Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இந்து முன்னணியினர் கலவரமும் அழிவு அரசியலும்




பூந்தமல்லி ஹைவேயில் நேற்று இந்து முன்னணியினர் நிகழ்த்திய வன்முறை உ.பி, குஜராத், அயோத்தியா வகை இந்துத்துவாவை இங்கும் முன்னெடுப்பதற்கான ஆரம்ப முயற்சி. சாலையில் போன பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தாக்கப்பட்டனர். போலீசும் அடிக்கு தப்பவில்லை. இன்னொரு பக்கம் தம் பிள்ளைகளுக்கு ஏதாவது ஆகி விடுமோ என பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களுக்கு படையெடுத்தனர். போக்குவரத்து நீண்ட நேரம் ஸ்தம்பித்தது, கீழ்ப்பாக்கத்தில் ஒரு பேருந்து மீது கல் வீசி தாக்கியதால் பயணிகள் பயந்து ஓடினர். ஒரு தேவாலயம் மீது தாக்குதல் நடந்தது. மொத்தம் 9 பேருந்துகள் மற்றும் 10 கார்கள் தாக்கப்பட்டன. ஆனால் இந்து முன்னணியினரால் எதிர்பார்த்த அளவு தாக்கத்தை இவ்விசயத்தை வைத்து ஏற்படுத்த முடியவில்லை.

முக்கிய காரணம் இது போன்ற கட்சி நிர்வாகிகளின் கொலைகள் (கழகமோ இந்து முன்னணியோ பிற ஜாதி கட்சிகளோ) அரசியல் கொலைகளோ கொள்கை முரண்பாட்டு கொலைகளோ அல்ல என மக்கள் அறிவர். பெரும்பாலும் இக்கொலைகள் ரியல் எஸ்டேட் மோதல், வணிக தகராறுகள், உட்கட்சி மோதல்கள், போட்டி, பொறாமை இவற்றினால் தான் நடக்கின்றன. பாடி சுரேஷ்குமாரை எதிர்கட்சியினர் கொன்று விட்டார்கள் என்பது நம்பத்தகுந்ததாக இல்லை. போலீஸ் விசாரித்து கண்டுபிடிக்க நேரம் அளிக்க வேண்டும். ஆனால் மரணம் நடந்த அடுத்த நாளே குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை என போலீஸை குற்றம் சாட்டி பொதுமக்களை தாக்குவது கீழ்த்தரமான அரசியல்.
தம் நிர்வாகிகள் ஏன் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள் என விசனிக்கும் பா.ஜ.க ஏன் நன்கு படித்து ஒரு மருத்துவரோ ஆசிரியரோ போன்றிருப்பவர்களை நிர்வாகிகளாக்குவது இல்லை. மணல் மாபியாக்களும், கிரானைட் கொள்ளையர்களும் ரியல் எஸ்டேட் ரௌடிகளும் நிர்வாகிகள் என்றால் பரஸ்பரம் வெட்டித் தான் சாவார்கள். தமிழகத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஏன் ரௌடிகளால் தாக்கப்படுவதில்லை என நீங்கள் யோசித்ததுண்டா? பேய்கள் அரசாண்டால்…?

ஏதோ இந்து அமைப்பு தலைவர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள் எனும் சித்திரத்தை உருவாக்க பா.ஜ.க இங்கு கடுமையாக முயன்று வருகிறது. ஆனால் பிச்சைக்காரனிடம் இருந்து யாராவது பிக் பாக்கெட் அடிப்பார்களா?

ஏற்கனவே தமிழ் நாட்டில் கையேந்தும் ஒரு கட்சியை எதற்கு மெனக்கெட்டு பலவீனப்படுத்த வேண்டும்? இது டீக்கடையில் பன் சாப்பிடுகிற சாமான்யனும் அறிந்த சேதி. பிரிவினைவாதம், மத துவேசம் கொண்டு பா.ஜ.க தமிழகத்தில் வளர முடியாது. அப்படி ஒரு வரலாறு நமக்கில்லை. அதற்கு அவர்கள் மக்கள் தொண்டு மற்றும் போராட்ட அரசியலில் ஈடுபட வேண்டும். உதாரணமாய், மின்சார தட்டுப்பாட்டின் பின் மிகப்பெரிய ஊழல் உள்ளது. அதை வெளிப்படுத்தி போராடலாம். அது போல் பெண்கள் அமைப்புகளை பரவலாக தமிழகம் பூரா உருவாக்கி வலுப்படுத்தி அவர்களை கொண்டு டாஸ்மாக்குக்கு எதிராய் தொடர் போராட்டங்கள் நடத்தலாம். எவ்வளவோ செய்யலாம். ஆனால் அழிவு அரசியல் அவர்களையே அழிக்கும் அன்றி வளர்க்காது.

சென்னையை ஸ்தம்பிக்கும் வகையிலான இரண்டாவது போராட்டம் இது. முதலில் அமெரிக்க எம்பஸிக்கு எதிரான இஸ்லாமியர் போராட்டம் நடக்கப் போவது பற்றி என் நண்பர்கள் சிலருக்கு கூட முன்கூட்டி சேதி தெரிந்திருந்தது. ஆனால் போலீஸ் முற்றிலும் தயாரற்றிருந்தது. சொதப்பியது. நேற்று நடந்த கலவரமும் அது போன்ற போலீஸ் மற்றும் உளவுத்துறையின் போதாமையினால் நடந்த ஒன்று தான். தமிழக உளவுத்துறை கட்சி பிரமுகர்களை உளவுப்பார்ப்பது தவிர வேறென்ன உருப்படியாய் செய்கிறது? அவர்கள் ஒவ்வொரு கட்சிக்குள்ளும், குறிப்பாய் கலவர கட்சிகளான சில ஜாதிக் கட்சிகளுக்குள், ஊடுருவ வேண்டும். கலவரங்கள் திட்டமிட்டு தான் நடத்தப்படுகின்றன. அதற்கு முந்தின நாளே பொறுப்பிலுள்ள கட்சியின் நண்டுசிண்டுகளை தூக்கி உள்ளே போட்டு விட வேண்டும். கலவரங்கள் முடிந்த பின் அலங்காரமாய் ஆயிரக்கணக்கான போலீஸ்காரர்களை சாலையில் நிறுத்தி வீணடிக்க அவசியமில்லை. இனியும் தர்மபுரியில் நிகழ்ந்தது போல் குடிசைகள் கொளுத்தப்பட்டு அப்பாவி மக்கள் கொள்ளையடிக்கப்படுவதை தவிர்க்க வேறு வழியில்லை.

தமிழகத்தில் நடந்து வரும் கலவரங்களுக்கும் மக்களுக்கு ஏற்பட்டு வரும் பீதி உணர்வுக்கும் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் போதாமை தான் காரணம். மாணவர்கள் போராடினால் குண்டாந்தடியாய் அடித்து இழுத்து போகும் போலீசார் கட்சி குண்டர்கள் நடத்தும் கொலைகார போராட்டங்களை ஏன் குழந்தைக்கு நேப்பீஸ் மாற்றுகிற மென்மையுடன் கையாள்கிறது என்கிற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது.

Comments

சீனு said…
//பூந்தமல்லி ஹைவேயில் நேற்று இந்து முன்னணியினர் நிகழ்த்திய வன்முறை//

//முதலில் அமெரிக்க எம்பஸிக்கு எதிரான இஸ்லாமியர் போராட்டம்//

முன்னது வன்முறை. பின்னது போராட்டம். திஸ் இஸ் கால்டு செக்குலரிஸம்... :)
இஸ்லாமியர் பொதுமக்களை தாக்கவோ, கோயிலுக்கு கல்லெறியவோ இல்லை. பஸ்ஸுக்கு கல்லெறிந்து பயணிகளை துரத்தவில்லை. பஸ்களுக்கு தீ வைக்கவில்லை. இதையெல்லாம் இந்துமுன்னணியினர் செய்தார்கள். அதனால் இது கலவரம் கூட அல்ல குண்டாயிஸம்
Unknown said…
ஆக்க பாதையில் அரசியல் தேடினால் தமிழகம் அழிந்து விடும் அபிலாஷ்! அதற்காகத்தான் கட்சிகள் அரும்பாடு பட்டு கலவரங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு இடையூறு செய்து அதில் கட்சியின் உள்கட்சி பூசல், எதிர்க்கட்சி குளிர் காய நினைக்கின்றனர்..

தேர்தலின் போது எதாவது இலவசம் கொடுத்தால் போதுமென்ற நினைப்பு!!மக்கள் மாறிவிட்டனர் என்பதை உணரவே மாட்டார்கள் இந்த மாக்கள்!

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...