முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடுத்த உலகக் கோப்பை வரை பிணம் காத்திருக்க வேண்டும்



தோனிக்கு ஸ்ரீனிவாசனுடன் உள்ள அணுக்கம், அவரது சிமிண்ட் கம்பெனியில் தோனியின் பங்கு மற்றும் சூப்பர் கிங்ஸ் தலைமை காரணமாய் இந்திய கிரிக்கெட் ஒரு எலிப்பொறியில் மாட்டி இருக்கிறது. தொடர்ந்து நான்கு வெளிநாடுகளில் நாம் படுதோல்வி அடைந்திருக்கிறோம். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் இதற்கு முன் பெரும் மாற்றங்களை கொண்டு வந்திருக்கும். எந்த அணியும் இந்தளவுக்கு தோல்விகளை பொறுக்காது. வங்கதேசம் ஆசியக்கோப்பையின் நடுவில் பாதிக்கு மேல் வீர்ர்களை மாற்றியது. ஒரு ஆட்டம் தோற்றாலே பாகிஸ்தான் வாரியம் மொத்த அணியையும் தூக்கி கடாசும். ஆனால் இந்திய அணிக்கு மட்டும் ஒரு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த உலகக்கோப்பை வரை எவ்வளவு ஆட்டங்களை நீங்கள் இழக்கலாம், நாங்கள் யாரையும் மாற்ற மாட்டோம் என்று. ஏனென்றால் இங்கே பணம் தான் முக்கியம். வென்றாலும் தோற்றாலும் பணம் குவிகிறது. பின் இருக்கவே இருக்கிறது ஐ.பி.எல். அடுத்த உலக்க் கோப்பையில் நாம் கால் இறுதியை தாண்டப் போவதில்லை (சூதாட்டக்கார்ர்கள் நினைத்தால் ஒழிய). தோற்றுத் திரும்பும் தோனிக்கு இன்னும் ஆறு மாதங்கள் வழங்கப்படும். அப்போது இங்கு மே.இ தீவுகள், நியூசிலாந்து போன்று சோனி அணிகள் அழைக்கப்பட்டு சுழலும் ஆடுதளங்களில் தோற்கடிக்கப்படுவார்கள். இதன் மூலம் தோனியின் பெயர் கொஞ்சம் காப்பாற்றப்படும். அதன் பிற்கு இந்தியா ஒரு சிரம்மான வெளிநாட்டு பயணம் போவதற்கு சில வாரங்கள் முன் தோனி ஓய்வு பெறுவார். சச்சினைப் போல அவருக்கு ஏதாவது ஒரு சப்பை அணியை இந்தியாவில் தோற்கடிக்க வைத்து அந்த தருணத்தில் பிரம்மாண்டமான farewell கொடுப்பார்கள். அதுவரை இந்த அணியின் மகாசொதப்பலான ஆட்டங்களை, அரசு ஊழியர் போன்ற நிரந்தரத்தன்மையை, தொடர் தோல்விகளை நாம் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரு பிணத்தை நடுவீட்டில் வைத்து உறவினர் வருகைக்காக நாட்கணக்காய் காத்திருப்பது போல் உள்ளது இது. கடவுளே என்ன சோதனை இது

கருத்துகள்

சேக்காளி இவ்வாறு கூறியுள்ளார்…
ஏனிந்த கொலைவெறி. சரி பரவாயில்லை.ஒன்றும் ஆகப்போவது இல்லை என்றாலும் ஒரு சுவராசியத்திற்காக சொல்லுங்களேன்.என்னென்ன மாற்றங்கள் செய்தால் இந்திய அணி பலமான அணியாக விளங்கும்?
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
தோனி, ஸ்ரீனிவாசன் இருவரும் நீங்க வேண்டும். கராறான ஆட்கள் வர வேண்டும். அது இப்போதைக்கு நடக்காது - பழைய அரசுருதீன் அணி போல் ஆகி விட்டது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...