முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொஞ்சமே கொஞ்சம் தாமதமாக!

இங்கிலாந்துடனான நான்காவது டெஸ்ட் ஆட்ட்த்தின் முதல் நாளான இன்று எல்லா மட்டையாளர்களை விடவும் எட்டாவதாக களமிறங்கிய அஷ்வின் தான் மிக சுலபமாக பந்து வீச்சை எதிர்கொண்டு நாற்பது சொச்சம் அடித்தார். அவர் ஆட்டத்தில் ஒரு ஸ்டைல், லாவகம், சிரமமின்மை தெரிந்தது. அதற்கு முக்கிய காரணம் அஷ்வின் அரை நொடி தாமதமாக பந்தை அடிப்பது.

மட்டையாட்டத்தின் அடிப்படை நுட்பம் பந்து விழும் அரைநொடி முன் தயாராவது, அதே பந்தை சற்றே, மிக சற்றே தாமதமாக அடிப்பது. ஸ்விங் ஆகும் பந்தை ஆட இது தான் சிறந்த முறை. அஷ்வினைப் பார்க்கையில் இதே போல் மணிக்கட்டு வளைத்து அசருதீன் ஆடுவது நினைவு வருகிறது. எவ்வளவு சிரமமான ஆடுதளத்திலும் அசரூதீன் சுணங்காமல் சரளமாக ஆடுவார். பவுன்ஸ் மட்டுமே அவரது ஒரே பிரச்சனை. மற்றபடி பந்தை தாமதமாக மீட் பண்ணி டைமிங்குடன் ஆடுவதில் கில்லாடி.

இன்று பிற மட்டையாளர்கள் பந்தை ஒன்று வேகமாய் அல்லது ரொம்ப தாமதமாய் மீட் பண்ணினார்கள். இங்கிலாந்து மட்டையாளர்களும் அஷ்வினை போல் 0.5 நொடி தாமதமாக தான் பந்தை தொடுகிறார்கள். அதனால் தான் அவர்கள் நம் வீரர்களைப் போல் மட்டையாடுகையில் பதறுவதில்லை. 

இந்தியாவில் சுழல் பந்தை இது போல் நம் வீரர்கள் சற்றே தாமதித்து மீட் செய்து ஆடுவார்கள். வெளிநாட்டு வீரர்கள் அவசரமாய் அடித்து சுழலையும் பவுன்ஸையும் சமாளிக்க முடியாமல் அவுட் ஆவார்கள். சுழலையும் சிறப்பாய் ஆடும் சூட்சுமமும் இப்படி மிக மிக கொஞ்சமாய் தாமதித்து பந்தை அடிப்பது தான். T20 ஆட்டம் இந்த கலைநுட்பத்தை நம் வீரர்களிடம் இருந்து பறித்து விட்டது. பந்து விழும் முன்னே அதை சந்திக்கும் ஒரு வேகத்துடன் நம் மட்டையாளர்கள் முன்னேறுகிறார்கள். தடுத்தாடும் போதும் இந்த ஒரு வேகமும் முனைப்பும் உள்ளது. இது தட்டையான ஆடுதளத்தில் ஐம்பது அல்லது 20 ஓவர் ஆட்டங்களில் பவுண்டரி ஷாட்கள் ஆட உதவும். ஆனால் இதுவே பந்து ஸ்விங் ஆகும் போது கடைசி கட்டத்தில் ஷாட்டை மாற்ற அவர்களை அனுமதிக்காது.

கருத்துகள்

சேக்காளி இவ்வாறு கூறியுள்ளார்…
அரை நொடி என்ன மாற்றமெல்லாம் செய்கிறது?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.