Skip to main content

இரு கட்டுரைகள்: மெட்ராஸும் இணைய வர்த்தகமும்


சமீபத்தில் படித்ததில் இரு கட்டுரைகள் கவர்ந்தன. ஒன்று காட்சிப்பிழையில் “மெட்ராஸ்” பற்றி ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ள கட்டுரை. ஆழமான பார்வை கொண்ட கட்டுரை.
இன்னொன்று செல்லமுத்து குப்புசாமி இம்மாத “உயிர்மையில்” எழுதியுள்ள இணைய வர்த்தகம் பற்றினது.


இணைய வர்த்தகத்தால் வழக்கமான சில்லறை வியாபாரிகளும் கடைகளும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பது குப்புசாமியின் கட்டுரையின் மையச் சரடு. இணைய வர்த்தகம் புது வாடிக்கையாளர்களை உருவாக்குகிறது. நூறு பேர் இருந்த இடத்தில் ஆயிரம் பேரை கொண்டு வருகிறது. அதாவது நம்மில் ஒருவருக்குள் ஒரு வழக்கமான வாடிக்கையாளன் இருக்கிறான் என்றால் இணைய வர்த்தகம் நம்மை இரண்டாக உடைத்து அதில் ஒன்றை இணைய வாடிக்கையாளராகிறோம் மாற்றுகிறது. ஆக நாம் இரண்டு மடங்காக இந்த வர்த்தகத்தில் பங்கெடுக்கிறோம். இணையம் வந்த போது பத்திரிகைகளும், டிவியினால் செய்தித்தாள்களும் அழியும் என்றார்கள். ஆனால் இங்கு பத்திரிகை மற்றும் நாளிதழ்கள் பெருகியிருக்கின்றன. அது போல் இணைய வாசிப்பினால் இலக்கிய நூல்கள் வாங்குகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது (அவர்கள் வாசிக்கிறார்களா என்பது வேறு விசயம்). T20 வந்த போது டெஸ்ட் அழியும் என்றார்கள். ஆனால் டெஸ்டும் அதைப் பார்க்கிறவர்களும் அப்படியே தான் இருக்கிறார்கள். கிரிக்கெட் அஞ்ஞானிகளில் கோடிக்கணக்கான பேரை T20 தன் புது வாடிக்கையாளர்களாக்கி இருக்கிறது. இப்படி ஒரு புது முறை வர்த்தகத்துக்குள் வரும் போது அது லாபத்தை மட்டுமல்ல வாடிக்கையாளர்களையும் பெருக்குகிறது. இதில் ஒரு சுவாரஸ்யமான விசயம் இலக்கு நாம் தான் என்பது. ஜராசந்தனை பிளந்தது போல் நம்மை துண்டு துண்டாக்கி பல்வேறு வணிகங்களில் ஈடுபடும் வாடிக்கையாளராக்க இன்றைய சூழலுக்கு முடியும். எவ்வளவு வாங்கினாலும் நம் பசி அடங்குவதில்லை. சூதாட்டத்துக்கு இணையான ஒரு சுவை நமக்கு இதில் இருக்கிறது. பிளிப்கார்ட் எப்படி வளர்ந்தார்கள் என்பது பற்றின ஒரு சுவையான பதிவும் இக்கட்டுரையில் உள்ளது. Big Billion Day அன்றைக்கு நான் கூட இணையத்தில் நீச்சலடித்து சில பொருட்களை பொறுக்கினேன். சல்லிசாக வாங்கி விட்டோம் எனும் திருப்தி பெற்றேன். அவ்வளவு குறைவாக தராவிட்டால் நான் அப்பொருட்களை வாங்கி இருக்க மாட்டேன். ஏனென்றால் அப்பொருட்கள் எனக்கு அத்தியாவசியம் அல்ல. தேவையில்லாத பொருளை நமக்கு அத்தியாவசியமானதாக உணர வைப்பதில் இணைய அங்காடியின் தந்திரம் உள்ளது. நாம் அதற்காக ஏங்குகிறோம், ஏக்கத்தை நியாயப்படுத்த காரணங்களை கற்பிக்கிறோம், காசு திரட்டி வாங்குகிறோம். பிறகு மீண்டும் மற்றொரு ஏக்கம்.

இறுதியாக, வால்மார்ட் வந்தால் சில்லறை வணிகம் என்னவாகும்? பாதிக்கப்படுவார்கள் நிச்சயமாய். ஆனால் ஒரேயடியாய் காணாமல் போக மாட்டார்கள். இப்போதும் ரெண்டு ரூபாய்க்கு தேங்காய் பத்தை வாங்குகிறவர்கள் இருக்கிறார்கள் தானே. தள்ளுவண்டியில் வரும் தக்காளியை வாங்க என்னைப் போன்றவர்களும் தவறுவதில்லை. இந்தியா ஒரு கடல். அங்கு நீங்கள் ஒரு பாறாங்கல்லை தூக்கிப் போட்டாலும் சின்ன ஏப்பம் விட்டு வயிறை அகட்டி சுணங்காது ஏற்றுக் கொள்ளும். 

Comments

உலகமயமாக்கல், அன்னிய நேரடி முதலீடு என்பனபற்றி நண்பர் கவலைப்படுகையில் இன்னும் பத்து பதினைந்து வருடத்தில் இந்தியாவை மொத்தமாய் சுரண்டிவிடுவார்கள் நாம் பிச்சைதான் எடுக்கவேண்டும் என ஆதங்கப்பட்டார். அதற்கு நான் சொன்னேன் அப்படியெல்லாம் இல்லை இந்தியா பொன்முட்டையிடும் வாத்து அவ்வளவு எளிதில் அறுத்துவிடமாட்டார்கள் என்றேன்.இந்த கட்டுரை அறுத்துவிடமுடியாது என்கிறாதுபோலும் உயிமை வாங்கி படித்தால்தான் தெரியும்.
aanal samanyan sangata patt u pokinraanraan enpathu en puriya villai ..... thevaiyai therthedukkum urimaiyai inru izhathu vittom ithu ethartham namathu thevaikalai naam theermanikkum pazhakkam kuraya aarapithu vittathu athuve en varutham

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...