முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென்னாப்பிரிக்க தொடர் இழப்புக்கு தோனி சொல்லும் காரணங்கள்



தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் 438 ஓட்டங்களை தென்னாப்பிரிக்கா எடுத்து பெரும் வெற்றியை பெற்றது. இந்தியா தொடரை இழந்தது. தோனி இதற்கு இரு காரணங்களை முன்வைக்கிறார். 1) இந்தியாவில் விக்கெட் வீழ்த்துகிற சிறந்த சுழலர்களோ வேகவீச்சாளர்களோ இல்லை. வேகமாய் வீசுபவர்கள் (உமேஷ் யாதவ் போல) வெறுமனே ரன்களை மட்டுமே கொடுக்கிறார்கள். அவர்களுக்கு விக்கெட் எடுக்க தெரியவில்லை. 2) அக்ஸர் பட்டேல், ஜடேஜா மற்றும் பின்னியை தவிர நம்மிடம் ஆல்ரவுண்டர்கள் இல்லை.


 முதல் காரணம் உண்மையா என நாம் இதே வீச்சாளர்கள் வரப் போகும் டெஸ்ட் தொடரில் கோலியின் கீழ் எப்படி வீசப் போகிறார்கள் எனப் பார்த்து விட்டு முடிவு செய்வோம். இரண்டாவது காரணத்தை பொறுத்த மட்டில் குர்குரீத் சிங்தீ, தீபக் ஹூடா, ஹர்த்தீக் பாண்டே ஆகியோருக்கு ஒரு வாய்ப்பு கூட அளிக்காமல் ஆல் ரவுண்டர்களே வேறு இல்லை என எப்படி தோனி முடிவுக்கு வர முடியும்?
நாம் தோனியின் கீழ் மேலும் சில ஒருநாள் தொடர்களையும் இது போல் அடுத்து இழக்கத் தான் போகிறோம். அப்போதும் தோனி நம்மிடம் வேறு வீரர்களே இல்லை என இதே காரணங்களைத் தான் கூறப் போகிறார். பிரச்சனை என்னவென்றால் தோனி புது வீரர்களை அறிமுகப்படுத்தவோ தன் திட்டமிடல் மற்றும் தலைமை பாணியை மறுபரீசலனை பண்ணவோ போவதில்லை.
ஒரு தட்டையான ஆடுதளத்திலும் நாம் விக்கெட் வீழ்த்த முயல வேண்டும். ஆனால் நம் வீச்சாளர்கள் முதல் ஓவரில் இருந்தே ஓட்டங்களை தடுக்கவே முயல்கிறார்கள். மோஹித்தும் புவனேஷ்வர குமாரும் ஓடி வருவது பார்க்கும் போது எங்கே மட்டையாளர்களின் காலில் விழுந்து கெஞ்சி விடுவார்களோ என நான் அஞ்சுவதுண்டு. இந்தளவுக்கு எதிர்மறையாய் ஆடும் பந்து வீச்சாளர்கள் உலகில் எங்குமே இல்லை. தோனியும் இதற்கு முக்கிய காரணம். ஒருவேளை இந்தியா முதலில் ஆடி 438 அடித்திருந்தாலும் தென்னாப்பிரிக்கா இரண்டாவதாய் ஆடி 380வது வந்திருப்பார்கள். நமது வீச்சாளர்கள் மற்றும் தலைவரின் காலில் விழுந்து கெஞ்சும் பாணி அந்தளவுக்கு எதிரணி மட்டையாளர்களுக்கு உற்சாகம் கொடுக்கக் கூடியது. இதே தட்டையான தளத்தில் தென்னாப்பிரிக்க வேகவீச்சாளர்கள் ஆபெட்டும், ரபெடாவும் மிகுந்த உத்வேகத்துடன் மூர்க்கத்துடன் வீசியது கண்டு வியப்பாக இருந்தது. நம்மிடம் இது போன்ற வீச்சாளர்கள் இல்லாமல் இல்லை. உமேஷ் யாதவ், வாரன் அரொன், பும்ரா போன்றோருக்கு தொடந்து வாய்ப்பளித்து இது போல் வளர்த்தெடுக்க இயலும். ஆனால் தோனி இருக்கும் வரை மோஹித் ஷர்மாக்களுக்கு தான் கொண்டாட்டம். போன உலகக் கோப்பையின் வார்ம் அப் ஆட்டம் ஒன்றில் மோஹித் பந்து வீசும் போது முதல் ஓவரிலே ஸ்லோ பந்து வீசினார். அதைப் பார்த்த வசீம் அக்ரம் கடுமையாய் விமர்சித்தார். வேகவீச்சாளன் பந்து புதிதாய் உள்ள போது வேகமாய் வீச வேண்டும். மெதுவாய் வீசுவது சுழலர்களின் வேலை என்றார். மோஹித் எல்லாம் பாகிஸ்தானில் இருந்து ஓட ஓட துரத்துவார்கள்.
ஒரு தொடரை வெல்வதோ தோற்பதோ பொருட்டல்ல; அடுத்த 2019 உலகக்கோப்பைக்கு தயாராவது தான் முக்கியம் என தோனி கூறி உள்ளார். அடுத்த 4 வருடங்களும் இதே அணி மாற்றமின்றி இதே போல் ஆடப் போகிறது என நினைக்க பயமாய் இருக்கிறது.  

கருத்துகள்

”தளிர் சுரேஷ்” இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையாக சொன்னீர்கள்! தோனியிடம் முன்பு போல திட்டமிடல் இல்லை! ஒரே அணியை தேர்வு செய்து வெறுப்பேற்றுகிறார். தொடர்ந்து சொதப்புவர்களுக்கே வாய்ப்பு தருகிறார்! புவனேஸ்வர், மோகித் பந்து வீசுவதை பார்க்க சகிக்க முடியவில்லை! அப்புறம் எப்படி ஜெயிக்க முடியும்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...