Skip to main content

எப்படி வாசிப்பது? (2)



5)   வாசிப்பு ஒரு பழக்கம். உடற்பயிற்சி போல. தினமும் குறிப்பிட்ட மணிநேரங்கள் படித்தால் சிரமம் தெரியாமல் படிக்க முடியும். ஆனால் அப்பழக்கம் விட்டுப் போனால் திரும்ப உட்கார்ந்து படிக்க முடியாது. கவனம் சிதறும். ஒரு நாளின் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாசிப்புக்கென ஒதுக்குங்கள். அப்போது மட்டும் படியுங்கள். அப்போது படிப்பதை மட்டும் செய்யுங்கள்.

6)   வாசிப்புக்கு தனிமை அவசியம். அதாவது தனித்திருப்பதல்ல. (ரெண்டும் வேறுவேறு) தொடர்ந்து யாரிடமாவது உரையாட வேண்டும் என மனம் தவித்தால் வாசிப்பு தடைபட்டுப் போகும். பேஸ்புக்கில் தீவிரமாய் இருப்பவர்கள் தம்மால் புத்தகம் வாசிக்க இயலவில்லை என வருந்துகிறார்கள். இதற்காகவே பேஸ்புக்கை விட்டு வனவாசம் செல்கிறார்கள். திரும்ப வந்து தாம் வனவாசத்தின் போது இவ்வளவு நூல்களைப் படித்தோம் என கூறுகிறார்கள். நான் நீண்ட காலமாய் பேஸ்புக்கில் இருக்கிறேன். இதுவரை அது எனக்கு தொந்தரவாக இருந்ததில்லை. ஏனெனில் உறவுகளை உருவாக்கி தொடர, யாரிடமாவது அரட்டை அடிக்க நான் அதை பயன்படுத்துவதில்லை. பேஸ்புக்கை நான் ஒரு செய்தித்தாளை போல் பயன்படுத்துகிறேன். சமூக வலைதளமாக அல்ல. என்னால் இப்போதும் மணிக்கணக்காய் தனியாய் இருக்க முடியும். (என்னைச் சுற்றி மனிதர்களும் வேண்டும்.) இத்தனிமையை நான் ரசிக்கிறேன். இதை மேலும் ரசிக்க நான் புத்தக வாசிப்பை பயன்படுத்துகிறேன். பேசிக் கொண்டே இருப்பவர் வாசிக்க முடியாது. மனம் முதலில் ஓய வேண்டும். அதற்கு வாய் ஓய வேண்டும்.
7)    வாசிக்க வாசிக்க நமக்கென ஒரு ரசனை, தேர்வு, ஆர்வம், ஒருவித பட்டியல் உருவாகும். நமக்கென பிரியப்பட்ட எழுத்தாளர்கள் தோன்றுவார்கள். இப்போது நீங்கள் உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டும். புதுப்பிக்க வேண்டும். (அல்லாவிட்டால் வாசிப்பு தட்டையாகி விடும்.) உங்களுக்கு உவப்பிராது என நம்பும் ஒரு துறையில் இருந்து ஒரு நூலை வாங்கி படியுங்கள். நீங்கள் ஒரு இடதுசாரியா? அமெரிக்க ஏகாதிபத்யத்தை நியாயப்படுத்தும் ஒரு நூலை புரட்டிப் பாருங்கள். தத்துவம், இலக்கியம், கலைக்கோட்பாடுகள் மட்டும் படிக்கிறவரா? தோட்டக்கலை, சோதிடம், உடற்பயிற்சி, புவியியல், அறிவியல் நூல்களை தேடி படியுங்கள். ஆரம்பத்தில் கடுப்படித்தாலும் இந்நூல்களில் ஒன்று உங்களுக்கு சட்டென அபாரமான ஒரு மனவிரிவைத் தரும்.
8)   வாசிப்பு நம் அறிவு, நம்பிக்கைகள், நுண்ணுர்வு ஆகியவை ஏற்படுத்தின சட்டகங்களை நொறுக்குவதற்கான ஒரு காரியம். இவை உடையும் போது மனம் விரியும். அப்போது பரவசம் கிடைக்கும். இதுவே வாசிப்பின் இன்பம். ஒரு உதாரணம் தருகிறேன். இரண்டு வகையான பெண்ணிய எழுத்து உண்டு. ஒன்றில், பெண்கள் முழுக்க நல்லவர்களாகவும் ஆண்கள் ஒடுக்குமுறையில் ஈடுபடும் கொடூரர்களாகவும் இருப்பார்கள். அல்லது இப்பெண்களுக்கு உதவும் நல்லவர்களாகவும் சில சமயம் இருப்பார்கள். இந்த இருமை கொண்ட பெண் எழுத்து அம்பையுடையது. இதைப் படிக்கையில் ஒரு ஆரம்பநிலை பெண்ணியவாதி புளகாங்கிதம் அடையலாம். ஆனால் நம் கருத்தை இன்னொருவர் ஆமோதிக்கிறார் என்பதில் உள்ள ஒரு குழு அங்கீகார குதூகலிப்பு மட்டுமே இது. இன்னொரு வகையான பெண்ணிய எழுத்தில் பெண்ணுக்குள் இருக்கும் முரண்களும் பேசப்படும். சில்வியா பிளாத்தின் “தி பெல் ஜார்” (The Bell Jar) நாவலை சொல்லலாம். தன் உடல் மீது ஆணாதிக்க சமூகமும் குடும்பமும் செலுத்தும் அடக்குமுறையை இந்நாவலின் நாயகி எஸ்தர் கிரீன்வுட் சாடுகிறாள்; தன் தாய் அத்தகைய ஒரு அடக்குமுறையை தன் மீது ஏவுவதை அவள் எதிர்க்கிறாள். ஆனால் அதேவேளை உடலை சுதந்திரமாய் வெளிப்படுத்தி பார்ட்டி கொண்டாட்டம் என மகிழ்ச்சியாய் இருக்கும் மேற்தட்டு பெண்கள் மீது கடும் குரோதத்தையும் அவள் வெளிப்படுத்துகிறாள். அதாவது, எஸ்தர் தன் தாயிடம் இருந்து தப்பித்துச் செல்லும் அதே வேளை உள்ளுக்குள் தன் தாயாகவும் இருக்கிறாள். மனித மனம் எப்படி முரண்பாடுகளின் முடிச்சாக இருக்கிறது என்பதை சில்வியா பிளாத் தன் கவிதைகளில் தொடர்ந்து பேசுவதை இந்நாவலில் இன்னும் உக்கிரமாய் செய்கிறார். ஒரு பெண்ணியவாதிக்கு இந்நாவல் ஏற்படுத்தும் அதிர்ச்சிகளும் குழப்பங்களும் முக்கியமானவை. அம்பை இதை செய்ய மாட்டார். அம்பை உங்கள் பெண்ணிய கழுத்துக்கு மசாஜ் செய்வார். சில்வியா பிளாத் உங்கள் பெண்ணிய கழுத்தைப் பற்றி சடேரென உங்களை வாகனங்கள் விரையும் சாலை நடுவே தள்ளி விடுவார்.
நீங்கள் வாசிப்பது ஒரு நல்ல நூலா இல்லையா என அறிய ஒரே வழி தான்: அது உங்கள் கழுத்தை மசாஜ் செய்தால் நல்ல நூல் இல்லை; கழுத்தை உடைத்தால் மிக நல்ல நூல்.

அவ்வளவு தான்! இனி வாசியுங்கள்.


Comments

Anonymous said…
உண்மை தான் சார் சில சமயம் ராஜேஷ்குமார் நாவல் கூட மன சோர்வை நீக்குகிறது
G. கோபி said…
தினமும் படிப்பது சுறுசுறுப்பான செயல். ஆனால் பணிச்சுமை காரணமாக உறக்கம் அதிகமாக தேவை என்பதால் திட்டமிட்டு தான் வாசிக்கிறேன். நாவல் போன்ற புத்தகங்களை விடுமுறையில் மட்டும்தான். சிறுகதை கட்டுரை போன்றவற்றை தினமும் நேரம் ஒதுக்கி வாசிக்கிறேன். வாசிப்பு பற்றி திட்டமிடலும் தேர்வும்தான் அவசியம்.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...