முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மீண்டும் ஒரு அட்டகாச ஐ.பி.எல் திரில்லர்




நேற்றைய மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் ஐ.பி.எல் வரலாற்றின் ஆக திரில்லிங்கான ஒன்று. ஐ.பி.எல்லில் சரவெடி போல் நான்கும் ஆறும் பறப்பதால் முன்பு போல் அது நம் இதயத்துடிப்பை எகிற வைப்பதில்லை. நேற்றைய ஆட்டத்தில் நெட் ரன்ரேட்டை உயர்த்துவதற்காக மும்பையினர் 190 இலக்கை 14.3 ஓவர்களில் அடிக்க வேண்டி வந்தது. அப்போது தான் அவர்கள் அரை இறுதிக்குள் போக முடியும். அசாத்தியம் என நாம் நினைத்த இலக்கை அடைய முயன்றதனால் தான் இதுவரை இல்லாத சாகச உணர்வை நேற்றைய ஆட்டம் அளித்தது. எனக்கு முன்னர் வங்கதேச டாக்காவில் இந்தியா பாக் இறுதிப் போட்டியில் இந்திய முண்ணூறுக்கு மேல் விரட்டி சென்று, இறுதி ஓவரில் ஸ்ரீனாத் கேட்சை எதிரணியினர் டென்ஷனில் தவறவிட்டு, இறுதி சக்லைன் பந்தில் கனிஷ்கர் நான்கு அடித்தது நினைவு வந்தது. அன்று நான் கொண்டாடியது போல் பின்னெப்போதும் செய்ததில்லை. பின்னர் 300 என்ன 400ஐ விரட்டுவது கூட கொசு அடிப்பது போல் ஆகி விட்டது. இது போன்ற அசாத்தியங்கள் தான் இப்போது நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.


மற்றொரு விசயம் 190ஐ பதினைந்து ஓவருக்குள் அடிக்க முடியுமென்றால் இதே அணி 160ஐ 20 ஓவருக்குள் அடிக்க ஏன் மூச்சு வாங்குகிறது என்ற கேள்வி. T20 ஆட்டத்தை திட்டமிடாமல் ஒரு வேகத்தில் ஆடினால் தான் எடுபடும். அப்படித் தன் முதல் ஐ.பி.எல் ஆட்டத்தில் பிரெண்டன் மக்கெல்லம் அடித்தார். ஆனால் பின்னர் இந்த ஆட்ட சுதந்திரம் காணாமல் போய் விட்டது. 20 ஓவர்களை 4ஆக பிரித்துக் கொண்டு அதற்கு ஏற்ற வீரர்களைக் கொண்டு தேவையான வேகத்தில் ஆடுவது இப்போதைய பாணி. அதாவது 5 முதல் 12வது ஓவர் வரை அடித்தாட பந்துகள் இருந்தாலும் அணிகள் ஒற்றை ஓட்டம் எடுக்கவே பார்க்கும். இதனால் தான் 160 வழக்கமான இலட்சிய ஸ்கோராய் மாறியது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் இந்த ஏழு ஓவர்களும் ரிஸ்க் எடுத்து அடித்தாடினார்கள். 7 ஓவர்களில் 40க்கு பதில் 70 அடித்தார்கள். கூடுதல் 30 ஓட்டங்கள் திட்டமிட்ட ஆட்டத்தினால் அணிகள் சராசரியாக எவ்வளவு இழக்கிறார்கள் என்பதை காட்டியது. இன்னும் சுதந்திரமாக ஆடினால் அணிகளால் எளிதில் 220-240 அடிக்க முடியும். நேற்றைய ஆட்டத்தை மும்பை முழு ஓவர்களும் ஆடியிருந்தால் 250 அடித்திருப்பார்களே. அப்படியே விக்கெட்டுக்ள் விழுந்தால் 200இல் முடியும். 160க்கு அது பரவாயில்லை தானே. மேலும் T20 ஆட்டத்தையும் நம்மாட்கள் ரிஸ்க் எடுக்காமல் ஆட நினைப்பதால் அது கூட வளவளவென ஆகி வருகிறது. நேற்றைய ஆட்டம் விதிவிலக்கு.

14.3 ஓவர்களில் ஒரு எண் குறைவாக மும்பை அணி எடுத்தது. தோற்று விட்டோமே என அம்பத்தி ராயுடு முட்டியிட்டு அழுதார். ராஜஸ்தான் அணியினர் கொண்டாடினர். ஆனால் அவர்கள் ஒரு நான்கோ ஆறோ அடித்தால் அரை இறுதிக்கு செல்லலாம் என நடுவர்கள் கூற குழப்பம் ஏற்பட்டது. என்னவாயிற்று என்றால் ஸ்கோர் டை ஆகி விட்டது. ஒருவேளை இறுதி பந்தில் ஒன்றுக்கு பதில் இரண்டு ரன்கள் ஓடி இருந்தால் நெட் ரன்ரேட் ராஜஸ்தானை விட குறைந்திருக்கும். ஆனால் டை ஆனதால் ஒரு நான்கு அல்லது ஆறு அடிக்கும் வாய்ப்பு மும்பைக்கு கிடைத்தது. அடுத்த வந்த தாரே புல் டாஸ் பந்தை ஆறுக்கு அடித்து சவாலில் வென்றார். இந்த எதிர்பாராத திருப்பம் ஒரு அபாரமான டிராமாவை தோற்றுவித்தது. இது போல் ஒருநாள் ஆட்டங்களிலும் பண்ணினால் எப்படி இருக்கும் என தோன்றியது.

அதாவது ஒரு நாள் ஆட்டங்களில் முக்கிய சிக்கல் என்ன நடக்க போகிறது என நம்மால் ஊகிக்க முடியும் என்பது. ஒரு அணி ஆட ஆரம்பித்த 20 ஓவர்களுக்குள் அதன் தலைவிதி நமக்கு தெரியும். ஒரு 250 இலக்கை விரட்டுகிறார்கள் என்றால அதிக ஆபத்தின்றி ஒற்றை ரெட்டை ஓட்டங்கள் ஓடி ஆட்டத்தை சோர்வடைய வைப்பார்கள். 300ஐ கூட இன்று விரட்ட முடியும் என்பதால் நமக்கு அலுப்பேற்படுகிறது. இதை சரி செய்ய ஒரு வழி ஆட்டத்தில் யார் வெல்ல போகிறார்கள் என்பது இறுதி வரை நமக்கோ வீரர்களுக்கோ தெரியக் கூடாது. அதற்கு இலக்கை வெளிப்படையாக வைக்காமல் சிக்கலாக ஆக்க வேண்டும். நேற்றைய ஆட்டத்தில் போல இறுதி ஓவரில் இவ்வளவு எடுத்தால் வெற்றி என கணக்கிட்டு பிரம்மாண்ட திரையில் காட்ட வேண்டும். அப்போது தான் நமக்கும் வீரர்களுக்கும் இது தெரிய வேண்டும். இதற்கு ஒரு வழி ஆட்டத்தை பகுதிகளாய் பிரித்து அவ்வப்போது ஒரு அணி எடுக்கும் ரன்ரேட்டை அடுத்த அணி அதே கட்டத்தில் எடுக்கிறதா என பார்த்து அதற்கு ஏற்றாற் போல் பாயிண்ட்ஸ் கொடுப்பது. உதாரணமாய் ஒரு அணி 280 அடிக்கிறது. இதற்கு முதல் 10 ஓவர்களில் 80 ஓட்டங்கள் எடுக்கிறது. அதையே அடுத்து வரும் அணியும் அதே ஓவர்களில் அடிக்க வேண்டும். அல்லாவிட்டால் பாயிண்ட்ஸ் கிடைக்காது. அது போல் ஒவ்வொரு பத்து ஓவர்களுக்கும் ஒரு தனி இலக்கு . 50வது ஓவரில் இதுவரையில் உள்ள பாயிண்ட்களை கணக்கிலெடுத்தும், இறுதி ஓவரில் முந்தைய அணி அடித்த ஓட்டங்களைக் கொண்டும் ஒரு இலக்கை துரத்தும் அணிக்கும் கொடுக்க வேண்டும். இம்முறையில் 50 ஓவர்களும் பார்க்க ஐந்து T20 போல் படுவேக திரில்லராக இருக்கும். முதலில் ஆடுகிற அணிக்கு அனுகூலம் கிடைக்காமல் இருக்க 50 ஓவர்களை இரண்டாக பிரிக்க வேண்டும். ஒவ்வொரு அணி 25 ஓவர்களை பாதி பாதியாய் ஆடலாம். முதலில் மட்டையாடிய அணி இரண்டாவது முறை இரண்டாவது ஆக தான் மட்டையாட முடியும். இதன் மூலம் டாஸின் குழப்படிகளையும் இல்லாமல் ஆக்கலாம்.
இப்போதுள்ள சர்வதேச ஆட்டங்கள் பள்ளி ஆசிரியர் கரும்பலகையில் படம் வரைந்து பாலியல் பற்றி விளக்குவது போல் பயங்கர கொட்டாவித்தனமாக உள்ளது. இதை மாற்ற நேற்றைய ஆட்டம் ஒரு நல்ல பாடம்.

கருத்துகள்

சேக்காளி இவ்வாறு கூறியுள்ளார்…
//இதுவரை இல்லாத சாகச உணர்வை நேற்றைய ஆட்டம் அளித்தது//
அந்த ஆட்டத்தில் ஏதோ உள்குத்து இருக்கிறதாகவே தோன்றுகிறது.இறுதி ஆட்டம் பஞ்சாப் - சென்னை காரணம் நடக்குமிடம் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூரு.
கன்னிமரா லெண்டிங் லைப்ரரி இவ்வாறு கூறியுள்ளார்…
ஃபாக்னர் கடைசிப் பந்தை ஏன் "வைடாக" போடவில்லை.வைட் போட்டு தன் அணியை எளிதாக ப்ளேஆப்ஸ்க்கு கொண்டு போயிருக்கலாம்.இந்த ஆட்டத்திலே உச்சகட்ட சாத்தியமான "வைட்" ஏன் போடப்படவில்லை.
கன்னிமரா லெண்டிங் லைப்ரரி இவ்வாறு கூறியுள்ளார்…
அடுத்தப் பந்த்தை MI 4 அல்லது 6 அடித்தால்தான் ப்ளேஆப்ஸ்க்கு செல்லமுடியுமென்ற நிலை.ஒரு ரன் எடுத்தால் வீட்டுக்கு என்கிற நிலையில் ஃபாக்னர் ஒரு "வைடை" போட்டு எளிதாக தன் அணியை கொண்டு சென்றிருக்கலாம் ஏன் செய்யவில்லை.நாட்டுக்காக விளையாடும்போது இப்படி செய்வார்களா? இதில் வியாபாரம்தான் ஓங்கியிருக்கிறது.பார்வையாலனை உற்சாகப் படித்துவதற்காகத்தான் ஆடுகிறார்கள்.இதை ஆஹாவென்று கொண்டாடுவது என்னமோ நெருடலாயிருக்கிறது.
சேக்காளி இவ்வாறு கூறியுள்ளார்…
நினைத்தது போல் நடக்கவில்லை என்பதால் ஏமாற்றம்.வருத்தமில்லை.அடுத்த ஐபிஎல் லை சந்தேகிக்காமல் காணும் மனநிலை வந்திருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...