Skip to main content

பெண்களுக்கு பேச்சு என்பது ஒரு கண்ணாடி

"பெண்களுக்கு பேச்சு என்பது கண்ணாடிமுன் நிற்பதுபோல என்று அவளுடன் பேசும்போது தோன்றும். கண்ணாடி அவளைச் சுருதி சுத்தமாகப் பிரதிபலித்தாகவேண்டும், அவ்வளவுதான். அவள் யாழ்ப்பாணத்தில் அவளுடைய இறந்தகாலத்தைப் பற்றியே பேச விரும்பினாள். அவளுடைய பள்ளி நாள்கள், தோழிகள், பார்த்த சினிமாக்கள், சண்டைகள்... அவள் பேசிய அனைத்தையும் சில சொற்றொடர்களாகச் சுருக்கிவிடமுடியும் என்று தோன்றியது. ‘நான் அழகானவள். நான் நல்லவள். எனக்கு ஒன்றுமே தெரியாது, நான் ஒரு சிறுமி.’ அந்தப் பாவனையை உண்மையான அங்கீகாரத்துடன் கேட்டிருக்கும் இரு கண்களும் அங்கீகரிக்கும் இரு கண்களும்தான் நான் அவளுக்கு"
சார்லஸ், "உலோகம்" (ஜெயமோகன்)

Comments