முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரு கட்டுரைகள்: மெட்ராஸும் இணைய வர்த்தகமும்


சமீபத்தில் படித்ததில் இரு கட்டுரைகள் கவர்ந்தன. ஒன்று காட்சிப்பிழையில் “மெட்ராஸ்” பற்றி ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ள கட்டுரை. ஆழமான பார்வை கொண்ட கட்டுரை.
இன்னொன்று செல்லமுத்து குப்புசாமி இம்மாத “உயிர்மையில்” எழுதியுள்ள இணைய வர்த்தகம் பற்றினது.


இணைய வர்த்தகத்தால் வழக்கமான சில்லறை வியாபாரிகளும் கடைகளும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பது குப்புசாமியின் கட்டுரையின் மையச் சரடு. இணைய வர்த்தகம் புது வாடிக்கையாளர்களை உருவாக்குகிறது. நூறு பேர் இருந்த இடத்தில் ஆயிரம் பேரை கொண்டு வருகிறது. அதாவது நம்மில் ஒருவருக்குள் ஒரு வழக்கமான வாடிக்கையாளன் இருக்கிறான் என்றால் இணைய வர்த்தகம் நம்மை இரண்டாக உடைத்து அதில் ஒன்றை இணைய வாடிக்கையாளராகிறோம் மாற்றுகிறது. ஆக நாம் இரண்டு மடங்காக இந்த வர்த்தகத்தில் பங்கெடுக்கிறோம். இணையம் வந்த போது பத்திரிகைகளும், டிவியினால் செய்தித்தாள்களும் அழியும் என்றார்கள். ஆனால் இங்கு பத்திரிகை மற்றும் நாளிதழ்கள் பெருகியிருக்கின்றன. அது போல் இணைய வாசிப்பினால் இலக்கிய நூல்கள் வாங்குகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது (அவர்கள் வாசிக்கிறார்களா என்பது வேறு விசயம்). T20 வந்த போது டெஸ்ட் அழியும் என்றார்கள். ஆனால் டெஸ்டும் அதைப் பார்க்கிறவர்களும் அப்படியே தான் இருக்கிறார்கள். கிரிக்கெட் அஞ்ஞானிகளில் கோடிக்கணக்கான பேரை T20 தன் புது வாடிக்கையாளர்களாக்கி இருக்கிறது. இப்படி ஒரு புது முறை வர்த்தகத்துக்குள் வரும் போது அது லாபத்தை மட்டுமல்ல வாடிக்கையாளர்களையும் பெருக்குகிறது. இதில் ஒரு சுவாரஸ்யமான விசயம் இலக்கு நாம் தான் என்பது. ஜராசந்தனை பிளந்தது போல் நம்மை துண்டு துண்டாக்கி பல்வேறு வணிகங்களில் ஈடுபடும் வாடிக்கையாளராக்க இன்றைய சூழலுக்கு முடியும். எவ்வளவு வாங்கினாலும் நம் பசி அடங்குவதில்லை. சூதாட்டத்துக்கு இணையான ஒரு சுவை நமக்கு இதில் இருக்கிறது. பிளிப்கார்ட் எப்படி வளர்ந்தார்கள் என்பது பற்றின ஒரு சுவையான பதிவும் இக்கட்டுரையில் உள்ளது. Big Billion Day அன்றைக்கு நான் கூட இணையத்தில் நீச்சலடித்து சில பொருட்களை பொறுக்கினேன். சல்லிசாக வாங்கி விட்டோம் எனும் திருப்தி பெற்றேன். அவ்வளவு குறைவாக தராவிட்டால் நான் அப்பொருட்களை வாங்கி இருக்க மாட்டேன். ஏனென்றால் அப்பொருட்கள் எனக்கு அத்தியாவசியம் அல்ல. தேவையில்லாத பொருளை நமக்கு அத்தியாவசியமானதாக உணர வைப்பதில் இணைய அங்காடியின் தந்திரம் உள்ளது. நாம் அதற்காக ஏங்குகிறோம், ஏக்கத்தை நியாயப்படுத்த காரணங்களை கற்பிக்கிறோம், காசு திரட்டி வாங்குகிறோம். பிறகு மீண்டும் மற்றொரு ஏக்கம்.

இறுதியாக, வால்மார்ட் வந்தால் சில்லறை வணிகம் என்னவாகும்? பாதிக்கப்படுவார்கள் நிச்சயமாய். ஆனால் ஒரேயடியாய் காணாமல் போக மாட்டார்கள். இப்போதும் ரெண்டு ரூபாய்க்கு தேங்காய் பத்தை வாங்குகிறவர்கள் இருக்கிறார்கள் தானே. தள்ளுவண்டியில் வரும் தக்காளியை வாங்க என்னைப் போன்றவர்களும் தவறுவதில்லை. இந்தியா ஒரு கடல். அங்கு நீங்கள் ஒரு பாறாங்கல்லை தூக்கிப் போட்டாலும் சின்ன ஏப்பம் விட்டு வயிறை அகட்டி சுணங்காது ஏற்றுக் கொள்ளும். 

கருத்துகள்

அகலிக‌ன் இவ்வாறு கூறியுள்ளார்…
உலகமயமாக்கல், அன்னிய நேரடி முதலீடு என்பனபற்றி நண்பர் கவலைப்படுகையில் இன்னும் பத்து பதினைந்து வருடத்தில் இந்தியாவை மொத்தமாய் சுரண்டிவிடுவார்கள் நாம் பிச்சைதான் எடுக்கவேண்டும் என ஆதங்கப்பட்டார். அதற்கு நான் சொன்னேன் அப்படியெல்லாம் இல்லை இந்தியா பொன்முட்டையிடும் வாத்து அவ்வளவு எளிதில் அறுத்துவிடமாட்டார்கள் என்றேன்.இந்த கட்டுரை அறுத்துவிடமுடியாது என்கிறாதுபோலும் உயிமை வாங்கி படித்தால்தான் தெரியும்.
கவிதை பூக்கள் பாலா இவ்வாறு கூறியுள்ளார்…
aanal samanyan sangata patt u pokinraanraan enpathu en puriya villai ..... thevaiyai therthedukkum urimaiyai inru izhathu vittom ithu ethartham namathu thevaikalai naam theermanikkum pazhakkam kuraya aarapithu vittathu athuve en varutham

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...