Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மலையாளிகள்: எங்கும் ஒட்டாத இனம்



சமீபமாக சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கேரள மாணவர்களின் கேங் சண்டையின் விளைவாக தீபக் என்று ஒரு மாணவன் இறந்து போனான். சேலத்தில் மட்டுமல்ல அருகாமை மாவட்ட கல்லூரிகளில் உள்ள மலையாளி இளைஞர்கள் கூட இந்த கேங்களில் சேர்ந்து கொள்கிறார்களாம். இதற்கு உறுப்பினர் கட்டணம் எல்லாம் உண்டு. தமிழக மாணவர்களே பண்ணாத ஒரு காரியத்தை வெளிமாநில மக்கள் எப்படி செய்ய துணிகிறார்கள் என நாம் சிந்திக்க வேண்டும். இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
1. மலையாளிகள் தாம் தமிழகத்தில் செய்யும் குற்றங்களால் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படாமல் ஊருக்கு திரும்பி விடலாம் என நம்புகிறார்கள். 2. அவர்களிடம் உள்ள எலைட்டிஸ்டு மனநிலையும் பாதுகாப்பின்மை உணர்வும் இவ்வாறு கூட்டு சேர்ந்து சச்சரவுகளை தோற்றுவிக்க தூண்டுகின்றன.

சென்னை கிறித்துவக் கல்லூரியில் நான் படித்த காலத்தில் மலையாளிகளின் அரசியலை அருகில் இருந்து கவனித்திருக்கிறேன். அக்கல்லூரியின் வரலாற்றில் முதன்முதலாக அவர்கள் தமிழர்/தமிழர் அல்லாதோர் என பிரிவினை உண்டாக்கி அரசியல் செய்து இரண்டு வருடங்களுக்கு மேலாக நெருக்கடி நிலையை தோற்றுவித்தார்கள். மாணவர் பிரிவினையின் போது  சில தமிழ் மாணவர்களும் மலையாளிகளின் பக்கம் சேர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு மலையாளிகள் பண்பாட்டு அளவில் உயர்ந்தவர்கள் என்கிற தாழ்வு மனப்பான்மை இருந்தது. மலையாளிகளின் பொதுவான அரசியல் பாணியும் உயர்வு மனப்பான்மையும் பிராமணர்களை நினைவுபடுத்துவது.

இது மலையாளிகள் பற்றின எனது மனச்சித்திரம்.

 1. மலையாளிகள் தாம் இருக்கிற இடத்தின் பண்பாட்டோடு பொருந்திப் போக மாட்டார்கள்.
2. ஊசி முனை இடத்திலும் கூட்டம் சேர்த்து கலகம் செய்வார்கள்.

3. காலை முழித்த உடனே யாரை வம்பில் மாட்டி விடலாம் என திரிவார்கள்.

4. பொதுவாக மலையாளிகளை மலையாளிகளே நம்ப மாட்டார்கள்.

5. என்னதான் பிரச்சனைகள் வந்தாலும் அதனால் தமக்கு சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வார்கள். அதாவது வன்முறை, சச்சரவுகள் நிகழ்ந்தால் அவர்கள் பின்னணியில் மட்டும் தான் இருப்பார்கள். உணர்ச்சிவசப்படும் தமிழ் மாணவர்கள் தாம் அடி வாங்கி அவஸ்தைப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கும் ஆளாவார்கள்.

6. தமிழகத்தில் கன்னடியர், தெலுங்கர்கள் முன்னூறு வருடங்களுக்கு மேலாக வந்து வாழ்ந்து பண்பாட்டில் கரைந்து விட்டார்கள். சரளமாக தமிழ் பேசி எழுதி வாழ்கிறார்கள். ஆனால் மலையாளிகளை இந்த பட்டியலில் எளிதில் சேர்க்க முடியாது. அவர்கள் தம்மை ஒருக்காலும் தமிழர்களாக கருத மாட்டார்கள். தமிழர்களை கீழ் சாதியாகவே நினைப்பார்கள். இங்கு பிறந்து வளர்ந்த சில மலையாளிகளை விதிவிலக்கு எனலாம். குமரி மாவட்ட மலையாளிகள் இடைநிலையில் உள்ளவர்கள். கலவை அடையாளம் கொண்டவர்கள்.

பொதுவாக கேரள கலாச்சாரத்துக்கு பல உயர்வுகள் இருந்தாலும் அம்மாநில மக்களின் பண்பாட்டு ஒவ்வாமை அவர்களின் ஒரு அடிப்படையான உளவியல் சிக்கல் என நினைக்கிறேன். அவர்களால் ஒரு புது சூழலில் உள்ள நன்மைகளை சுவீகரிக்க முடியாது. தம் இயல்பு தவிர்த்த எதுவுமே அவர்களில் ஒட்டாது. கேரளாவை சேர்ந்த மணியன்பிள்ளை என்று ஒரு திருடன் தமிழகத்தில் வந்து திமுகவில் சேர்ந்து முக்கிய கீழ்நிலை பொறுப்பு ஒன்றை வகித்து இங்கு தொழில் செய்து சில காலம் வாழ்ந்தான். பின்னர் அவன் எழுதிய சுயசரிதையில் இது பற்றி குறிப்பு உள்ளது. மணியன்பிள்ளைக்கும் தமிழ்தேசிய கட்சியான திமுகவுக்கு என்ன சம்மந்தம்? இது தான் அடிப்படையான மலையாளிப் பண்பு. அவனுக்கு திமுக என்றால் என்ன என்று கூட அக்கறை இருக்காது. ஆனாலும் இங்கு வந்து ஒரு பிரதான கட்சியில் வெறுமனே ஒட்டி இருந்து அதனை பயன்படுத்திக் கொள்வான். பிறகு தப்பி பறந்து புது ஊருக்கு போய் விடுவான்.

கன்னடியர், தெலுங்கர்களை விட மலையாளிகள் இங்கு அதிகமாக வெறுக்கப்படுபதற்கு அவர்களின் இந்த cultural apathy தான் முக்கிய காரணம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...