Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பிறந்தநாள் வாழ்த்துகள்

இன்று பிறந்தநாள் காணும் நண்பர்கள் போகன் சங்கர் மற்றும் வேடியப்பனுக்கு வாழ்த்துகளும் அன்பும்.

Image result for போகன் சங்கர்
நான் ஏற்கனவே ஒருமுறை எழுதியது போல் மிகுந்த மன எழுச்சி தரும், காட்சிபூர்வமான மொழியை கொண்டவர் போகன் சங்கர். சின்ன சின்ன உணர்வுகள், அன்றாட பிரச்சனைகள், எளிய சித்தரிப்புகளை தாண்டி மீண்டும் கவிதையை பிரம்மாண்டமான நாடகிய தருணங்கள், காவிய உணர்வுகள், வாழ்வின் துயரம் நோக்கிய திருப்பியவர். அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரது நகைச்சுவை ரயில் படுவேகமாய் தடத்தில் ஓடிக் கொண்டிருக்கும். இவரை கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார் என நினைத்து நாம் சிரிக்கும் போது அவர் அவரை கிண்டலடிக்க தொடங்குவார், சரி அவரைத் தானே என நாம் சுதாரிக்கும் போது அவர் நம்மை பகடி பண்ண துவங்கி இருப்பார். இதை உணராமல் நாம் சிரித்துக் கொண்டிருக்கக் கூடும். சரி இனி கவனமாய் இருப்போம் என நினைக்கும் போது போகன் சீரியசாய் முகத்தை வைத்துக் கொண்டு தன்னையே கேலி பண்ணி நம்மை சிரிக்கவா வேண்டாமா எனும் சங்கடத்தில் ஆழ்த்துவார். இப்படி வினாடிகள் நாலு தடங்கள் தாவும் பகடி ரயில் அவர்.

 Vediyappan M Munusamy's Profile Photo

வேடியப்பன் புத்தகம் விற்பது ஒரு தரித்திர செயல் என கருதப்பட்ட காலத்தில் ஒரு புத்தகக் கடையை ஆரம்பித்து சரியாய் சந்தைப்படுத்தி, வாசகர் தொடர்புகளை பெருக்கி அதை முதல் கட்டமாய் வெற்றி பெற வைத்தார். அடுத்த அங்கு ஒரு கூட்டம் நடத்துவதற்கான சிறு அரங்கு உருவாக்கினார். இதை அடுத்து புத்தகங்கள் பிரசுரிக்க துவங்கினார் எஸ்.ராவை முன்வைத்து சில நல்ல கூட்டங்கள், பயணங்கள் ஒருங்கிணைத்தார். ஒவ்வொன்றிலும் வெற்றி பெற்று அதன் மூலம் புத்தகக் கடையை தக்க வைத்தார். கூர்மையான வணிகர் அவர்.
வேடியப்பன் நல்ல புத்தகங்களை பரிந்துரை செய்யக் கூடியவரும் தான். சமீபத்தில் வந்த சிறந்த நூல்கள் என்னவென நம்பி கேட்கலாம். “சிறந்தஎன்றால் சமீபத்தில் அதிகமாய் கவனிக்கப்படும், ஆனால் நாம் அறிந்திராத, புத்தகங்கள் எனப் பொருள். இதில் அவரது தேர்வு சரியாக இருக்கும். அதே போல் அவரது கடை அரங்கில் கூட்டம் நடத்தினால் கூட்டத்துக்க்கான புரொமோஷனின்ல் அவரது பங்கும் சிறப்பாய் இருக்கும். டிஸ்கவரி புக் பேலசை விட நன்றாய் வடிவமைக்கப்பட்ட வேறு சில புத்தகக் கடைகளில் இந்த ஒருங்கிணைப்பு இராது. ஒரு எழுத்தாளர் பெயரைச் சொல்லிக் கேட்டால் கல்லாவில் இருக்கிறவரே ஏதோ உகாண்டாவின் பிரதமர் பெயரைக் கேட்டது போல் முழிப்பார். அதனால் தான் அவை டிஸ்கவரி அளவுக்கு வெற்றி பெறவில்லை.
வேடியப்பன் மேலும் பல முன்னேற்றங்களை காணட்டும்.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...