முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அருந்ததி ராய் பேட்டி: குண்டாந்தடி விமர்சனம்

எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர் அருந்ததி ராய். | படம்: கே.பிச்சுமணி.

”அம்பேத்கர் சுடர்” விருதை ஒட்டி அருந்ததி ராய் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். வழக்கமான ”ஏய் ஏய் ஏரியாவுக்கு வாடா” வகையான பேட்டி. 


அருந்ததி ராய் எப்போதும் அதிர்ச்சிகரமான குண்டாந்தடி விமர்சனங்கள் செய்வதிலே முனைப்பு காட்டுகிறார். இடதுசாரிகள் சாதியை ஒழிக்கவில்லை எனும் கருத்தை வைக்கிறார். இதே விமர்சனத்தை கழக கட்சிகள் உள்ளிட்ட பல மைய அரசியல் கட்சிகள் மீதும் வைக்கலாம். ஆனால் அது நியாயமல்ல. ஒவ்வொரு கட்சியும் நோக்கும் கோட்பாடுகளும் வேறுவேறு. எல்லா கட்சிகளும் சாதி ஒழிப்பு எனும் இலக்கை நோக்கி பயணிக்க அவசியமில்லை. சாதி ஒழிப்பு ஒரு பக்க இலக்காக வேண்டுமெனில் இருக்கலாம். அதனால் சாதியம் நிலைப்பதற்காக கட்சிகளை சாடுவதில் அர்த்தமில்லை.

தனியார் மயமாக்கல் தலித்துகளை மேலும் ஒடுக்கும் என்கிறார். ஏற்கனவே நிலமும் கல்வி பின்புலமும் கொண்டவர்களுக்கே அது அதிக பயனளிக்கும். இதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் தனியார் மயமாக்கலை நாம் தவிர்க்க இயலாது. அதற்கு மாற்று இல்லை. அருந்ததி ராயே தனியார் மயமாக்கலால் பயனடைந்தவர் தானே. தனியார் மயமாக்கலை தகவமைப்பது, அதனுடன் பேரம் பேசும் இடத்தில் நம்மை வைத்துக் கொள்வதில் தான் வெற்றி இருக்கிறது.

இன்றைய கட்சிகள் ரேடிக்கலாக இல்லை. எழுபதுகளில் நிலத்தை குடியானவர்களுக்கு பிரித்து கொடுத்து சீர்திருத்துவது பற்றி பேசினோம். இன்று நிலப்பறிப்பு சட்டத்தை எதிர்க்கிற வேளையில் ஏன் இந்த கோரிக்கைகள்ன் இல்லை என்கிறார். இது போன்ற ஒரு அசட்டுவாதத்தை நான் கேட்டதில்லை. இன்றைய பொருளாதாரம், வாழ்க்கைப்பார்வை வெகுவாக மாறி விட்டது. இன்றைய தேவைகள் வேறு. மக்கள் இன்று அடிப்படை வசதிகள், சீரான நிர்வாகம், வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை தான் முக்கியமாய் நினைக்கிறார்கள். லட்சியவாதம் செத்துவிட்டது. அதனால் கட்சிகளும் மக்களின் போக்கில் தான் சிந்திக்கும். இன்றைக்கு கட்சிகள் ரேடிக்கலாக பேசினால் மக்கள் சிரிப்பார்கள்.

தன் சாதி அடையாளத்தை தலித்துகள் பெருமிதமாய் ஏற்றுத் தான் சாதிக்கு எதிராக போராட முடியும் என்றாலும், இன்னொரு பக்கம் அது சாதிய அமைப்பை வலுப்படுத்துவதாய் எதிர்மறையாகவும் அமையும் என அவர் கூறியுள்ளது தான் என்னை கவர்ந்த கருத்து. ஆனால் தி ஹிந்து தமிழாக்கத்தில் இக்கருத்தின் இரண்டாம் பாதியை கொண்டு வரவில்லை. (பாதி கருத்து பிழையான கருத்தல்லவா?)

அருந்ததி ராய்க்கு அம்பேத்கர் சுடர் விருதளித்ததில் எனக்கும் உடன்பாடில்லை. சுகிர்தராணி சொல்வது போல் இத்தகுதி கொண்ட பல தலித் பண்பாட்டு போராளிகள் தமிழிலேயே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அளித்தால் அருந்ததி ராய்க்கு அளிப்பது போன்ற மீடியா மதிப்பு இராது.


அருந்ததி ராய்க்கு சமூகப் பிரச்சனைகளின் தீர்வில் ஆர்வம் குறைவு. யாருடைய தலைமுடியையாவது பிடித்து இழுப்பது தான் அவரது பிரதான பொழுதுபோக்கு.

கருத்துகள்

Govind Veerakaran இவ்வாறு கூறியுள்ளார்…
ஏன் தனியார்மயத்தை தவிர்க்க இயலாது? தனியார்மயத்தால் கல்வித்துறை மற்றும் பல சேவை துறைகள் மிகவும் சீரழிந்து விட்டன. தனியார்மயத்தை தவிர்க்க முடியாது என்று நீங்கள் சொல்வது அரசாங்கங்கள் மீது உள்ள நம்பிக்கைஇன்மையாலா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...