Skip to main content

அருந்ததி ராய் பேட்டி: குண்டாந்தடி விமர்சனம்

எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர் அருந்ததி ராய். | படம்: கே.பிச்சுமணி.

”அம்பேத்கர் சுடர்” விருதை ஒட்டி அருந்ததி ராய் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். வழக்கமான ”ஏய் ஏய் ஏரியாவுக்கு வாடா” வகையான பேட்டி. 


அருந்ததி ராய் எப்போதும் அதிர்ச்சிகரமான குண்டாந்தடி விமர்சனங்கள் செய்வதிலே முனைப்பு காட்டுகிறார். இடதுசாரிகள் சாதியை ஒழிக்கவில்லை எனும் கருத்தை வைக்கிறார். இதே விமர்சனத்தை கழக கட்சிகள் உள்ளிட்ட பல மைய அரசியல் கட்சிகள் மீதும் வைக்கலாம். ஆனால் அது நியாயமல்ல. ஒவ்வொரு கட்சியும் நோக்கும் கோட்பாடுகளும் வேறுவேறு. எல்லா கட்சிகளும் சாதி ஒழிப்பு எனும் இலக்கை நோக்கி பயணிக்க அவசியமில்லை. சாதி ஒழிப்பு ஒரு பக்க இலக்காக வேண்டுமெனில் இருக்கலாம். அதனால் சாதியம் நிலைப்பதற்காக கட்சிகளை சாடுவதில் அர்த்தமில்லை.

தனியார் மயமாக்கல் தலித்துகளை மேலும் ஒடுக்கும் என்கிறார். ஏற்கனவே நிலமும் கல்வி பின்புலமும் கொண்டவர்களுக்கே அது அதிக பயனளிக்கும். இதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் தனியார் மயமாக்கலை நாம் தவிர்க்க இயலாது. அதற்கு மாற்று இல்லை. அருந்ததி ராயே தனியார் மயமாக்கலால் பயனடைந்தவர் தானே. தனியார் மயமாக்கலை தகவமைப்பது, அதனுடன் பேரம் பேசும் இடத்தில் நம்மை வைத்துக் கொள்வதில் தான் வெற்றி இருக்கிறது.

இன்றைய கட்சிகள் ரேடிக்கலாக இல்லை. எழுபதுகளில் நிலத்தை குடியானவர்களுக்கு பிரித்து கொடுத்து சீர்திருத்துவது பற்றி பேசினோம். இன்று நிலப்பறிப்பு சட்டத்தை எதிர்க்கிற வேளையில் ஏன் இந்த கோரிக்கைகள்ன் இல்லை என்கிறார். இது போன்ற ஒரு அசட்டுவாதத்தை நான் கேட்டதில்லை. இன்றைய பொருளாதாரம், வாழ்க்கைப்பார்வை வெகுவாக மாறி விட்டது. இன்றைய தேவைகள் வேறு. மக்கள் இன்று அடிப்படை வசதிகள், சீரான நிர்வாகம், வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை தான் முக்கியமாய் நினைக்கிறார்கள். லட்சியவாதம் செத்துவிட்டது. அதனால் கட்சிகளும் மக்களின் போக்கில் தான் சிந்திக்கும். இன்றைக்கு கட்சிகள் ரேடிக்கலாக பேசினால் மக்கள் சிரிப்பார்கள்.

தன் சாதி அடையாளத்தை தலித்துகள் பெருமிதமாய் ஏற்றுத் தான் சாதிக்கு எதிராக போராட முடியும் என்றாலும், இன்னொரு பக்கம் அது சாதிய அமைப்பை வலுப்படுத்துவதாய் எதிர்மறையாகவும் அமையும் என அவர் கூறியுள்ளது தான் என்னை கவர்ந்த கருத்து. ஆனால் தி ஹிந்து தமிழாக்கத்தில் இக்கருத்தின் இரண்டாம் பாதியை கொண்டு வரவில்லை. (பாதி கருத்து பிழையான கருத்தல்லவா?)

அருந்ததி ராய்க்கு அம்பேத்கர் சுடர் விருதளித்ததில் எனக்கும் உடன்பாடில்லை. சுகிர்தராணி சொல்வது போல் இத்தகுதி கொண்ட பல தலித் பண்பாட்டு போராளிகள் தமிழிலேயே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அளித்தால் அருந்ததி ராய்க்கு அளிப்பது போன்ற மீடியா மதிப்பு இராது.


அருந்ததி ராய்க்கு சமூகப் பிரச்சனைகளின் தீர்வில் ஆர்வம் குறைவு. யாருடைய தலைமுடியையாவது பிடித்து இழுப்பது தான் அவரது பிரதான பொழுதுபோக்கு.

Comments

ஏன் தனியார்மயத்தை தவிர்க்க இயலாது? தனியார்மயத்தால் கல்வித்துறை மற்றும் பல சேவை துறைகள் மிகவும் சீரழிந்து விட்டன. தனியார்மயத்தை தவிர்க்க முடியாது என்று நீங்கள் சொல்வது அரசாங்கங்கள் மீது உள்ள நம்பிக்கைஇன்மையாலா?

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...