முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொஞ்சமே கொஞ்சம் தாமதமாக!

இங்கிலாந்துடனான நான்காவது டெஸ்ட் ஆட்ட்த்தின் முதல் நாளான இன்று எல்லா மட்டையாளர்களை விடவும் எட்டாவதாக களமிறங்கிய அஷ்வின் தான் மிக சுலபமாக பந்து வீச்சை எதிர்கொண்டு நாற்பது சொச்சம் அடித்தார். அவர் ஆட்டத்தில் ஒரு ஸ்டைல், லாவகம், சிரமமின்மை தெரிந்தது. அதற்கு முக்கிய காரணம் அஷ்வின் அரை நொடி தாமதமாக பந்தை அடிப்பது.

மட்டையாட்டத்தின் அடிப்படை நுட்பம் பந்து விழும் அரைநொடி முன் தயாராவது, அதே பந்தை சற்றே, மிக சற்றே தாமதமாக அடிப்பது. ஸ்விங் ஆகும் பந்தை ஆட இது தான் சிறந்த முறை. அஷ்வினைப் பார்க்கையில் இதே போல் மணிக்கட்டு வளைத்து அசருதீன் ஆடுவது நினைவு வருகிறது. எவ்வளவு சிரமமான ஆடுதளத்திலும் அசரூதீன் சுணங்காமல் சரளமாக ஆடுவார். பவுன்ஸ் மட்டுமே அவரது ஒரே பிரச்சனை. மற்றபடி பந்தை தாமதமாக மீட் பண்ணி டைமிங்குடன் ஆடுவதில் கில்லாடி.

இன்று பிற மட்டையாளர்கள் பந்தை ஒன்று வேகமாய் அல்லது ரொம்ப தாமதமாய் மீட் பண்ணினார்கள். இங்கிலாந்து மட்டையாளர்களும் அஷ்வினை போல் 0.5 நொடி தாமதமாக தான் பந்தை தொடுகிறார்கள். அதனால் தான் அவர்கள் நம் வீரர்களைப் போல் மட்டையாடுகையில் பதறுவதில்லை. 

இந்தியாவில் சுழல் பந்தை இது போல் நம் வீரர்கள் சற்றே தாமதித்து மீட் செய்து ஆடுவார்கள். வெளிநாட்டு வீரர்கள் அவசரமாய் அடித்து சுழலையும் பவுன்ஸையும் சமாளிக்க முடியாமல் அவுட் ஆவார்கள். சுழலையும் சிறப்பாய் ஆடும் சூட்சுமமும் இப்படி மிக மிக கொஞ்சமாய் தாமதித்து பந்தை அடிப்பது தான். T20 ஆட்டம் இந்த கலைநுட்பத்தை நம் வீரர்களிடம் இருந்து பறித்து விட்டது. பந்து விழும் முன்னே அதை சந்திக்கும் ஒரு வேகத்துடன் நம் மட்டையாளர்கள் முன்னேறுகிறார்கள். தடுத்தாடும் போதும் இந்த ஒரு வேகமும் முனைப்பும் உள்ளது. இது தட்டையான ஆடுதளத்தில் ஐம்பது அல்லது 20 ஓவர் ஆட்டங்களில் பவுண்டரி ஷாட்கள் ஆட உதவும். ஆனால் இதுவே பந்து ஸ்விங் ஆகும் போது கடைசி கட்டத்தில் ஷாட்டை மாற்ற அவர்களை அனுமதிக்காது.

கருத்துகள்

சேக்காளி இவ்வாறு கூறியுள்ளார்…
அரை நொடி என்ன மாற்றமெல்லாம் செய்கிறது?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...