முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

CM Cell: ஆக்கிரமிப்பும் அதன் சிக்கல்களும்




எங்கள் அபார்ட்மெண்டில் ஒருவர் அத்துமீறி நுழைந்து சதா அமர்ந்திருப்பார். எவ்வளவு கூறியும் போக மாட்டார். எங்களையே மிரட்டுவார். அப்பார்ட்மெண்ட் வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்து கட்டபஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார். அவருடைய குடிகார நண்பர்கள் சதா பத்து பேர் வேறு அவரை பார்க்க வந்து போய் கொண்டிருப்பார்கள். பக்கத்து கோயிலில் விழா நடந்தால் எங்கள் அப்பார்ட்மெண்டை தண்ணீர், சமையல் என அனைத்துக்கும் பயன்படுத்தி கலீஜாக்குவார்கள். அது போக விழா முடிந்த்தும் இவர்களுக்கிடையே அடிதடி எங்கள் அப்பார்ட்மெண்ட் வளாகத்திலேயே நடக்கும்.
இந்த ஆளுக்கு எதிராக cm cellஇல் (http://cmcell.tn.gov.in/) புகார் செய்தோம். எனக்கு நம்பிக்கை  இருக்கவில்லை. ஏதோ முதல்வன் பட ஸ்டைல் ஸ்டண்ட் என நினைத்தேன். ஆனால் ஒரு மாதம் கழித்து இன்று ஒரு போலீஸ்காரர் போன் செய்து உங்கள் புகார் வந்தது, நாங்கள் வந்து நடவடிக்கை எடுக்கிறோம் என்றார். வியப்பாகி விட்டது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு வாட்ச்மேனை குடும்பமாக குடியிருத்தினோம். அதில் இருந்து கட்டபஞ்சாயத்துகாரர் அவ்வளவாய் வருவதில்லை. ஆனால் வாட்ச்மேன் குடும்பத்தை எப்படி வெளியே அனுப்புவது என புது பிரச்சனை ஆரம்பித்துள்ளது. வாட்ச்மேன் வேலையே செய்யாமல் இடத்தை மட்டும் ஆக்கிரமித்து வருகிறார். அதனால் போலீஸ்காரரிடம் நடவடிக்கை ஏதும் இப்போதைக்கு தேவையில்லை என்று கூறி விட்டோம். புதுபிரச்சனையில் தான் எங்கள் கவனம்.
ஒன்று, இந்த இணைய புகார் மையம் வேலை செய்கிறது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. இது பாராட்டுக்குரியதும் கூட. ஒரு புகார் அளிக்க காவல்நிலையம் வரை போக வேண்டியதில்லை என்பதும், இணையவழி புகார் நன்றாக வேலை செய்கிறது என்பதும் நல்ல விசயம். 
இரண்டு, இதில் நகைமுரண் என்னவென்றால் இந்த அத்துமீறீ ஆக்கிரமித்து கட்டபஞ்சாயத்து பண்ணுகிறவர் ஒரு அதிமுக ஆள். தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்த முறை அதிமுகவின் (ஆதம்பாக்கம்) கவுன்சிலர் வந்த போது இவரைப்பற்றி புகார் சொன்னோம். தேர்தல் முடிகிற வரை ஒன்றும் பண்ண முடியாது என்று விட்டார். அதிமுகவுக்குள் உள்ள ரௌடிகளைப் பற்றி புகார் சொல்ல ஒரு தனி CM cell பிரிவு வேண்டும் போல. அதற்கு ADMK CM cell என்று பெயர் வைக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...