முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிறந்தநாள் வாழ்த்துகள்

இன்று பிறந்தநாள் காணும் நண்பர்கள் போகன் சங்கர் மற்றும் வேடியப்பனுக்கு வாழ்த்துகளும் அன்பும்.

Image result for போகன் சங்கர்
நான் ஏற்கனவே ஒருமுறை எழுதியது போல் மிகுந்த மன எழுச்சி தரும், காட்சிபூர்வமான மொழியை கொண்டவர் போகன் சங்கர். சின்ன சின்ன உணர்வுகள், அன்றாட பிரச்சனைகள், எளிய சித்தரிப்புகளை தாண்டி மீண்டும் கவிதையை பிரம்மாண்டமான நாடகிய தருணங்கள், காவிய உணர்வுகள், வாழ்வின் துயரம் நோக்கிய திருப்பியவர். அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரது நகைச்சுவை ரயில் படுவேகமாய் தடத்தில் ஓடிக் கொண்டிருக்கும். இவரை கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார் என நினைத்து நாம் சிரிக்கும் போது அவர் அவரை கிண்டலடிக்க தொடங்குவார், சரி அவரைத் தானே என நாம் சுதாரிக்கும் போது அவர் நம்மை பகடி பண்ண துவங்கி இருப்பார். இதை உணராமல் நாம் சிரித்துக் கொண்டிருக்கக் கூடும். சரி இனி கவனமாய் இருப்போம் என நினைக்கும் போது போகன் சீரியசாய் முகத்தை வைத்துக் கொண்டு தன்னையே கேலி பண்ணி நம்மை சிரிக்கவா வேண்டாமா எனும் சங்கடத்தில் ஆழ்த்துவார். இப்படி வினாடிகள் நாலு தடங்கள் தாவும் பகடி ரயில் அவர்.

 Vediyappan M Munusamy's Profile Photo

வேடியப்பன் புத்தகம் விற்பது ஒரு தரித்திர செயல் என கருதப்பட்ட காலத்தில் ஒரு புத்தகக் கடையை ஆரம்பித்து சரியாய் சந்தைப்படுத்தி, வாசகர் தொடர்புகளை பெருக்கி அதை முதல் கட்டமாய் வெற்றி பெற வைத்தார். அடுத்த அங்கு ஒரு கூட்டம் நடத்துவதற்கான சிறு அரங்கு உருவாக்கினார். இதை அடுத்து புத்தகங்கள் பிரசுரிக்க துவங்கினார் எஸ்.ராவை முன்வைத்து சில நல்ல கூட்டங்கள், பயணங்கள் ஒருங்கிணைத்தார். ஒவ்வொன்றிலும் வெற்றி பெற்று அதன் மூலம் புத்தகக் கடையை தக்க வைத்தார். கூர்மையான வணிகர் அவர்.
வேடியப்பன் நல்ல புத்தகங்களை பரிந்துரை செய்யக் கூடியவரும் தான். சமீபத்தில் வந்த சிறந்த நூல்கள் என்னவென நம்பி கேட்கலாம். “சிறந்தஎன்றால் சமீபத்தில் அதிகமாய் கவனிக்கப்படும், ஆனால் நாம் அறிந்திராத, புத்தகங்கள் எனப் பொருள். இதில் அவரது தேர்வு சரியாக இருக்கும். அதே போல் அவரது கடை அரங்கில் கூட்டம் நடத்தினால் கூட்டத்துக்க்கான புரொமோஷனின்ல் அவரது பங்கும் சிறப்பாய் இருக்கும். டிஸ்கவரி புக் பேலசை விட நன்றாய் வடிவமைக்கப்பட்ட வேறு சில புத்தகக் கடைகளில் இந்த ஒருங்கிணைப்பு இராது. ஒரு எழுத்தாளர் பெயரைச் சொல்லிக் கேட்டால் கல்லாவில் இருக்கிறவரே ஏதோ உகாண்டாவின் பிரதமர் பெயரைக் கேட்டது போல் முழிப்பார். அதனால் தான் அவை டிஸ்கவரி அளவுக்கு வெற்றி பெறவில்லை.
வேடியப்பன் மேலும் பல முன்னேற்றங்களை காணட்டும்.


கருத்துகள்

”தளிர் சுரேஷ்” இவ்வாறு கூறியுள்ளார்…
இரு நண்பர்களுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...