முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எ.கெ ராமானுஜனும் மனுஷ்ய புத்திரனும்




உறைந்த வாழ்வு – எ.கெ. ராமானுஜன்

மதிய உணவு முடிந்து
அவள் சென்ற பிறகு, சற்று நேரம்
வாசித்தேன்.
ஆனால் திடீரென மீண்டும்
பார்க்க தோன்றியது
கண்டேன்
பாதி தின்று வைத்த
சேண்டுவிச் ரொட்டி,
லெட்யூஸ் மற்றும் சலாமி,
எல்லாம் அவள் கடியின்
அமைப்பை சுமந்தபடி



Still Life - Poem by A. K. Ramanujan
When she left me
after lunch,I read
for a while.
But I suddenly wanted
to look again
and I saw the half-eaten
sandwich,
bread,
lettuce and salami,
all carrying the shape
of her bite.

இன்று மதியம் சென்னை பல்கலைக்கழக வகுப்பு ஒன்றில் ஏ.கெ ராமானுஜனின் கவிதைகள் பற்றி பேசுவதற்காய் வாசித்துக் கொண்டிருக்கும் போது இக்கவிதை என் கண்ணில் பட்டது. இதனோடு தொடர்புடைய ஆனால் மற்றொரு உணர்வுநிலையை கொண்ட ஒரு தமிழ்க்கவிதையையும் நினைவு வந்தது. மனுஷ்யபுத்திரனின் “இறந்தவனின் ஆடைகள்”. அதையும் மாணவர்களுடன் பகிர தோன்றியது. அதற்காய் ஆங்கிலத்தில் மொழியாக்கினேன்.
The dead person’s Dresses
-    Manushya Puthiran
How would I maintain
The dead person’s dresses,
I wonder.
I can’t just wear them
It may imply
I have been waiting for the chance

I can’t let them
Remain at his place
It is not so easy
Maintaining a normal relation
 with the dead 

Shall I hand them over
To the needy?
What if the  dead one’s impressions
Pop out at us
From unexpected places
And unexpected bodies

I could destroy the dresses
But my hands tremble
At the thought of
Burning him again and again

The dresses of the dead
Are not like dresses
They are his skin 

இறந்தவனின் ஆடைகள்
-          மனுஷ்யபுத்திரன் 
இறந்தவனின் ஆடைகளை
எப்படிப் பராமரிப்பதென்றே
தெரியவில்லை
இறந்தவனின் ஆடைகளை
அத்தனை சுலபமாய்
அணிந்துகொண்டு விட முடியாது
அதற்காகவே
காத்திருந்தது போலாகி விடும்.
அவை
இறந்தவனின் இடத்தில்
இருந்து விட்டுப் போகட்டும்
என்றிருக்க இயலாது
இறந்தவர்களோடு
அவ்வளவு இயல்பாய்
உறவுகள் சாத்தியமல்ல
தானமெனக் கொடுக்கலாமெனில்
இறந்தவனின் சாயல்கள்
எதிர்பாரா இடங்களில்
எதிர்பாரா உடல்களிலிருந்து
நம்மை நோக்கி வரும்
 இறந்தவனின் ஆடைகளை
அழித்து விடலாம் தான்
இறந்தவனைத்
திரும்பத் திரும்ப அழிக்க
கைகள் நடுங்குகின்றன


கருத்துகள்

செல்வக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
ராமானுஜனின் கவிதை பற்றி: கடியின் அமைப்பு - என்பது இதுவரை தமிழில் அமைந்துவராத புது சேர்க்கையாக, ஏதோ இரும்பை விழுங்கியமாதிரி இருக்கின்றது. கடியின் சுவடுகளைச் சுமந்தபடி என்றிருக்கலாமா. கடித்த தடத்தை, கடியின் பதிவை அல்லது அல்லது கடியின் வலியை என்றிருக்கலாம் ஆனால் கவிதையில் வலி இல்லை. கடியின் அமைப்பை என்பது தமிழில் நெருடுகின்றது. உங்களுக்கு எப்படிப்படுகின்றது.

செல்வக்குமார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...