Skip to main content

வாழத் தகுதியற்ற ஊர்

Image result for inflation

பல வருடங்களுக்கு முன்பு “கற்றது தமிழ்” வெளியான போது சுஹாசினி ராமை பேட்டி எடுத்தார். அதில் ராம் இவ்வாறு சொன்னார்: “வரும் சில ஆண்டுகளில் ஓட்டலில் ஒரு கோப்பை காப்பி குடிப்பதற்கு நாம் ஒரு மூட்டை நிறைய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்ல நேரும்.” பணவீக்கம் பற்றி ராம் சொன்ன ஆருடம் மிகையானது என எனக்கு அப்போது தோன்றியது. சமீபத்தில் fullyfilmy யூடியூப் பக்கத்தில் ராமின் பேட்டியில் மீண்டும் இதே விசயத்தை லேசாய் தொட்டுப் பேசினார். பேட்டியாளர்: “சார் உங்களுக்கும் சர்வைவல் பிரச்சனை இருக்கிறதா?”
ராம்: “ஆமாம். அன்றாட செலவுகள், வாடகை எல்லாவற்றையும் சமாளிப்பது இப்போதும் பெரும்பாடு தான். யாருக்குத் தான் சர்வைவல் பிரச்சனை இன்று இல்லை? கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் தான் இருக்கிறது. ஆனால் என்னையும் உங்களையும் போல் இராது. அவர் அளவில் வேற லெவலில் அது இருக்கும். ஆனால் அவருக்கும் இன்று பணப்பிரச்சனை உள்ளது.”

 ஆனால் இப்போது … ராம் சொன்னது உண்மை என எனக்கு இப்போது நிச்சயமாய் தோன்றுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை எனும் உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் கைநிறைய சம்பாத்தாலும் வருட இறுதியில் பணம் சேர்த்து வைக்க முடியாது. சாப்பாடு, துணி, அன்றாடத் தேவைக்கான பொருட்களுக்கே பெரும்பகுதி வருமானம் விரயமாகிறது. ரொம்ப போராடி நீங்கள் சேர்த்து வைத்த பணம் கூட வருடத்துக்கு ஒருமுறை வியாதி வந்து சில வாரங்கள் மருத்துவமனையில் இருந்தால் மொத்தமாய் காலியாகி விடும். ஏனென்றால் கடந்த பத்து வருடங்களில் சின்ன சின்ன பொருட்களின் விலையே பல மடங்கு அதிகமாகி விட்டது. ஐம்பதினாயிரம் இருபதினாயிரம் என மதிப்பிழந்து விட்டது. ஒரு லட்சம் ஐம்பதினாயிரம் ஆகி விட்டது. குறிப்பாக கடந்த சில வருடங்களில் பணவீக்கம் நம் அடிவயிற்றில் பெட்ரோலாக புகுந்து குபுகுபுவென பற்றிக் கொண்டு எரிகிறது.
பணவீக்கத்தை குறைக்க இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் தாம் என்ன எனும் கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். ரூபாய் நோட்டுத் தடையால் நம் தட்டில் விழும் சோற்றின் விலை குறைந்ததா இல்லையா எனும் கேள்வியை நேரடியாய் எழுப்ப வேண்டும். இந்தியர்களின் பிரச்சனையே எதற்கும் எதிர்வினையாற்றாமல் மண்ணாந்தையாய் எப்போதும் இருப்பது தான். இந்திய வாக்காளர்களை எவ்வளவு வேண்டுமானாலும் சித்திரவதை பண்ணலாம். பத்து வருடங்கள் பொறுப்பார்கள். அதன் பின்னர் நிலைமை எப்படி இருந்தாலும் புதுக்கட்சிக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள். ஏதோ முடுக்கி விட்ட எந்திரம் போல் இருக்கிறார்கள் நம் வாக்காளர்கள்.. அந்த நம்பிக்கை தான் பா.ஜ.கவை இப்படி ஆட வைக்கிறது. மோடி மீண்டும் பிரதமர் ஆன பின் இந்த தேசத்தில் நம்மால் மூன்று வேளை சாப்பிட்டு வாடகை கொடுத்து வாழ முடியுமா என எனக்கு இப்போது ஐயம் ஏற்படுகிறது. எனக்கு மட்டுமல்ல, யாரிடம் பேசினாலும் “மீண்டும் மோடியா? ஐயய்யோ” என அலறுகிறார்கள். (ஆனால் தினமும் போட்டு அடிக்கும் குடிகார கணவனை பாதுகாக்கும் மனைவிமார் போல இவர்களே மோடிக்கு மீண்டும் வாக்களித்து கூடுதலாய் தம் வயிற்றில் அடித்துக் கொள்வார்கள் என்பதே உண்மை!)
இந்த தேசம் நாம் வாழத் தகுதியற்றதாய் போய் விட்டது. ஒரு நவீன தாது வருச பஞ்சத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். நகரங்களில் கடைகள் எப்போதும் திறந்திருக்கும். எங்கும் செல்வம் கொழிக்கும். யாராவது பார்களில் குடித்தும் பப்களில் ஆடிக் கொண்டும் இருப்பார்கள். பளபளப்பான கார்கள் வரிசை வரிசையாய் நகரும். ஆனால் மக்களுக்கு சாப்பிட பணம் இருக்காது. குடியிருக்க வீடிருக்காது. தம்மைச் சுற்றி பணத்தை அள்ளி செலவழிக்கும் ஒரு சில மக்களிடம் மட்டும் எப்படி பணம் வருகிறது என வியந்தபடி பெரும்பாலான மக்கள் சாலைகளில் அலைந்து திரிவார்கள். ஒரு பகுதியினரிடம் வீடுகள் இருக்கும். கார் இருக்கும். ஆனால் வங்கியில் கடனை திரும்ப செலுத்த முடியாது திகைப்பார்கள். இருக்கும் ஆனால் இருக்காது என்பது தான் புதிய தாதுவருச பஞ்சமாக இருக்கும்.
இந்த தேசத்தில் இனி இரு தரப்பினர் தாம் வாழ இயலும்:
1)   வெற்றிகரமான வியாபாரிகள்.
2)   வெளிநாடு சென்று பத்திருபது வருடங்கள் நிறைய சம்பாதித்து விட்டு திரும்புகிறவர்கள்.

வேறு எல்லாரும் எலிகளைப் போல் ஓடிப் போய் கடலில் குதிக்க வேண்டியது தான்!

Comments

இந்த தேசத்தில் இனி இரு தரப்பினர் தாம் வாழ இயலும் - அரசியல்வாதிகளை விட்டுவிட்டீர்களே. மற்றபடி கட்டுரையின் கருத்து ஏற்கத்தக்கது.
Mahesh said…
அருமையா பதிவு, கசப்பான உண்மை....இது ஒரு மெல்லிய கோடு மாதிரியானது, ஆனால் வேகமாக நிகழ்கிறது.
ராஜி said…
இருக்கும்... இருக்காது போல...

வாழலாம். ஆனா வாழமுடியாது

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...