முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திமுக தலைவர் மற்றும் எதிர்கால முதல்வருக்கு சில கோரிக்கைகள்


Image result for ஸ்டாலின்
திமுக தலைவர் எதிர்காலத்தில் தமிழக முதல்வர் ஆகும் போது அவர் செய்ய வேண்டியவை:
1)   நீங்கள் முதல்வரானதும் முதல் பணியாய், மதவாத தடை சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். இதன் படி யாராவது மதக்கலவரத்தை தூண்டும்படியாகவோ மக்களிடையே பிரிவினையை தூண்டும்படியாகவோ பேசினால் அவருக்கு எந்த விசாரணையும் இன்றி 10 வருடம் சிறைத்தண்டனை அளிக்க வேண்டும். பேசுவதோடு அன்றி செயல்படவும் செய்தால் அன்னாரின் வீடு, வங்கி இருப்புத் தொகை உள்ளிட்டவற்றை அரசு உடைமை ஆக்கிக் கொள்ளலாம். அவர் எதிர்காலத்தில் எப்போதுமே தமிழகத்தில் நுழைய முடியாதபடி தடை விதிக்க வேண்டும். அவர் கட்சி நடத்தினால் அக்கட்சி தடை செய்யப்பட வேண்டும்.

2)   ஊடகங்கள் தாம் எந்த அரசியல் கட்சிக்கும் பினாமி இல்லை என அரசுக்கு உறுதியளித்து ஒரு ஒப்பந்தத்தில் ஒப்பமிட வேண்டும். இதை மீறி, ஒரு சானலோ பத்திரிகையோ மாநில நலனுக்கு விரோதமான ஒரு தேசியக் கட்சிக்கு ஆதரவாய் செய்படுவதாய் நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் எந்த விசாரணையும் இன்றி பத்தாண்டுகள் சிறைவைக்கப்படலாம். அவர்களின் சொத்தையும் அரசு பறிமுதல் செய்யலாம். (ஆனால் ஊடகங்கள் வேறு மாநில கட்சிகளை ஆதரிப்பதில் தவறில்லை. மாநிலத்துக்கு வெளியே உள்ள கட்சிகளின் பினாமியை செயல்படுவதே முக்கிய குற்றம்.)
3)   ஒடுக்கப்பட்டோர் பொறுப்புரிமை சட்டம் இயற்றப்பட வேண்டும். இச்சட்டத்தின் படி, ஒரு ஊரில் உள்ள ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் பாதுகாப்புக்கு அத்தொகுதியின் ஆளும் கட்சி எம்.எல்.ஏயும் ஆட்சியாளர், உயர் காவலதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுமே பொறுப்பு. தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாய் மேற்சொன்ன நபர்கள் (எம்.எல்.ஏ, ஆட்சியாளர் உள்ளிட்டோர்) தம் பதவிகளை இழப்பர். அதாவது இதற்கு விசாரணை எல்லாம் இதற்கு தேவையில்லை. உடனடியாய் இந்நடவடிக்கை நிலுவையில் வந்து விடும். ஒருவேளை எம்.எல்.ஏ ஆளும் கட்சியை சேர்ந்தவர் அல்லாவிடில், சம்பவத்துக்குப் பின் ஆளும்கட்சி அத்தொகுதியில் அடுத்த பத்து வருடங்களுக்கு போட்டியிட ஆளுங்கட்சிக்கு தடை விதிக்கப்படும்.
4)   இந்த மூன்று சட்டங்களையும் நிறைவேற்றும் பொறுப்பை அரசு எடுத்துக் கொள்ளாமல் நீதிபதிகளின் அமர்வு ஒன்றை நியமித்து அந்த அமர்விடம் ஒப்படைக்க வேண்டும்.
5)   மது உற்பத்தி, ரியல் எஸ்டேட் போன்று பணம் கொழிக்கும் தொழில்களை அரசே எடுத்து நடத்த வேண்டும். இப்படிக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு புது நலத்திட்டங்களையும் கொண்டு வர வேண்டும்; இப்போது தனியார் வசம் குவியும் கோடானுகோடிக்கணக்கான பணம் அரசு கஜானாவுக்கு போக வேண்டும்.
6)   மக்கள் நல நோக்கில் அரசுக்கு எதிராக பேசவும் போராடவுமான உரிமையை அனைவருக்கும் வழங்கும் சட்டமொன்றை இயற்ற வேண்டும். சாதி மற்றும் மதவாத கட்சிகளுக்கு மட்டும் இந்த உரிமை இல்லை (அத்தகைய போராட்டங்கள் பிரிவினையை தூண்டும் என்பதால்). பொதுச்சொத்துக்கோ அமைதிக்கோ ஒரு சமூக நல போராட்டமோ கருத்தோ குந்தகம் விளைவுக்குமானால் அவரை கைது செய்வதற்கு காவல்துறை நீதிபதிகள், அறிவுஜீவிகள், சமூக செயல்பாட்டார்களால் ஆன ஒரு அமர்விடம் முறையிட்டு அனுமதி பெற வேண்டும். இச்சட்டத்தின் படி தீவிரவாத தடைச்சட்டம் போன்ற கடும் சட்டங்களை, மதவாதிகள், சாதியவாதிகள் அல்லாத யார் மீது போடப்படக் கூடாது.
7)   தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட ஊக்குவிக்கும் வண்ணம் அரசு பாடத்திட்ட சட்டம் இயற்றப்பட வேண்டும். இதன்படி, பன்னிரெண்டாம் வகுப்பில் வேறு பாடத்திட்டங்களின் கீழ் படித்து சான்றிதழ் பெறுவோர் ஒரு அரசு பொதுத் தேர்வெழுதி வெல்ல வேண்டும். அல்லாவிடில் அவர்களால் தமிழகத்தில் எங்கும் மேற்படிப்பு படிக்கவோ வேலை செய்யவோ இயலாது. இது மைய அரசின் கீழ் வரும் கல்வி அமைப்புகளுக்கும் பொருந்தும்.
8)   பட்டப்படிப்பு முடித்தோருக்கு பொருளாதார உத்தரவாத திட்டத்தை கொண்டு வர வேண்டும். இதன்படி, பட்டப்படிப்பு முடித்தோருக்கு அரசு மாதாமாதம் ஒரு கணிசமான தொகையை (சுமார் 10,000) உதவித் தொகையாய் நல்க வேண்டும்.
9)   இதே போல மாற்றுப்பாலினத்தோருக்கும் அரசு உதவித் தொகையை வழங்க வேண்டும்.
10) தமிழகத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். இப்படி செய்ய மறுக்கும் நிறுவனங்கள் மீது இரட்டிப்பு வரியை அரசு விதிக்க வேண்டும்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மையாகவே நீங்க தான் எழுதினீங்களா ?

1.எந்த விசாரணையும் இன்றி 10 வருடம் சிறைத்தண்டனை - பாசிசத்தை தான் காட்டுகிறது, அதில் ஜனநாயக உரிமை எங்கே ?

2. ஊடகங்கள் அவர்களது அரசியல் கட்சி/ கொள்கை சார்பை வெளிபடுத்த வேண்டும் என்று ஆணை இட்டாலே போதும் மக்கள் பார்த்து புரிந்து கொள்வார்கள் .. " ஒரு தேசியக் கட்சிக்கு ஆதரவாய் செய்படுவதாய் நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் எந்த விசாரணையும் இன்றி பத்தாண்டுகள் சிறைவைக்கப்படலாம்" - மறுபடியும் பாசிசம்

3. "விசாரணை எல்லாம் இதற்கு தேவையில்லை" எதற்கும் விசாரணை தேவை இல்லை என்றால் எங்கே போய் முட்டுவது ?

4. ஸ்டாலின் நீதிபதிகளுக்கு தன் அதிகாரத்தை கொடுத்துவிட்டு வீட்டிற்கு போகலாம்

5 "மது உற்பத்தி, ரியல் எஸ்டேட் போன்று பணம் கொழிக்கும் தொழில்களை அரசே எடுத்து நடத்த வேண்டும்" இதை வரவேற்கலாம்

6."சாதி மற்றும் மதவாத கட்சிகளுக்கு மட்டும் இந்த உரிமை இல்லை" சாதி மற்றும் மதவாத கட்சிகள் என்று எப்படி கண்டு பிடிப்பீர்கள் ?

7 நமக்கு சமசீர்கல்வி இருக்கிறது. நுழைவுத் தேர்வு தேவைப்படுவோர் வைதுக்கொள்ளட்டும், இப்படி ஒவ்வொரு மாநிலமும் நடத்த முற்பட்டால் நிலைமை விளங்கிவிடும் ... பிறகு மத்திய அரசு எடுத்து நடத்த ஆரம்பிக்கும் நிலைமை மிக மோசமாகும் ""இது மைய அரசின் கீழ் வரும் கல்வி அமைப்புகளுக்கும் பொருந்தும்." மத்திய அரசை எப்படி நீங்கள் கட்டுப்படுத்த முடியும் ?


8. 10,000 ருபாயை 10,00,000 பேருக்கு கொடுத்தால் மாதம் 1000 கோடி தேவைப்படும் ... வருடத்திற்கு 12000 கோடி தேவைப்படும்... எப்படி நீங்க நிதியை சமாளிப்பீர்கள் வேலையில்லாமல் காத்திருப்போர் ஒரு கோடி எப்படி நீங்கள் இவ்வளவு பேருக்கும் நிதியை திரட்டுவீர்கள் ?


9 and 10 இந்த பாயிண்ட்ஸ் ஓகே ...

மொத்தத்தில் உங்களது கோரிக்கைகள் பல சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும்...


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...