Skip to main content

மலையாளிகள்: எங்கும் ஒட்டாத இனம்



சமீபமாக சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கேரள மாணவர்களின் கேங் சண்டையின் விளைவாக தீபக் என்று ஒரு மாணவன் இறந்து போனான். சேலத்தில் மட்டுமல்ல அருகாமை மாவட்ட கல்லூரிகளில் உள்ள மலையாளி இளைஞர்கள் கூட இந்த கேங்களில் சேர்ந்து கொள்கிறார்களாம். இதற்கு உறுப்பினர் கட்டணம் எல்லாம் உண்டு. தமிழக மாணவர்களே பண்ணாத ஒரு காரியத்தை வெளிமாநில மக்கள் எப்படி செய்ய துணிகிறார்கள் என நாம் சிந்திக்க வேண்டும். இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
1. மலையாளிகள் தாம் தமிழகத்தில் செய்யும் குற்றங்களால் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படாமல் ஊருக்கு திரும்பி விடலாம் என நம்புகிறார்கள். 2. அவர்களிடம் உள்ள எலைட்டிஸ்டு மனநிலையும் பாதுகாப்பின்மை உணர்வும் இவ்வாறு கூட்டு சேர்ந்து சச்சரவுகளை தோற்றுவிக்க தூண்டுகின்றன.

சென்னை கிறித்துவக் கல்லூரியில் நான் படித்த காலத்தில் மலையாளிகளின் அரசியலை அருகில் இருந்து கவனித்திருக்கிறேன். அக்கல்லூரியின் வரலாற்றில் முதன்முதலாக அவர்கள் தமிழர்/தமிழர் அல்லாதோர் என பிரிவினை உண்டாக்கி அரசியல் செய்து இரண்டு வருடங்களுக்கு மேலாக நெருக்கடி நிலையை தோற்றுவித்தார்கள். மாணவர் பிரிவினையின் போது  சில தமிழ் மாணவர்களும் மலையாளிகளின் பக்கம் சேர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு மலையாளிகள் பண்பாட்டு அளவில் உயர்ந்தவர்கள் என்கிற தாழ்வு மனப்பான்மை இருந்தது. மலையாளிகளின் பொதுவான அரசியல் பாணியும் உயர்வு மனப்பான்மையும் பிராமணர்களை நினைவுபடுத்துவது.

இது மலையாளிகள் பற்றின எனது மனச்சித்திரம்.

 1. மலையாளிகள் தாம் இருக்கிற இடத்தின் பண்பாட்டோடு பொருந்திப் போக மாட்டார்கள்.
2. ஊசி முனை இடத்திலும் கூட்டம் சேர்த்து கலகம் செய்வார்கள்.

3. காலை முழித்த உடனே யாரை வம்பில் மாட்டி விடலாம் என திரிவார்கள்.

4. பொதுவாக மலையாளிகளை மலையாளிகளே நம்ப மாட்டார்கள்.

5. என்னதான் பிரச்சனைகள் வந்தாலும் அதனால் தமக்கு சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வார்கள். அதாவது வன்முறை, சச்சரவுகள் நிகழ்ந்தால் அவர்கள் பின்னணியில் மட்டும் தான் இருப்பார்கள். உணர்ச்சிவசப்படும் தமிழ் மாணவர்கள் தாம் அடி வாங்கி அவஸ்தைப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கும் ஆளாவார்கள்.

6. தமிழகத்தில் கன்னடியர், தெலுங்கர்கள் முன்னூறு வருடங்களுக்கு மேலாக வந்து வாழ்ந்து பண்பாட்டில் கரைந்து விட்டார்கள். சரளமாக தமிழ் பேசி எழுதி வாழ்கிறார்கள். ஆனால் மலையாளிகளை இந்த பட்டியலில் எளிதில் சேர்க்க முடியாது. அவர்கள் தம்மை ஒருக்காலும் தமிழர்களாக கருத மாட்டார்கள். தமிழர்களை கீழ் சாதியாகவே நினைப்பார்கள். இங்கு பிறந்து வளர்ந்த சில மலையாளிகளை விதிவிலக்கு எனலாம். குமரி மாவட்ட மலையாளிகள் இடைநிலையில் உள்ளவர்கள். கலவை அடையாளம் கொண்டவர்கள்.

பொதுவாக கேரள கலாச்சாரத்துக்கு பல உயர்வுகள் இருந்தாலும் அம்மாநில மக்களின் பண்பாட்டு ஒவ்வாமை அவர்களின் ஒரு அடிப்படையான உளவியல் சிக்கல் என நினைக்கிறேன். அவர்களால் ஒரு புது சூழலில் உள்ள நன்மைகளை சுவீகரிக்க முடியாது. தம் இயல்பு தவிர்த்த எதுவுமே அவர்களில் ஒட்டாது. கேரளாவை சேர்ந்த மணியன்பிள்ளை என்று ஒரு திருடன் தமிழகத்தில் வந்து திமுகவில் சேர்ந்து முக்கிய கீழ்நிலை பொறுப்பு ஒன்றை வகித்து இங்கு தொழில் செய்து சில காலம் வாழ்ந்தான். பின்னர் அவன் எழுதிய சுயசரிதையில் இது பற்றி குறிப்பு உள்ளது. மணியன்பிள்ளைக்கும் தமிழ்தேசிய கட்சியான திமுகவுக்கு என்ன சம்மந்தம்? இது தான் அடிப்படையான மலையாளிப் பண்பு. அவனுக்கு திமுக என்றால் என்ன என்று கூட அக்கறை இருக்காது. ஆனாலும் இங்கு வந்து ஒரு பிரதான கட்சியில் வெறுமனே ஒட்டி இருந்து அதனை பயன்படுத்திக் கொள்வான். பிறகு தப்பி பறந்து புது ஊருக்கு போய் விடுவான்.

கன்னடியர், தெலுங்கர்களை விட மலையாளிகள் இங்கு அதிகமாக வெறுக்கப்படுபதற்கு அவர்களின் இந்த cultural apathy தான் முக்கிய காரணம்.

Comments

உங்கள் கருத்துகளை ஒத்துக்கொள்கிறேன்.
Unknown said…
சரியாக கூறினீர்கள்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...