முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலைஞரை மட்டும் ஏன் திட்டுகிறார்கள்?



நாம் கலைஞரை விமர்சிப்பது போல் ஏன் ஜெயாவை செய்வதில்லை?
1.கலைஞரின் குடும்ப அரசியல் தான் விமர்சிக்கப்படுகிறது. மேலும் குடும்பத்துக்கு முன்னுரிமை கொடுக்கிற பேரில் அவர் எல்லாரையும் குழப்பி தன்னை மட்டும் தக்க வைக்கிற அரசியல் எரிச்சலூட்டுகிறது. ஜெயலலிதாவிடம் குடும்ப அரசியல் இல்லை. உதிரியாக ஒன்றிரண்டு காட்டலாமே ஒழிய அவருடையது குடும்ப அரசியல் அல்ல, தனிமனித அதிகார அரசியல். ரெண்டையும் குழப்ப முடியாது.

2. ஜெயாவின் சர்வாதிகாரத்தை விமர்சிக்க வேண்டிய கட்டத்தில் விமர்சித்திருக்கிறோம். குறிப்பாக அண்ணா நூலகத்தை பெயர்க்க நினைத்த போது. ஜெயா யாரையும் அதற்காக உள்ளே போடவில்லை. ஜெயாவைப் பார்த்து பேஸ்புக் அல்லது இணையத்தில் இயங்குபவர்கள் பயந்து நடங்குவதாக கூறுவது அபத்தமான பார்வை.
3. கலைஞர் மிகவும் தனிப்பட்ட முறையில் தாக்க்கப்படுகிறார் என்பது உண்மை தான். இங்கு இரண்டு விசயங்கள் சொல்ல வேண்டும். அவதூறு அரசியல் நம் நடைமுறை அரசியலின் பகுதி. பொதுமேடைகளில் பரஸ்பரம் கேவலமாக திட்டிக் கொள்வது நம் அரசியல் பண்பாடு. இன்று இணையத்தில் எழுதப்படுகிற விமர்சன்ங்களிலும் அதுவே பிரதிபலிக்கிறது. அடுத்து, கணிசமான ஈழத்தமிழர்கள் கலைஞர் தம்மை ஏமாற்றி விட்டதாக நம்புகிறார்கள். அவர்களின் கோபம் நியாயமானது. அவர்கள் காறித் தான் உமிழ்வார்கள். ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
4. ஜெயாவின் ஆட்சியின் குற்றங்களை கண்டுபிடித்து எழுத வேண்டியது மீடியாவின் பொறுப்பு. நம் மீடியா பொருளாதார லாபத்துக்காக ஆப்பில் உட்கார்ந்த குரங்கு போல் இவ்விசயத்தில் கையை கட்டி இருக்கிறது. இது நம் தவறல்ல. விமர்சனமும், ஊழல் போன்ற குற்ற வெளிப்பாடுகளும் மீடியாவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அது ஜெயாவை விமர்சிப்பதற்கான சூழலை உருவாக்கும். வலைதொடர்பு தளங்களில் விமர்சனங்கள் அப்போது தான் ஆரம்பிக்கும்.
5. பொதுவாக திமுக ஆட்சியிலும் நம் மீடியா ஜெயா மீது மயிலிறகால் தான் வருடுகிறதா? இது தான் விவாதிக்க வேண்டிய விசயம். எந்தெந்த பத்திரிகை என்று முன்பு டான் அசோக் ஒரு பதிவில் எழுதியதாய் நினைவு. இப்போது இந்த பத்திரிகைகளை வெளியே கொண்டு வந்து விவாதிப்போம். அது நியாயம். இதில் பார்ப்பனிய அரசியல் செயல்படுகிறதா? அதையும் விவாதிப்போம். ஆனால் பிரச்சனை பார்ப்பனியம் மட்டும் அல்ல என்பது நிச்சயம். திமுக தான் விழ வேண்டிய ஏகப்பட்ட குழிகளை போன ஆட்சியிலும், மத்திய மந்திரிசபை பங்கேற்பிலும் செய்து வைத்திருக்கிறது. விழுந்து தான் எழ முடியும்.
6. திமுக விழ வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருக்கிறதா? ஒரு சமூக மறுமலர்ச்சி கட்சியாக திமுகவின் காலம் என்றோ முடிந்து விட்ட்து என பலரும் எழுதி இருக்கிறார்கள். வேறு மாற்றுகள் இல்லாத்தாலும், பெரியாரியத்தின் வலுவாலும் தான் திமுக இன்றும் உயிர்க்கிறது. திமுக அழிய வேண்டியதில்லை. அது தன்னை புதுப்பிக்கட்டும். கோட்பாட்டளவிலும் இயக்க அளவிலும் இது நடக்கட்டும். அதனோடு இணையாக சாதிக்கட்சிகள் அல்லாமல் லட்சியவாத்த்தின் அடிப்படையில்னான ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் (ஆம் ஆத்மியே அல்ல) இங்கு தோன்ற வேண்டும்.
 மத்திய வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குறுகிய சாதிய நோக்கம் களைந்த கட்சிகள் நமக்கு இன்று தேவையுள்ளன. அந்த வெற்றிடத்தை இனி தி.மு.கவில் நிரப்ப முடியாது. திமுகவின் நம்பிக்கைகள் மிக மிக பழையன. மக்களின் மனநிலையும் பொருளாதார தேவைகளும் சமூக எதிர்பார்ப்புகளும் மாறி விட்டன.
தி.முக. நிலைப்பதற்கு இன்னொரு காரணம் சாதிய எதிர்ப்பரசியலுக்கு மாற்று கோட்பாடு அல்லது அமைப்போ இல்லாதது. இடதுசாரிகளோ அதிமுகவோ வேறு திசை நோக்கி நகர்ந்து நீண்ட காலம் ஆகி விட்டது. நமக்கு இன்று தேவை மத்திய சாதிகளையும் ஒடுக்கப்பட்ட சாதிகளையும் இணையும் இரு தரப்புகளாய் இணைத்து சமரசம் கொண்டு வரும் மற்றொரு கட்சி. அப்படி இணைப்பதற்கான லட்சிய வலுவை கழக கட்சிகள் இழந்து விட்டன என்பதற்கு சமீபமாய் நடந்தேறிய சாதிய படுகொலைகளும், மீனவர் பிரச்சனையில் கழக கட்சிகள் விட்டேந்தியாக நடந்து கொண்ட முறையும் காட்டுகின்றன. சாதிய கட்சிகளுக்கான் ஒரு சமூகவியல் தேவை இருந்தாலும் அரசியலில் அவை மேலும் பிளவையும் படுகொலைகளையும் தான் நிகழ்த்துகின்றன. அறுபதுகளில் நடந்த்து போன்ற ஒரு சமூக மாற்றம் மீண்டும் தேவைப்படுகிறது. கேஜ்ரிவாலின் டெம்பிளேட்டில் (சில குறைகளைக் களைந்து) மற்றொரு அண்ணாதுரை இங்கு வர வேண்டும். கழகக் கட்சிகளின் இடத்தில் சாதிக்கட்சிகள் வரக் கூடாது.
7. இறுதியாய், கலைஞர் ஒரு காலத்தில் மிகத் துடிப்பான தைரியமான தமிழர் தலைவராக இருந்தார். ஏதோ ஒரு கட்ட்த்தில் அவரது சீரழிவு நடக்கத் தொடங்கியது. அது குடும்ப அரசியலினால் என்று மட்டும் என நான் நினைக்கவில்லை. ஒரு தனிமனிதராக அவர் வெகுவாக மாறிப் போனார். இப்போது அவர் மீது எழும் கோபம் ஒரு கட்சி மீதானது அல்ல. சீரழிந்து போன தலைவர் மீதானது. ஜெயலலிதா முகேஷ் அம்பானி, இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசன் போல் ஒரு வர்த்தக முதலாளி. கம்பெனிக்கு லாபம் சம்பாதித்து தமக்கும் கொஞ்சம் அரிசி, மிக்ஸி வரும் வரை மக்க்ள் பொறுத்துக் கொள்வார்கள். உண்மையில் ஜெயல்லிதாவை வைத்து என்ன செய்வதென்றே மக்களுக்கு புரியவில்லை. எதிர்பார்ப்பும் இல்லை, ஏமாற்றமும் இல்லை. வெயில்காலம் வந்தால் சிலருக்கு கொப்புளம் வரும் அல்லவா. அது போல் சகித்துக் கொள்ள வேண்டிய ஒரு தோல் வியாதி. தானே போய் விடும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...