முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ்: நடிப்பு எவ்வளவு சதவீதம்?


Image result for பிக்பாஸ் 2

எல்லா ரியாலிட்டி ஷோக்களையும் போலத் தான் பிக்பாஸும் – பாதி உண்மை, பாதி பொய். எல்லாமே பாதி பாதி – பாதி சந்தோஷம், பாதி கண்ணீர், பாதி கோபம், பாதி அரற்றல், பாதி வெறுப்பு, பாதி பழிவாங்கல். இம்முறை பிக்பாஸில் 2விலும் எல்லாம் பாதிக்கு பாதி நடிப்பு.
 நீங்கள் தாடி பாலாஜி, அவரது மனைவி நித்யாவின் நடவடிக்கைகளை மகத், டேனியல், வைஷ்ணவி, நித்யா, ரித்விகா, மமதி ஆகியோரின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டால் இது பளிச்சென புரியும். பாலாஜி, நித்யா அளவுக்கு பிறரால் சிறப்பாய் நடிக்க முடியவில்லை. ஆகையால் அவர்களின் சச்சரவுகள், மோதல்கள் முன்னவர்களின் பிணக்கு போல எடுபடவில்லை.

பாலாஜியின் நகைச்சுவை நடிப்பு என்றுமே என்னை சினிமாவில் கவர்ந்ததில்லை. ஆனால் பிக்பாஸில் தன் முன்னாள் மனைவியிடம் எரிச்சல் காட்டுவது, வெறுப்பு கொட்டுவது, கசப்பில் தளர்வது என நுணுக்கமாய் நல்ல கட்டுப்பாட்டுடன் நடிக்கிறார். நித்யாவும் நல்ல தேர்ச்சியாய் நடிக்கிறார். அவர்களின் மோதல் ஏன் நிஜமில்லை என்கிறேன்?
முதலில், இது ரியாலிட்டி ஷோ. “நீயா நானாவில்” கூட இயக்குநரின் ஆதிக்கம் அதிகம். யாரை எந்தளவு உணர்ச்சிவசப்பட வைக்கலாம், ஒரு மோதலை எந்த எல்லை வரை நீட்டிக்கலாம் என அவரே தீர்மானிக்கிறார் என்பதை நான் அனுபவரீதியாய் கண்டிருக்கிறேன். “பிக்பாஸ்” வேறெப்படியும் இருக்கும் என நான் நம்பவில்லை.
அடுத்து, பாலாஜியையும் நித்யாவையும் ஷோவுக்கு கொணர்ந்ததே அவர்களது நட்சத்திர குடும்ப மோதலை முன்வைத்து தான் – அதைக் கொண்டு மேலும் சிக்கலான உணர்ச்சி நாடகங்களை அரங்கேற்றி டி.ஆர்.பியை எகிற வைக்க திட்டமிடுகிறார்கள் என்பது உலகத்துக்கே தெரிந்த ஒன்று. அதை நிரூபிக்கும் வண்ணம் ஷோவில் இப்போது அவர்கள் வேண்டுமென்றே மோதுகிறார்கள், உணர்ச்சிவசப்படுகிறார்கள், ஒரு வாரம் நித்யாவை வில்லியாக காட்டினால், அடுத்த வாரம் பாலாஜியை வில்லனாக்குகிறார்கள். யார் எதை செய்தால் மக்களின் கவனத்தை திருப்பலாம் என்பதில் பிக்பாஸ் மிகுந்த தெளிவுடன் இருக்கிறார் – இப்போதைக்கு நித்யாவை அழ வைப்பது தான் பெண் பார்வையாளர்களை கவர சிறந்த வழி. அது மட்டுமல்ல, உலகத் தமிழ் பெண்கள் அத்தனை பேருக்கும் தம் கணவர்கள் மீதுள்ள வெறுப்புக்கு, கடுப்புக்கு வடிகாலாக பாலாஜியின் ஆணாதிக்க செயல்களை வடிவமைக்கிறார்கள். அதை பிக்பாஸ் கமல் கண்டிக்கையில் பார்வையாளர் பலருக்கும் ஒரு பெரிய சமூக அநீதிக்கு அவர் தீர்வு சொல்லும் திருப்தி ஏற்படுகிறது. தமிழ் சமூகத்தின் அத்தனை நாகரிகமில்லாத, வன்மமான கணவர்களையும் பிக்பாஸ் செருப்பால் வாங்கு வாங்கென்று வாங்கி விட்டதாய் தாய்க்குலங்கள் மகிழலாம்.
நடிப்புக்கும் இயல்பான நடத்தைக்குமான வித்தியாசம் உடல் மொழி. நாம் நமது உணர்ச்சிகளை குரலாலும் கைகளை உயர்த்தி சைகைகளாலும் காட்டுகிறோம். அதை விட அதிகமாய் நாம் மொழியை நம்பி இருக்கிறோம். ஆனால் ஒரு தேர்ந்த நடிகன் உடல்மொழியை நேர்த்தியாய் நுணுக்கமாய் பயன்படுத்துவான். கோபமாய் நடக்கையில் தன் தோள்களை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், தன் நடையின் பாணியில் எப்படி மன உணர்வை காட்ட வேண்டும் என அவன் அறிந்திருப்பான். பாலாஜியிடம் இந்த தேர்ச்சி மட்டுமல்ல, கேமரா பிரக்ஞையும் நிச்சயம் இருக்கிறது. ஆச்சரியமாய், நடிப்பு அனுபவம் அற்ற நித்யாவும் இந்த ஷோவில் நன்றாய் நடிக்கிறார்.
இவர்களைப் போல மஹத்தோ டேனியோ கோபப்பட்டு புலம்புகையில் இந்த அளவுக்கு அது ஆற்றல் மிக்கதாய் இல்லை. அவர்களிடம் பிரயத்தனம் தெரிகிறது. ஏனெனில் அவர்கள் தேர்ந்த நடிகர்கள் அல்ல.
இன்னொரு விசயம் பாலாஜி கெட்டவார்த்தை சொல்வதாய் நித்யா வைக்கும் குற்றச்சாட்டு. இது தன் பெயரைக் கெடுக்கும், மக்கள் மத்தியில் தன் பிம்பம் சரியும், இதனால் தான் வெளியேற்றப்படலாம் என பாலாஜி அறிய மட்டாரா? பிற பங்கேற்பாளர்கள் மிக மிக கவனமாய் வார்த்தைகளை வெளி விடுகையில் இவர் மட்டும் ஏன் இவ்வளவு வன்மத்தை கொட்டுகிறார்? இயக்குநரின் அறிவுறுத்தலின் படியே இந்த கெட்டவார்த்தை சமாச்சாரம் அரங்கேறுகிறது என்பது வெளிப்படை.
 முதல் வாரத்தில் நித்யா மீது எல்லாரும் புகார் கூறியும், பாலாஜியின் இழிவான பேச்சு பற்றி கமலே கண்டிக்கும் நிலை வந்த பின்னரும் அவர்கள் வெளியேற்றப்படும் நிலை கூட ஏற்படவில்லை. இதுவும் நான் மேலே குறிப்பிட்ட விசயத்துக்கு ஒரு சான்று.
ஆனால் இது தொலைக்காட்சி நாடகம் அல்ல – யாரும் வசனத்தை மனனம் செய்து மிகை உணர்ச்சியுடன் இதில் நடிப்பதில்லை. ஒருவிதத்தில் இந்த ஷோவின் வெற்றியே இப்படி எதார்த்தமாகவும் எதார்த்தமற்றதாகவும் ஒரே சமயம் அது இருப்பதில் உள்ளது.
ஒருவித நடுவாந்தரமான உண்மைத்தன்மை கொண்ட நிகழ்ச்சி இது. பார்க்கிற அத்தனை பேரும் இதை உணர்கிறார்கள். ஆனால் தமக்கு தரப்பட்ட ஒற்றை வரிக் கதையைக் கொண்டு இந்த பங்கேற்பாளர்கள் எப்படி எல்லாம் தம் கற்பனையாலும் சில நேரம் நிஜமாகவே லயித்து போயும் நடிப்பும் உண்மையுமாய் வெளிப்படுகிறார்கள் என காண்பதில் ஒரு தனி சுவாரஸ்யம் உள்ளது. சொல்லப் போனால் நிஜ நடிப்பை விட இந்த ரியாலிட்டி நடிப்பு இன்னும் உண்மையாய் தெரிகிறது.
உதாரணமாய், நித்யாவின் வேதனை நடிப்பென்றால் அதில் அவரது நிஜவாழ்வின் நினைவுகளும் தாம் உள்ளோடுகின்றன. பாலாஜியின் எரிச்சலும் அப்படியே நமக்குத் தெரிகிறது. எது திட்டமிட்டது எது நிஜமாய் இதயபூர்வமாய் வெளிப்படுவது எனும் குழப்பத்தை பிக்பாஸ் ஏற்படுத்துகிறது. இதுவே இந்நிகழ்ச்சியின் வெற்றி!

கருத்துகள்

Mu.Kasilingam இவ்வாறு கூறியுள்ளார்…
ரம்யா தான் பாலாஜீயின் மனைவியா இந்தனநாளா நித்தியா தான் பாலாஜீயின் மனைவின்னு நினைச்சிட்டுருந்தன் சரியா அந்த ஷோவை பார்த்துகுகிட்டு இருங்கீங்க சூப்பர் சார்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு கட்டத்துல நித்யாவை ரம்யாவா ஆக்கிட்டீங்க!!!
சிம்புள் இவ்வாறு கூறியுள்ளார்…
ரம்யா என்பதை நித்யா என மாற்றவும்
shiva இவ்வாறு கூறியுள்ளார்…
யாரோ யாருடைய மனைவியாகவோ இருந்து விட்டுப் போகட்டும் மிகத் துல்லியமான அவதானிப்பு இது பிக் ப்ளஸ் குறித்து

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...