முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

That was a good interview!






சமீபத்தில் “முதல்வன்” திரும்ப பார்த்தேன். இறுதிக் காட்சியில் குண்டடிபட்டு கிடக்கும் முன்னாள் முதல்வர் ரகுவரன் சிரித்தபடி நாயகனை நோக்கி சொல்கிறார்: “அது ஒரு நல்ல பேட்டி”. இந்த வசனம் மொத்த படத்தை திருப்பி போட்டு ரகுவரனின் பார்வையில் இருந்து பார்க்க வைக்கிறது. 

சாகிற கணத்தில் அந்த டி.வி பேட்டி நினைவு வர அவர் யோசித்திருக்கலாம்: “எதற்கு தேவையில்லாமல் ஒரு சவால் விட்டு என் வாழ்க்கையை இப்படி சீரழித்துக் கொண்டேன். பிறகு எல்லாமே ஒரு விளையாட்டு போல் முடிந்து விட்டதே. நான் அந்த ஒரு வாக்கியத்தை சொல்லாமல் இருந்திருக்கலாமே!” என்று. சின்ன விளையாட்டாய் ஆரம்பிக்கிற ஒன்று சீரியசாக அவர் அரசியல் வாழ்க்கையை மாற்றுகிறது தான் அக்கதை, இன்னொரு கோணத்தில். ஒரு சின்ன வசனம் சட்டென்று நமக்கு ஒரு புது பார்வையை கதை பற்றி கொடுக்கிறதென்றால் அது தான் ஆகச் சிறந்த வசனம்.
 சுஜாதா இது போல் அவரது படங்களில் பல இடங்களில் நம்மை நின்று நிதானமாய் யோசித்து ரசிக்க வைக்கிறார். “திருடா திருடாவில்” சி.பி.ஐ அதிகாரியிடம் பேசும் உள்ளூர் போலீஸான மலேசியா வாசுதேவன் “சார் தாட் மேடம் டூ தீவ்ஸ் ரேன் வித் மணி” என அதிகாரி “வேணாம் தமிழ்லயே சொல்லுங்க” என்பார். அதற்கு மலேசியா வாசுதேவர் “இல்ல சார் தமிழ்ல சொன்னா ரொம்ப டைம் எடுக்கும்” என்று விட்டு தமிழிலேயே அதை சொல்ல நிஜமாகவே தமிழில் பேசுகையில் நீளமாகத் தான் உள்ளது என நமக்குத் தோன்றும். இதை மொழிபெயர்க்கையில் நீங்கள் உணர்ந்திருக்கலாம். ஐநூறு பக்க “குற்றமும் தண்டனையும்” தமிழில் 900 பக்கம் வருகிறது. இதே போன்றது தான் “உயிரேயில்” “இது தான் உலகிலேயே மிகச்சுருக்கமான காதல் கதை” எனும் வசனம். வசனம் என்றால் அவசியம் பளிச்சென்று புத்திசாலித்தனமாக இருக்க வேண்டியதில்லை – அதற்குள் இன்னொரு கதை உறைந்திருக்க வேண்டும். சுஜாதாவின் வசனங்கள் கற்பிப்பது இதைத் தான்.

கருத்துகள்

prabhasri இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான கட்டுரை...
Uncomparable Sujatha....
Thank U...
சேக்காளி இவ்வாறு கூறியுள்ளார்…
"புண்ணுல ஈ மொய்க்கிற மாதிரி கண்ணுக்கு தெரியாம ஜெர்ம்ஸ்(Germs)உட்கார்ந்துட்டு இருக்கும்" ன்னு காம்பு இல்லாத வாழைப்பழத்தில் இருக்கும் கிருமிகள் பற்றி அந்நியன் படத்தில் சொல்லியிருப்பார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...