முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாயைத் துரத்தும் முயல்


நிஷி எனு முயல் மற்றும் ஷிக்கி எனும் பூனை

முயல் நாயை துரத்துவதை பார்த்திருக்கிறீர்களா? என் வீட்டில் நடக்கிறது.
மனைவி கறிக்கடையில் வைத்திருந்த ஒரு முயல்குட்டியை இரக்கத்தினால் வீட்டிற்கு வாங்கி வந்தாள். மூன்று மாதம் வயதிருக்கும். வீட்டில் நாய் இருப்பதால் சின்னதாய் ஒரு பயம் எங்களுக்கு இருந்தது. ஆனால் முயலுக்கு இல்லை. அது வந்த அடுத்த நாளே நாயை தன் தாயாக பாவிக்க துவங்கி விட்டது.

 நாய் எங்கு போனாலும் கூடவே போகும். நக்கிக் கொடுக்கும். மூக்கை பின்புறத்தை முகரும். நாய்க்கும் அபார பொறுமை. பின்னர் ஒருமுறை நாய்க்கு பிஸ்கட் கொடுத்தேன். முயல் போய் அதன் வாயில் இருந்து பிஸ்கட்டை பறித்தது. நாய்க்கு கடும் கோபம். ஆனாலும் கடிப்பது போல் பாவனை செய்து துரத்தி விட்டது. பிறகு அது நாயை தூங்க விடாமல் செய்தது. நாய் தூங்கினால் அங்கு போய் மூக்கை நுகரும். நாய் எழுந்து வேறிடம் போகும். அங்கு போய் தொந்தரவு பண்ணும். நாலைந்து முறை தொடர்ந்து நடந்த பின் நாய் ரொம்ப எரிச்சலாகி உறும ஆரம்பித்தது. ஆனாலும் கடிக்கவில்லை. நாங்கள் தான் அதன் அவஸ்தை பொறுக்காமல் நாயைத் தூக்கி சோபாவில் தூங்க வைத்தோம்.
இந்த முயலுக்கு ரொம்ப இடம் கொடுத்து விட்டோம் என நாய்க்கு புரிந்து விட்டது. இப்போதெல்லாம் முன்பு போல் அது முயலிடம் குழைவதில்லை. கௌரவமாகத் தான் இருக்கிறது. முயலோ விடுவதில்லை. நாயின் கால்களுக்கிடையிலேயே ஓடிக் கொண்டிருக்கிறது.
நான் காலை எழுந்ததும் நாய் என்னை வரவேற்கும் விதமாக தன் கீக்கீ பொம்மையை எடுத்து வாயால் அழுத்தி ஆரவாரமாய் சத்தம் எழுப்பும். இன்று நாய் அப்படி செய்து முடித்ததும் முயல் வெளியே வந்து பார்த்தது. பிறகு ஓடிப் போய் கீக்கீ பொம்மை பக்கமாய் நின்று என்ன செய்வது என முழித்தது. நாய் தன் சாப்பாட்டு பக்கமாய் பூனைகள் போனால் அப்படி ஆவேசம் வந்தது போல் துரத்தும். ஆனால் முயலோ அசட்டையாய் நாய் சாப்பாட்டை உட்கார்ந்து மெல்லுகிறது. நாயும் போகட்டும் போ என அமைதியாய் பார்க்கிறது.
ஏற்கனவே இரண்டு பூனைகள் உண்டு. அவை முயலை ஜாதிபிரஷ்டம் செய்து விட்டன. பக்கத்தில் போனால் சீறுகின்றன. இதைப் பார்த்தால் வேறு அறைக்குள் சென்று விடுகின்றன. இதனால் முயலும் நாயைத் தான் எல்லாவற்றுக்கும் நம்பி இருக்கிறது. நாய் நடக்கும் போது கூடவே சென்று ஏதோ புற்தரையில் இரை தேடுவது போல் அது நடப்பது காண தாய்க்கோழியுடன் நடக்கும் கோழிக்குஞ்சைப் போல் உள்ளது.
நாய் முயலை வேட்டையாடும் என யார் சொன்னது? இருக்கிற இடம் பொறுத்து தலைகீழாகவும் ஆகும்.

கருத்துகள்

சர்வோத்தமன் சடகோபன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஜீனோ, இரண்டு பூனைகள் மற்றும் ஒரு முயல் வாழும் வீட்டில் அபிலாஷூம் அவரது துணைவியாரும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...