Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (2)


 Image result for நகுலன்
Image result for மனுஷ்ய புத்திரன்

ஹைக்கூவின் தத்துவம்
ஹைக்கூ இவ்வாறு ஜப்பானுக்கும் ஜென் பௌத்தத்தில் ஈடுபாடு கொண்டோருக்கும் மட்டுமே உரித்தானதாய் இருப்பது அதை ஐரோப்பிய கவிதைப் பரப்பில் இருந்து துண்டு பட வைத்தது. நமது தமிழ் நவீன கவிதை ஐரோப்பிய நவீன கவிதையின் ஒன்று விட்ட தம்பியாக இருப்பதனால் அதற்கு ஜென் பௌத்த சாயலோ ஹைக்கூவின் தொடர்போ பெரிதாய் இல்லை. யுவன், மனுஷ்யபுத்திரன், தேவதச்சன் ஆகியோர் ஜென் தாக்கம் கொண்ட நவீன கவிதை எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஹைக்கூ கோரும் மனநிலையில் இருந்து இக்கவிதைகளின் மனநிலை மாறுபட்டது. அது என்ன வித்தியாசம்?

ஹைக்கூவுக்கும் நவீன கவிதைக்குமான வித்தியாசம்

நவீன கவிதை ஒரு தனித்த பார்வையை, சிந்தனையை, ஒருவித திறப்பை நோக்கி வாசகனை செலுத்துவது. உதாரணமாய், நகுலனின் இந்த பிரசித்தமான குறுங்கவிதையை பாருங்கள்:
ராமசந்திரா என்று கேட்டேன்
ராமசந்திரன் என்றார்
எந்த ராமசந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை
ஒரு பெயரை ஒருவரது பெயராக சுலபத்தில் எடுத்துக் கொள்வதன் அபத்தத்தை பகடி செய்கிறது இக்கவிதை. இது முழுக்க சிந்தனையின் தளத்தில் நிகழ்கிறது. ஆனால் அன்றாட சிந்தனையை கடந்த ஒரு தனித்த பார்வையும் இது அளிக்கிறது.
அடுத்து மனுஷ்யபுத்திரனின் சிறு கவிதை ஒன்று.

சிவப்புப் பாவாடை

சிவப்புப்பாவாடை
வேண்டுமெனச்சொல்ல
அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்
விரலைக் கத்தியாக்கி
தன் தொண்டையறுத்து
பாவனை இரத்தம் பெருக்குகிறாள்
ஊமைச் சிறுமி

இதுவும் மொழியின் அபத்தம் பற்றின கவிதையே. சிவப்பு எனும் நிறத்தைக் காட்ட அவள் ஏன் குறிப்பாய் தொண்டையை அறுப்பதாய் நடிக்க வேண்டும்? ஆனால் அப்படி நிகழ்கிறது அங்கு பெருகும் பாவனை ரத்தம் அன்றாட வாழ்வில் வன்முறை எவ்வளவு சாதாரணமான யாரையும் உறுத்தாத ஒன்றாய் வெளிப்பட்டு மறைகிறது என்பதைக் காட்டுகிறது. குறிப்பாய், அது எப்படி நம் மொழியில் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, அதை இயல்பாய் நாம் எடுத்துக் கொள்வதில் எவ்வளவு அபத்தம் உள்ளது என இக்கவிதை பேசுகிறது. நகுலனின் கவிதை போல இக்கவிதை சிந்தனை வடிவிலானது அல்ல; காட்சிபூர்வமானது; ஆனாலும் இதுவும் நம் சிந்தனையை தூண்டுகிறது. இது நவீன கவிதையின் ஒரு மாறாத சுபாவம்: ஜராசந்தனைப் போல அதை எப்படித் தான் பிய்த்துப் போட்டாலும் அது நம் சிந்தனையை தூண்டியபடி இருக்கும்.


Comments

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...