முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சில உறவுகள் மாறுவதில்லை



மாணவர்களுக்கு ஆசிரியர் மீதுள்ள பிரியம் தனித்துவமானது. மத்திய வர்க்க இளைஞர்கள் தம் பெற்றோருக்கு இணையாகவே ஆசிரியரைப் பார்க்கிறார்கள். நான் நான்கு வருடங்களுக்கு முன்பு பயிற்று வித்த மாணவர்களை இன்றும் அடிக்கடி பல இடங்களில் சந்திக்கிறேன். நான் குருநானக்கில் வேலை செய்யும் போது அஷ்வின் மற்றும் ஆண்டனி என இரு மாணவர்கள் இலக்கிய நாட்டம் கொண்டவர்களாய் இருந்தார்கள். ஆனால் இருவரும் இலக்கிய துறை மாணவர்கள் அல்ல. நான் ஒரு நாள் வகுப்பில் நீட்சே பற்றி குறிப்பிட்டேன். வகுப்பு முடிந்ததும் அஷ்வின் என்னைத் தேடி வந்து நீட்சே நிறைய கேட்டான். இலக்கியம், தத்துவம் பற்றி பேசினான். அவன் தால்ஸ்தாயின் “போரும் வாழ்வும்” படித்து வருவது பற்றி சொன்னான். தல்ஸ்யாயின் வாசகன் என்றதுமே அவனை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. பிறகு தினமும் நாங்கள் கல்லூரி வளாகங்களில் மணிக்கணக்காய் பேசியபடி இருப்போம்.

 ஒருமுறை நான் அவனிடம் சொன்னேன் “இந்த கல்லூரியில் எண்ணூறுக்கும் மேல் மாணவர்களும் ஆசிரியர்களும் இப்போது இருக்கிறார்கள். ஆனால் நாம் இருவர் மட்டுமே “போரும் வாழ்வும்” பற்றி இந்த தருணத்தில் பேசிக் கொண்டிருக்கிறோம். நம்மைத் தவிர யாருக்கும் இந்த உலகமோ இதன் உண்மையோ மொழியோ தெரியாது. நாம் தனியான யாரும் வரமுடியாத ஒரு உலகில் இப்போது இருந்து கொண்டிருக்கிறோம். இதை நினைக்க விசித்திரமாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது”. கல்லூரி முடிந்த பின்னும் இப்போதும் நாங்கள் அடிக்கடி சந்தித்து கொள்கிறோம். போன வருடம் Great Gatsby படம் வெளியான போது இருவருமாய் பார்க்க சென்றோம். அந்நாவல் பற்றியும் படம் பற்றியும் நிறைய பேசிக் கொண்டிருந்தோம்.
 ஆண்டனி தமிழ் நவீன நூல்கள் அதிகம் படிப்பான். ரொம்ப குறைவாய் பேசுவான். என்னைப் போல அவன் அழுத்தமானவன். மனதில் பட்டதை தயங்காமல் சொல்லுவான். அதனாலும் அவனது வாசிப்பினாலும் என் நண்பனானான். கல்லூரி முடிந்ததும் என் வண்டியில் அவனை ஏற்றிக் கொண்ட நூலகம் செல்வேன். சிலநாள் என் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருப்பான்.
கல்லூரி முடித்த பின் அவன் ஊடகவியலில் முதுகலை பட்டம் பெற்ற பின் இப்போது ஒரு டிவியில் வேலை செய்கிறான். நான் சமீபமாய் வேலைக்காய் முயன்று வந்தேன். அதை அவனிடம் குறிப்பிட்ட போது அவனாகவே முயன்று எனக்கு அவன் நிறுவனத்தில் ஒரு நேர்முகத்திற்கான வாய்ப்பு வாங்கித் தந்தான். எனக்கு உதவுவதில் அவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. இன்று வீடு திரும்பும் வழியில் ஒரு பி.பி.ஓவில் நுழைந்து என் ரெசியூமை கொடுத்து வேலை பற்றி விசாரிக்க சென்றிருந்தேன். அங்கு பார்த்தால் என் மாணவி ஒருவரை பார்த்தேன். மிகுந்த அன்புடன் என்னிடம் வந்து விசாரித்தாள். நான் அவளை அடையாளம் கண்டு கொண்டேன் என அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. பிறகு அவளாகவே என்னை மனிதவளத்துறைக்கு அழைத்துப் போய் அறிமுகம் செய்த தேவையான உதவிகளைச் செய்தாள். “இங்கே பயிற்சியாளர் வேலை கிடைத்தால் சேர்ந்து கொள்ளுங்கள். எனக்கு பயிற்சியாளராக நீங்கள் வந்து விடுங்கள்” என்றாள். மாணவர்கள் படித்து முடித்த பிறகு நம்மை பிறகு பார்க்கும் போதும் குழந்தைகளைப் போன்றே உணர்வதை, நம்மிடம் குழந்தைமையுடனே பேசுவதை கவனித்தேன். எவ்வளவு காலம் கடந்தாலும், எந்த இடத்துக்கு வந்தலும் சில உறவுகள் மாறுவதில்லை.

கருத்துகள்

తిరుపతి మహేష్ இவ்வாறு கூறியுள்ளார்…
arumai sir.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...