Skip to main content

தென்னாப்பிரிக்க தொடர் இழப்புக்கு தோனி சொல்லும் காரணங்கள்



தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் 438 ஓட்டங்களை தென்னாப்பிரிக்கா எடுத்து பெரும் வெற்றியை பெற்றது. இந்தியா தொடரை இழந்தது. தோனி இதற்கு இரு காரணங்களை முன்வைக்கிறார். 1) இந்தியாவில் விக்கெட் வீழ்த்துகிற சிறந்த சுழலர்களோ வேகவீச்சாளர்களோ இல்லை. வேகமாய் வீசுபவர்கள் (உமேஷ் யாதவ் போல) வெறுமனே ரன்களை மட்டுமே கொடுக்கிறார்கள். அவர்களுக்கு விக்கெட் எடுக்க தெரியவில்லை. 2) அக்ஸர் பட்டேல், ஜடேஜா மற்றும் பின்னியை தவிர நம்மிடம் ஆல்ரவுண்டர்கள் இல்லை.


 முதல் காரணம் உண்மையா என நாம் இதே வீச்சாளர்கள் வரப் போகும் டெஸ்ட் தொடரில் கோலியின் கீழ் எப்படி வீசப் போகிறார்கள் எனப் பார்த்து விட்டு முடிவு செய்வோம். இரண்டாவது காரணத்தை பொறுத்த மட்டில் குர்குரீத் சிங்தீ, தீபக் ஹூடா, ஹர்த்தீக் பாண்டே ஆகியோருக்கு ஒரு வாய்ப்பு கூட அளிக்காமல் ஆல் ரவுண்டர்களே வேறு இல்லை என எப்படி தோனி முடிவுக்கு வர முடியும்?
நாம் தோனியின் கீழ் மேலும் சில ஒருநாள் தொடர்களையும் இது போல் அடுத்து இழக்கத் தான் போகிறோம். அப்போதும் தோனி நம்மிடம் வேறு வீரர்களே இல்லை என இதே காரணங்களைத் தான் கூறப் போகிறார். பிரச்சனை என்னவென்றால் தோனி புது வீரர்களை அறிமுகப்படுத்தவோ தன் திட்டமிடல் மற்றும் தலைமை பாணியை மறுபரீசலனை பண்ணவோ போவதில்லை.
ஒரு தட்டையான ஆடுதளத்திலும் நாம் விக்கெட் வீழ்த்த முயல வேண்டும். ஆனால் நம் வீச்சாளர்கள் முதல் ஓவரில் இருந்தே ஓட்டங்களை தடுக்கவே முயல்கிறார்கள். மோஹித்தும் புவனேஷ்வர குமாரும் ஓடி வருவது பார்க்கும் போது எங்கே மட்டையாளர்களின் காலில் விழுந்து கெஞ்சி விடுவார்களோ என நான் அஞ்சுவதுண்டு. இந்தளவுக்கு எதிர்மறையாய் ஆடும் பந்து வீச்சாளர்கள் உலகில் எங்குமே இல்லை. தோனியும் இதற்கு முக்கிய காரணம். ஒருவேளை இந்தியா முதலில் ஆடி 438 அடித்திருந்தாலும் தென்னாப்பிரிக்கா இரண்டாவதாய் ஆடி 380வது வந்திருப்பார்கள். நமது வீச்சாளர்கள் மற்றும் தலைவரின் காலில் விழுந்து கெஞ்சும் பாணி அந்தளவுக்கு எதிரணி மட்டையாளர்களுக்கு உற்சாகம் கொடுக்கக் கூடியது. இதே தட்டையான தளத்தில் தென்னாப்பிரிக்க வேகவீச்சாளர்கள் ஆபெட்டும், ரபெடாவும் மிகுந்த உத்வேகத்துடன் மூர்க்கத்துடன் வீசியது கண்டு வியப்பாக இருந்தது. நம்மிடம் இது போன்ற வீச்சாளர்கள் இல்லாமல் இல்லை. உமேஷ் யாதவ், வாரன் அரொன், பும்ரா போன்றோருக்கு தொடந்து வாய்ப்பளித்து இது போல் வளர்த்தெடுக்க இயலும். ஆனால் தோனி இருக்கும் வரை மோஹித் ஷர்மாக்களுக்கு தான் கொண்டாட்டம். போன உலகக் கோப்பையின் வார்ம் அப் ஆட்டம் ஒன்றில் மோஹித் பந்து வீசும் போது முதல் ஓவரிலே ஸ்லோ பந்து வீசினார். அதைப் பார்த்த வசீம் அக்ரம் கடுமையாய் விமர்சித்தார். வேகவீச்சாளன் பந்து புதிதாய் உள்ள போது வேகமாய் வீச வேண்டும். மெதுவாய் வீசுவது சுழலர்களின் வேலை என்றார். மோஹித் எல்லாம் பாகிஸ்தானில் இருந்து ஓட ஓட துரத்துவார்கள்.
ஒரு தொடரை வெல்வதோ தோற்பதோ பொருட்டல்ல; அடுத்த 2019 உலகக்கோப்பைக்கு தயாராவது தான் முக்கியம் என தோனி கூறி உள்ளார். அடுத்த 4 வருடங்களும் இதே அணி மாற்றமின்றி இதே போல் ஆடப் போகிறது என நினைக்க பயமாய் இருக்கிறது.  

Comments

அருமையாக சொன்னீர்கள்! தோனியிடம் முன்பு போல திட்டமிடல் இல்லை! ஒரே அணியை தேர்வு செய்து வெறுப்பேற்றுகிறார். தொடர்ந்து சொதப்புவர்களுக்கே வாய்ப்பு தருகிறார்! புவனேஸ்வர், மோகித் பந்து வீசுவதை பார்க்க சகிக்க முடியவில்லை! அப்புறம் எப்படி ஜெயிக்க முடியும்?

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...