Skip to main content

பெருமாள் முருகன் சர்ச்சை: யார் துரோகி?


இன்று நான் பங்கேற்ற சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சியில் சினிமா தணிக்கை, சர்ச்சை, பெருமாள் முருகன் பிரச்சனை ஆகியவை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பெருமாள் முருகன் ஏன் தனக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்தும் தொடர்ந்து போராடாமல் பின்வாங்கினார் எனக் கேட்டார். இது குறித்து ஒரு விவாதம் இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. தஸ்லிமா நஸ்ரின் வேறு பெருமாள் முருகன் தேவையில்லாமல் பயந்து பின்வாங்கியதை கண்டித்து டிவிட்டரில் எழுதியதாக ஒரு சேதி பரவி உள்ளது. இது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. எழுதப் போவதில்லை எனும் அவரது அறிக்கை தோல்வியை ஒப்புக் கொள்ளும் செயல்பாடா? அது தன் ஆதரவு அமைப்புகளுக்கு அவர் செய்த துரோகமா? மேலோட்டமாய் இந்த பின்வாங்கல் ஒரு துரோகம் போல் தோன்றினாலும் அடிப்படையில் பிழையான வாதம் இது.

இரண்டு விதமான போராட்டங்கள் உள்ளன. தனிப்பட்ட போராட்டம், பொதுமக்கள் நலனுக்கான போராட்டம். தனிப்பட்ட போராட்டங்களின் போது வெளிஆதரவு இருந்தாலும் கூட அதிலிருந்து பின்வாங்கும், அதை பாதியில் கைவிடும் உரிமை தனிநபருக்கு உண்டு. அது துரோகம் அல்ல. ஆனால் பொது பிரச்சனைக்கான போராட்டத்தில் அப்படி அல்ல. முள்ளிவாய்க்காலின் போதான கலைஞரின் மௌனம் ஒரு துரோகம். ஏனென்றால் அதில் ஒரு பொது பிரச்சனையும் பொது கொள்கை நிலைப்பாடும் சம்மந்தப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட போராட்டங்கள் அப்படி அல்ல. ஒரு பெண் தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்காக போராடுகிறாள் எனக் கொள்வோம். எப்போது வேண்டுமானாலும் தன் போராட்டத்தை அவள் கைவிடலாம். தனிப்பட்ட நெருக்கடி, இயலாமை காரணமாய் வழக்கை வாபஸ் வாங்கலாம். சமரசமாக போகலாம். அப்போது அதுவரை அவரை ஆதரித்து வந்த பெண்ணிய அமைப்புகள் அவரை துரோகி என அழைக்க முடியாது. ஏனென்றால் அவருடையது ஒரு தனிப்பட்ட போராட்டம். என்னதான் பொது ஆதரவு இருந்தாலும் அது பொதுப் போராட்டம் அல்ல. ஐரோம் ஷர்மிள ஒருமுறை தான் காதலித்து மணம் புரிந்து குடும்பமாக வாழ விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அவர் தன் உண்ணாவிரதத்தை முடிக்க விடாதபடி அவரது ஆதரவாளர்கள் சிலர் தடுப்பதாக கூறுகிறார்கள். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எப்படி ஒரு தனிநபர் போராட்டம் பொது அமைப்புகளால் ஹைஜேக் செய்யப்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். பெருமாள் முருகனின் நாவல் சர்ச்சையில் அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்க முயலும் போது நாமும் அவரது தனிப்பட்ட பிரச்சனையை ஒரு பொது இலக்குக்காக ஹைஜேக் பண்ணவே முயல்கிறோம். அது நியாயம் அல்ல.

துரோகத்தை நாம் இப்படி வரையறுத்துக் கொள்ளலாம். ஒருவரது பின்வாங்கல் பிறரை பாதிக்குமானால் அது துரோகம். ஆனால் பெருமாள் முருகன் விசயத்தில் அவரே பாதிக்கப்படுபவராக இருக்கிறார். பிறர் அல்ல. அவரது முடிவு அவரைத் தான் பாதிக்கிறது. பிறரை அல்ல. பாதிக்கப்படுபவர் யார் என்பது தான் துரோகத்தை தீர்மானிக்கிறது. பெருமாள் முருகன் தனக்குத் தானே துரோகம் செய்ய இயலாது. அதனால் அவர் துரோகி அல்ல.

Comments

சொந்த ஊர் பெண்களை இழிவுபடுத்தி எழுதியதை தாங்கிப்பிடிக்க வேண்டுமென்கிறீர்களா. ஏன் இப்படி குழப்புகிறீர்கள்
வில்லவன்கோதை
Anbu said…
“பிள்ளையில்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாயிருந்தால் அப்போது அந்த ஸ்திரீ தன் கணவர், மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி ஆகியவர்களுடன் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டு பண்ண வேண்டியது”(மனு9:59)
“கணவன் புத்திரனில்லாமல் இறந்து போனால் மனையாள் கணவனின் தோத்திரமுள்ள ஒரு புருஷனிடத்தில் விதிப்படி புத்திரனைப் பெற்றுக் கொண்டு, அப்புத்திரனுக்குக் கணவன் சம்பாதித்த பொருளைக் கொடுத்துவிட வேண்டும்”(மனு:9:190)
மேற்கண்ட வசனங்கள் மநுதர்மத்தில் சொல்லப்பட்டவை. பெருமாள்முருகனின் மாதொருபாகனை எதிர்ப்பவர்கள் - இதை என்ன செய்யப்போகிறார்கள்.... மநுதர்மத்தையும் தீயிட்டுக் கொளுத்த முன்வருவார்களா - நண்பர்களே?
இன்றைய சூழலில் தனிமனிதன் ஏற்கத்தகாதது எதையுமே தீயிட்டு கொளுத்தவேண்டாம். தவிர்த்துவிடலாம். வில்லவன் கோதை

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...