்பிடி இருக்கீங்க?” என்று வாஞ்சையாக கூட கேட்பார்கள்/நலம் விசாரிப்பார்கள். நீங்கள் உங்கள் நிலைமையை விவரித்தால் அதை கேட்காமல் தம்மைப் பற்றி பேச ஆரம்பிப்பார்கள். அதெப்படி நான் பேசும் போது மட்டும் உங்களுக்கு காது கேட்காம போகுதுடா?

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தயவு செய்து அவரை எல்லாம் (இவர்களை போன்றவர்களிடம்) நண்பர் என்று சொல்லாதீர்கள்... நினைக்காதீர்கள்...
ப.கந்தசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
//அதெப்படி நான் பேசும் போது மட்டும் உங்களுக்கு காது கேட்காம போகுதுடா?//

அது ஒரு தீராத சீக்குங்க. நல்லாகாதுங்க.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.