தோனிக்கு ஸ்ரீனிவாசனுடன் உள்ள அணுக்கம், அவரது சிமிண்ட் கம்பெனியில்
தோனியின் பங்கு மற்றும் சூப்பர் கிங்ஸ் தலைமை காரணமாய் இந்திய கிரிக்கெட் ஒரு எலிப்பொறியில்
மாட்டி இருக்கிறது. தொடர்ந்து நான்கு வெளிநாடுகளில் நாம் படுதோல்வி
அடைந்திருக்கிறோம். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் இதற்கு முன்
பெரும் மாற்றங்களை கொண்டு வந்திருக்கும். எந்த அணியும் இந்தளவுக்கு தோல்விகளை
பொறுக்காது. வங்கதேசம் ஆசியக்கோப்பையின் நடுவில் பாதிக்கு மேல் வீர்ர்களை
மாற்றியது. ஒரு ஆட்டம் தோற்றாலே பாகிஸ்தான் வாரியம் மொத்த அணியையும் தூக்கி
கடாசும். ஆனால் இந்திய அணிக்கு மட்டும் ஒரு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த
உலகக்கோப்பை வரை எவ்வளவு ஆட்டங்களை நீங்கள் இழக்கலாம், நாங்கள் யாரையும் மாற்ற
மாட்டோம் என்று. ஏனென்றால் இங்கே பணம் தான் முக்கியம். வென்றாலும் தோற்றாலும் பணம்
குவிகிறது. பின் இருக்கவே இருக்கிறது ஐ.பி.எல். அடுத்த உலக்க் கோப்பையில் நாம்
கால் இறுதியை தாண்டப் போவதில்லை (சூதாட்டக்கார்ர்கள் நினைத்தால் ஒழிய). தோற்றுத்
திரும்பும் தோனிக்கு இன்னும் ஆறு மாதங்கள் வழங்கப்படும். அப்போது இங்கு மே.இ
தீவுகள், நியூசிலாந்து போன்று சோனி அணிகள் அழைக்கப்பட்டு சுழலும் ஆடுதளங்களில்
தோற்கடிக்கப்படுவார்கள். இதன் மூலம் தோனியின் பெயர் கொஞ்சம் காப்பாற்றப்படும்.
அதன் பிற்கு இந்தியா ஒரு சிரம்மான வெளிநாட்டு பயணம் போவதற்கு சில வாரங்கள் முன்
தோனி ஓய்வு பெறுவார். சச்சினைப் போல அவருக்கு ஏதாவது ஒரு சப்பை அணியை இந்தியாவில்
தோற்கடிக்க வைத்து அந்த தருணத்தில் பிரம்மாண்டமான farewell கொடுப்பார்கள்.
அதுவரை இந்த அணியின் மகாசொதப்பலான ஆட்டங்களை, அரசு ஊழியர் போன்ற நிரந்தரத்தன்மையை,
தொடர் தோல்விகளை நாம் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரு பிணத்தை நடுவீட்டில்
வைத்து உறவினர் வருகைக்காக நாட்கணக்காய் காத்திருப்பது போல் உள்ளது இது. கடவுளே
என்ன சோதனை இது
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

Comments