முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மலையாளிகள்: எங்கும் ஒட்டாத இனம்



சமீபமாக சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கேரள மாணவர்களின் கேங் சண்டையின் விளைவாக தீபக் என்று ஒரு மாணவன் இறந்து போனான். சேலத்தில் மட்டுமல்ல அருகாமை மாவட்ட கல்லூரிகளில் உள்ள மலையாளி இளைஞர்கள் கூட இந்த கேங்களில் சேர்ந்து கொள்கிறார்களாம். இதற்கு உறுப்பினர் கட்டணம் எல்லாம் உண்டு. தமிழக மாணவர்களே பண்ணாத ஒரு காரியத்தை வெளிமாநில மக்கள் எப்படி செய்ய துணிகிறார்கள் என நாம் சிந்திக்க வேண்டும். இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
1. மலையாளிகள் தாம் தமிழகத்தில் செய்யும் குற்றங்களால் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படாமல் ஊருக்கு திரும்பி விடலாம் என நம்புகிறார்கள். 2. அவர்களிடம் உள்ள எலைட்டிஸ்டு மனநிலையும் பாதுகாப்பின்மை உணர்வும் இவ்வாறு கூட்டு சேர்ந்து சச்சரவுகளை தோற்றுவிக்க தூண்டுகின்றன.

சென்னை கிறித்துவக் கல்லூரியில் நான் படித்த காலத்தில் மலையாளிகளின் அரசியலை அருகில் இருந்து கவனித்திருக்கிறேன். அக்கல்லூரியின் வரலாற்றில் முதன்முதலாக அவர்கள் தமிழர்/தமிழர் அல்லாதோர் என பிரிவினை உண்டாக்கி அரசியல் செய்து இரண்டு வருடங்களுக்கு மேலாக நெருக்கடி நிலையை தோற்றுவித்தார்கள். மாணவர் பிரிவினையின் போது  சில தமிழ் மாணவர்களும் மலையாளிகளின் பக்கம் சேர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு மலையாளிகள் பண்பாட்டு அளவில் உயர்ந்தவர்கள் என்கிற தாழ்வு மனப்பான்மை இருந்தது. மலையாளிகளின் பொதுவான அரசியல் பாணியும் உயர்வு மனப்பான்மையும் பிராமணர்களை நினைவுபடுத்துவது.

இது மலையாளிகள் பற்றின எனது மனச்சித்திரம்.

 1. மலையாளிகள் தாம் இருக்கிற இடத்தின் பண்பாட்டோடு பொருந்திப் போக மாட்டார்கள்.
2. ஊசி முனை இடத்திலும் கூட்டம் சேர்த்து கலகம் செய்வார்கள்.

3. காலை முழித்த உடனே யாரை வம்பில் மாட்டி விடலாம் என திரிவார்கள்.

4. பொதுவாக மலையாளிகளை மலையாளிகளே நம்ப மாட்டார்கள்.

5. என்னதான் பிரச்சனைகள் வந்தாலும் அதனால் தமக்கு சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வார்கள். அதாவது வன்முறை, சச்சரவுகள் நிகழ்ந்தால் அவர்கள் பின்னணியில் மட்டும் தான் இருப்பார்கள். உணர்ச்சிவசப்படும் தமிழ் மாணவர்கள் தாம் அடி வாங்கி அவஸ்தைப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கும் ஆளாவார்கள்.

6. தமிழகத்தில் கன்னடியர், தெலுங்கர்கள் முன்னூறு வருடங்களுக்கு மேலாக வந்து வாழ்ந்து பண்பாட்டில் கரைந்து விட்டார்கள். சரளமாக தமிழ் பேசி எழுதி வாழ்கிறார்கள். ஆனால் மலையாளிகளை இந்த பட்டியலில் எளிதில் சேர்க்க முடியாது. அவர்கள் தம்மை ஒருக்காலும் தமிழர்களாக கருத மாட்டார்கள். தமிழர்களை கீழ் சாதியாகவே நினைப்பார்கள். இங்கு பிறந்து வளர்ந்த சில மலையாளிகளை விதிவிலக்கு எனலாம். குமரி மாவட்ட மலையாளிகள் இடைநிலையில் உள்ளவர்கள். கலவை அடையாளம் கொண்டவர்கள்.

பொதுவாக கேரள கலாச்சாரத்துக்கு பல உயர்வுகள் இருந்தாலும் அம்மாநில மக்களின் பண்பாட்டு ஒவ்வாமை அவர்களின் ஒரு அடிப்படையான உளவியல் சிக்கல் என நினைக்கிறேன். அவர்களால் ஒரு புது சூழலில் உள்ள நன்மைகளை சுவீகரிக்க முடியாது. தம் இயல்பு தவிர்த்த எதுவுமே அவர்களில் ஒட்டாது. கேரளாவை சேர்ந்த மணியன்பிள்ளை என்று ஒரு திருடன் தமிழகத்தில் வந்து திமுகவில் சேர்ந்து முக்கிய கீழ்நிலை பொறுப்பு ஒன்றை வகித்து இங்கு தொழில் செய்து சில காலம் வாழ்ந்தான். பின்னர் அவன் எழுதிய சுயசரிதையில் இது பற்றி குறிப்பு உள்ளது. மணியன்பிள்ளைக்கும் தமிழ்தேசிய கட்சியான திமுகவுக்கு என்ன சம்மந்தம்? இது தான் அடிப்படையான மலையாளிப் பண்பு. அவனுக்கு திமுக என்றால் என்ன என்று கூட அக்கறை இருக்காது. ஆனாலும் இங்கு வந்து ஒரு பிரதான கட்சியில் வெறுமனே ஒட்டி இருந்து அதனை பயன்படுத்திக் கொள்வான். பிறகு தப்பி பறந்து புது ஊருக்கு போய் விடுவான்.

கன்னடியர், தெலுங்கர்களை விட மலையாளிகள் இங்கு அதிகமாக வெறுக்கப்படுபதற்கு அவர்களின் இந்த cultural apathy தான் முக்கிய காரணம்.

கருத்துகள்

ப.கந்தசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் கருத்துகளை ஒத்துக்கொள்கிறேன்.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
சரியாக கூறினீர்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.