முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாயைத் துரத்தும் முயல்


நிஷி எனு முயல் மற்றும் ஷிக்கி எனும் பூனை

முயல் நாயை துரத்துவதை பார்த்திருக்கிறீர்களா? என் வீட்டில் நடக்கிறது.
மனைவி கறிக்கடையில் வைத்திருந்த ஒரு முயல்குட்டியை இரக்கத்தினால் வீட்டிற்கு வாங்கி வந்தாள். மூன்று மாதம் வயதிருக்கும். வீட்டில் நாய் இருப்பதால் சின்னதாய் ஒரு பயம் எங்களுக்கு இருந்தது. ஆனால் முயலுக்கு இல்லை. அது வந்த அடுத்த நாளே நாயை தன் தாயாக பாவிக்க துவங்கி விட்டது.

 நாய் எங்கு போனாலும் கூடவே போகும். நக்கிக் கொடுக்கும். மூக்கை பின்புறத்தை முகரும். நாய்க்கும் அபார பொறுமை. பின்னர் ஒருமுறை நாய்க்கு பிஸ்கட் கொடுத்தேன். முயல் போய் அதன் வாயில் இருந்து பிஸ்கட்டை பறித்தது. நாய்க்கு கடும் கோபம். ஆனாலும் கடிப்பது போல் பாவனை செய்து துரத்தி விட்டது. பிறகு அது நாயை தூங்க விடாமல் செய்தது. நாய் தூங்கினால் அங்கு போய் மூக்கை நுகரும். நாய் எழுந்து வேறிடம் போகும். அங்கு போய் தொந்தரவு பண்ணும். நாலைந்து முறை தொடர்ந்து நடந்த பின் நாய் ரொம்ப எரிச்சலாகி உறும ஆரம்பித்தது. ஆனாலும் கடிக்கவில்லை. நாங்கள் தான் அதன் அவஸ்தை பொறுக்காமல் நாயைத் தூக்கி சோபாவில் தூங்க வைத்தோம்.
இந்த முயலுக்கு ரொம்ப இடம் கொடுத்து விட்டோம் என நாய்க்கு புரிந்து விட்டது. இப்போதெல்லாம் முன்பு போல் அது முயலிடம் குழைவதில்லை. கௌரவமாகத் தான் இருக்கிறது. முயலோ விடுவதில்லை. நாயின் கால்களுக்கிடையிலேயே ஓடிக் கொண்டிருக்கிறது.
நான் காலை எழுந்ததும் நாய் என்னை வரவேற்கும் விதமாக தன் கீக்கீ பொம்மையை எடுத்து வாயால் அழுத்தி ஆரவாரமாய் சத்தம் எழுப்பும். இன்று நாய் அப்படி செய்து முடித்ததும் முயல் வெளியே வந்து பார்த்தது. பிறகு ஓடிப் போய் கீக்கீ பொம்மை பக்கமாய் நின்று என்ன செய்வது என முழித்தது. நாய் தன் சாப்பாட்டு பக்கமாய் பூனைகள் போனால் அப்படி ஆவேசம் வந்தது போல் துரத்தும். ஆனால் முயலோ அசட்டையாய் நாய் சாப்பாட்டை உட்கார்ந்து மெல்லுகிறது. நாயும் போகட்டும் போ என அமைதியாய் பார்க்கிறது.
ஏற்கனவே இரண்டு பூனைகள் உண்டு. அவை முயலை ஜாதிபிரஷ்டம் செய்து விட்டன. பக்கத்தில் போனால் சீறுகின்றன. இதைப் பார்த்தால் வேறு அறைக்குள் சென்று விடுகின்றன. இதனால் முயலும் நாயைத் தான் எல்லாவற்றுக்கும் நம்பி இருக்கிறது. நாய் நடக்கும் போது கூடவே சென்று ஏதோ புற்தரையில் இரை தேடுவது போல் அது நடப்பது காண தாய்க்கோழியுடன் நடக்கும் கோழிக்குஞ்சைப் போல் உள்ளது.
நாய் முயலை வேட்டையாடும் என யார் சொன்னது? இருக்கிற இடம் பொறுத்து தலைகீழாகவும் ஆகும்.

கருத்துகள்

சர்வோத்தமன் சடகோபன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஜீனோ, இரண்டு பூனைகள் மற்றும் ஒரு முயல் வாழும் வீட்டில் அபிலாஷூம் அவரது துணைவியாரும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.