Skip to main content

ஹெமிங்வேயின் தலைப்புகள்

குத்துச்சண்டை பழகும் ஹெமிங்வே

ஹெமிங்வே மிக அழகான கவித்துவமான தலைப்புகள் இடக் கூடியவர். எனக்கு பிரியமானவை The Sun also Rises, Men without Women, For whom the Bell Tolls, Winner Take Nothing ஆகியவை. The Sun also Rises எனக்கு மிக மிக பிடித்தமான நாவல். வாழ்க்கையை ஒரு தனித்துவமான விதிகள் கொண்ட புதிரான விளையாட்டாக சித்தரித்திருப்பார். இந்த விளையாட்டை கற்று திறமையாக ஆடுகிறவன் வாழ்க்கையை கொண்டாடுகிறான், ரசிக்கிறான், ஒருவேளை வெல்கிறான். காளைச்சண்டை, காதல், செக்ஸ், எழுத்து எல்லாமே இந்த “தீராத விளையாட்டு” தான்.


இத்தலைப்பை அவர் விவிலியத்தில் இருந்து எடுக்கிறார். என்னதான் நடந்தாலும், மாபெரும் துயரங்கள், அழிவுகள் நிகழ்ந்தாலும் அடுத்த நாள் அழகாக சூரியன் உதிக்கிறான் என்பது அவ்வரி. விவிலிய ஆங்கிலம் என்பதால் தான் “கூட” எனும் பொருளில் also வருகிறது. நவீன ஆங்கிலத்தில் இவ்வாக்கியம் The Sun Rises Too என இருக்க வேண்டும். நாவலை படிக்கிறவர்களுக்கு இது எவ்வளவு பொருத்தமான தலைப்பு என புரியும். அதாவது விவிலிய காலத்தில் என்னதான் அன்றாட துயரங்கள் இருந்தாலும் அவற்றை கடந்த ஒரு நிரந்தர இயக்கம் உள்ளது, அது தான் கடவுள் என புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஹெமிங்வேயின் காலத்தில் கடவுள் இறந்து விடுகிறார். தேவாலயத்தில் ஒரு சடங்காக மட்டும் எஞ்சி விடுகிறார். ஆனாலும் மனித பேரழிவுகளை கடந்த ஒரு மகாசம்பவமாக வாழ்வு அதற்கு வெளியே அப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. என்ன அதற்கு அர்த்தம் கற்பிக்க முடியாது. ஏன் போரில் மக்கள் மடிகிறார்கள் என்பதற்கு அர்த்தம் காண முடியாது. ஆனால் போர் ஒரு பக்கம் நொதிக்கும் போதும் இன்னொரு பக்கம் வாழ்க்கை நிதானமாக அதன் போக்கில் செல்லும் அபத்தத்தை உணர முடியும். “சூரியனும் உதிக்கத்தானே செய்கிறது” என்பதில் இந்த அபத்தத்தை உணர்ந்தவனின் நக்கல் உள்ளது.

For whom the Bell Tolls இன்னொரு அழகான தலைப்பு. இதை ரெண்டு விதமாக மொழிபெயர்க்கலாம். 1) யாருக்காக மணி ஒலிக்கப்படுகிறது? 2) மணி ஒலிக்கப்படுபவர்களுக்கு. ஆங்கில தலைப்பில் கேள்விக்குறி (?) இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அப்போது whom கேள்விச் சொல்லாக அன்றி pronoun ஆகிறது. இரண்டாவது மொழிபெயர்ப்பே சரி எனக் கூறுவதற்கு இதை ஒரு எளிய ஆதாரம் எனலாம். மேலும் இரண்டாவது தலைப்பில் யார் என்ற கேள்வியை விட, மணி ஒலியினால் உணர்த்தப்படுபவர்களைப் பற்றியது இந்நாவல் எனும் தொனி உள்ளது.

பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த ஆங்கில கவிஞன் ஜான் டன்னின் ஒரு கட்டுரையில் இருந்து தலைப்பை ஹெமிங்வே எடுக்கிறார். இங்கிலாந்தில் யாராவது இறந்தால் தேவாலயத்தில் ஒற்றைமணி அடிப்பார்கள். யார் இறந்தார்கள் என்ற அர்த்தத்தில் ஒருவர் for whom the bell tolls? என கேட்கிறார். டன் அதற்கு யார் தனியாக சாவதில்லை, யார் இறந்தாலும் நம்மில் கொஞ்சமும் தான் சாகிறது என்ற பொருளில் பதில் சொல்கிறார். இது ஒரு ஆன்மீக கட்டுரை. டன்னின் பதிலும் ஆன்மீக விரிவை கோரி வாழ்வின் பதிலை அதில் தேடுவது. மனிதன் இறந்தாலும் இறப்பதில்லை, பிரம்மாண்டத்தில் கலந்து விடுகிறான். அப்படியே ஒரு மனித இழப்பு நடந்தாலும் அது தனித்து இல்லை, அதன் வழி அத்தனை பேரும் தான் எதையோ இழக்கிறோம் என கூறுகிறார் டன். ஆனால் ஹெமிங்வே இந்த தலைப்பை எடுத்தாண்டிருந்தாலும் அவருக்கு டன்னை போல் கடவுள் நம்பிக்கை இல்லை. டன் மனித இழப்பின் பொறுப்பை கடவுள் எனும் பிரம்மாண்ட்த்திடம் விட்டு விடுகிறார். ஆனால் ஹெமிங்வேயால் அது இயலாது. அவர் எப்படி புரிந்து கொள்கிறார்? ஒரு மனிதன் மரிக்கும் போது, சீரழியும் போது அதன் பொறுப்பு, காரணம் அவனை சுற்றி உள்ள அத்தனை மனிதர்களும் தான் என்கிறார். கடவுள் இல்லா உலகில் மனிதன் தனக்கே தான் பொறுப்பாக வேண்டும். அந்த மனிதனை தான் “மணி ஒலிக்கப்படுபவருக்கு” என அழைக்கிறார். கிட்டத்தட்ட ஜான் டன்னின் பொருளில், ஆனால் கொஞ்சம் மாற்றி.

ஹெமிங்வே தன் நாவலில் ஸ்பெயினில் நடக்கும் போரில் மாண்டு போகும் மக்களை பற்றி பேசுகிறார். போரில் அவர்களின் இழப்புக்கு, குற்றங்களுக்கு, இழிவுக்கு யார் காரணம் எனும் கேள்வி வரும் போது ஹெமிங்வே அவர்களே தான் என்கிறார். இப்படி அவர் யோசிப்பதற்கு ஹெமிங்வே ஒரு இருத்தலியல்வாதி என்பதும் காரணம். ஆக இந்நாவலின் தலைப்பின் ஒரு பொருள் இந்த அழிவுக்கெல்லாம் காரணமானவர்களுக்கு என்பது. சாவு மணிக்கு எல்லாருமே காரணம் என்பது.


இன்று ஹெமிங்வேயின் நினைவு தினம். அவருக்கு ஒரு எளிய வாசகனின் சமர்ப்பணம்

Comments

azhagarasan.com said…
Great piece. Calm, condensed, incisive and convincing. Thought of using it for the translation class.

Best regards
Azhagarasan
Very nice dedication. true to the spirit of Hemingway's works. What's your take on Oldman and the sea? கடலும் கிழவனும் or something else?
Manikandan
கடலும் கிழவனும் பற்றி தனியே எழுதுகிறேன். சமீபத்தில் கூட திரும்ப படித்தேன். ஒரு நீண்ட சிறுகதை போல் தோன்றியது. அங்கங்கே ஹெமிங்வேயின் முத்திரையான சித்தரிப்புகளும் நுணுக்கங்களும் உண்டு. குறிப்பாய் கிழவன் கடலில் தன் கைகளுடன் பேசுவது, மீனுடன் பேசுவது, நட்சத்திரங்களை ஏன் மனிதன் வேட்டையாடுவதில்லை என கூறுவது. மார்க்வெஸின் Shipwrecked Sailor நாவலில் இதன் தத்துவ ஆழம் இல்லாவிட்டாலும் இதை விட பிரமாதமாக எழுதப்பட்டது

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...