Skip to main content

பாலகுமாரன்


பாலகுமாரன் எழுதியது வணிக நாவல்கள் என்றாலும் அதில் ஒரு நிதானமும் வாழ்க்கை பற்றின நிறைய அவதானிப்புகளும் இருந்தன. நல்ல புத்தகங்கள் வாழ்க்கையை நெருக்கமாய் நின்று பார்க்கிற உணர்வை தரும். பாலகுமாரன் நாவல்களின் சிறப்பு அவை வெறுமனே விறுவிறுப்பாய் கதை சொல்லி நிற்பதில்லை என்பது. அவரது நாவல்களில் குட்டி அபத்தங்களும் பலவீனங்களும் ஒரு இலக்கிய வாசகனாய் படிக்கையில் புலப்படும். ஆனால் அவர் பொய்யை எழுதவில்லை என்பது தான் அந்நாவல்களின் வலிமை.


எனக்கு அவரது பல நாவல்களின் தலைப்புகளும் கதைகளும் மறந்து விட்டன. ஆனால் உதிரி உதிரியான சம்பவங்கள் நினைவில் உள்ளன. ஒரு நாவலில் நாயகன் சின்ன ஓட்டல் நடத்துவான். தினமும் காலையில் இட்லி வெந்ததும் இரண்டை எடுத்து நெய்யூற்றி அந்த தெருவில் திரியும் பைத்தியக்காரனுக்கு வைப்பான். அவரால் தான் தன் கடை வியாபாரம் அமோகமாய் நடக்கிறது என அவனுக்கு ஒரு நம்பிக்கை. இது இந்திய மனம் பற்றி தரும் சித்திரம் அலாதியானது. அதே போல் இன்னொரு நாவலில் ஒரு கூர்க்கா வருவான். அவன் டீ சாப்பிடும் விதத்தை பற்றி சொல்லுவார். அவன் டீயை சிலாகித்து நேரம் எடுத்து சாப்பிடுவான். அதை படித்த பின் நானும் அது போல் குடிக்க ஆரம்பித்தேன். இது போல் வாழ்க்கை ரசிப்பதற்கான பல விசயங்களை சொல்லித் தருவார். சின்ன வயதில் பாலகுமாரன் வாசிப்பது ஒரு வாழ்க்கை பாடமாகவே எனக்கு தோன்றியது.

“மெர்க்குரி பூக்களில்” என நினைக்கிறேன். தொழிற்சாலையில் வேலை நிறுத்தம். முதலாளி இதை அடக்க குண்டர்களை ஏற்பாடு செய்வார். அதை அறியாமல் வேலைக்கு கிளம்பும் ஒருவன் தெரியாமல் ரௌடி ஒருவனை சைக்கிளில் மோதி விடுவான். அவன் எரிச்சலில் தனது மெல்லிய கத்தி கொண்டு அவனை குத்தி விடுவான். அவனுக்கும் கொல்லும் உத்தேசம் இல்லை, இவனுக்கும் போராடி சாகும் ஆசை இல்லை. ஆனால் சாவு நடந்து விடுகிறது. அவன் மனைவி விதவையாக இது கதையின் போக்கை மாற்றுகிறது. இந்த அசந்தர்ப்பமான அபத்தம் எனக்கு பிடித்திருந்தது. அது போல் இப்பெண்ணுக்கு ஒருவன் தொடர்ந்து உதவுவான். அவள் ஒரு நாள் இரவு ஏதோ தகவல் சொல்ல வீட்டுக்கு வருவான். அவள் தூக்க களைப்புடன் கதவை திறப்பாள். அவளது ஆடை விலகி ஒரு மார்பு வெளியே கிடக்கும். அதை கவனிக்க மாட்டாள். அந்தளவுக்கு அவளுக்கு வாழ்க்கையில் அலுப்பும் அக்கறையின்மையும்.

இன்னொரு நாவலில் திருமணமாகி போகும் பெண் தன் கணவனின் மூளை வளர்ச்சியில்லாத தம்பி பற்றி கூறும் போது அவன் அடிக்கடி தன் அறைக்கு வந்து கால்சராயை கழற்றி விட்டு நிற்கிறான் என கூறுவாள். அவள் நிலைமையை யோசியுங்கள். கோபிக்கவும் முடியாது இரங்கவும் முடியாது.

பாலகுமாரன் உருவாக்கின மனிதர்கள் என்னுடன் வாழ்ந்திருக்கிறார்கள். இன்னும் என் நினைவில் இருட்டில் அசைகிறார்கள். அவருக்கு இன்று பிறந்த நாள். அவரது பல லட்சம் வாசகர்களில் ஒருவனின் நன்றிகளும் அன்பும்.

Comments

Unknown said…
மெர்க்குரி பூக்கள் நாவல் எனக்கு பிடித்த நாவலாகும் ,அவரைப் பற்றிய உங்கள் பதிவு அருமை !
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !


நிச்சயமாய் பாலகுமாரனை தாண்டி வராத 30 வயதை கடந்தவர்கள் எழுத்தின் அழகையும் வாழ்வின் தந்திரத்தையும் உணர முடியாதவர்கள் என்பது உண்மை .
எனக்கும் மிகவும் பிடித்த எழுத்தாளர் பாலகுமாரன். ஒரு கட்டத்தில் ஆன்மீகம் குறித்து எழுத ஆரம்பித்துவிட்டதால்தான் ஒதுங்க ஆரம்பித்தேன். அது தவிர இப்போது அவசர யுகம் வேறு. முன்பு மாதிரி வாசிக்க முடியவில்லை.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...