Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

திமுக தலைவர் மற்றும் எதிர்கால முதல்வருக்கு சில கோரிக்கைகள்


Image result for ஸ்டாலின்
திமுக தலைவர் எதிர்காலத்தில் தமிழக முதல்வர் ஆகும் போது அவர் செய்ய வேண்டியவை:
1)   நீங்கள் முதல்வரானதும் முதல் பணியாய், மதவாத தடை சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். இதன் படி யாராவது மதக்கலவரத்தை தூண்டும்படியாகவோ மக்களிடையே பிரிவினையை தூண்டும்படியாகவோ பேசினால் அவருக்கு எந்த விசாரணையும் இன்றி 10 வருடம் சிறைத்தண்டனை அளிக்க வேண்டும். பேசுவதோடு அன்றி செயல்படவும் செய்தால் அன்னாரின் வீடு, வங்கி இருப்புத் தொகை உள்ளிட்டவற்றை அரசு உடைமை ஆக்கிக் கொள்ளலாம். அவர் எதிர்காலத்தில் எப்போதுமே தமிழகத்தில் நுழைய முடியாதபடி தடை விதிக்க வேண்டும். அவர் கட்சி நடத்தினால் அக்கட்சி தடை செய்யப்பட வேண்டும்.

2)   ஊடகங்கள் தாம் எந்த அரசியல் கட்சிக்கும் பினாமி இல்லை என அரசுக்கு உறுதியளித்து ஒரு ஒப்பந்தத்தில் ஒப்பமிட வேண்டும். இதை மீறி, ஒரு சானலோ பத்திரிகையோ மாநில நலனுக்கு விரோதமான ஒரு தேசியக் கட்சிக்கு ஆதரவாய் செய்படுவதாய் நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் எந்த விசாரணையும் இன்றி பத்தாண்டுகள் சிறைவைக்கப்படலாம். அவர்களின் சொத்தையும் அரசு பறிமுதல் செய்யலாம். (ஆனால் ஊடகங்கள் வேறு மாநில கட்சிகளை ஆதரிப்பதில் தவறில்லை. மாநிலத்துக்கு வெளியே உள்ள கட்சிகளின் பினாமியை செயல்படுவதே முக்கிய குற்றம்.)
3)   ஒடுக்கப்பட்டோர் பொறுப்புரிமை சட்டம் இயற்றப்பட வேண்டும். இச்சட்டத்தின் படி, ஒரு ஊரில் உள்ள ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் பாதுகாப்புக்கு அத்தொகுதியின் ஆளும் கட்சி எம்.எல்.ஏயும் ஆட்சியாளர், உயர் காவலதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுமே பொறுப்பு. தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாய் மேற்சொன்ன நபர்கள் (எம்.எல்.ஏ, ஆட்சியாளர் உள்ளிட்டோர்) தம் பதவிகளை இழப்பர். அதாவது இதற்கு விசாரணை எல்லாம் இதற்கு தேவையில்லை. உடனடியாய் இந்நடவடிக்கை நிலுவையில் வந்து விடும். ஒருவேளை எம்.எல்.ஏ ஆளும் கட்சியை சேர்ந்தவர் அல்லாவிடில், சம்பவத்துக்குப் பின் ஆளும்கட்சி அத்தொகுதியில் அடுத்த பத்து வருடங்களுக்கு போட்டியிட ஆளுங்கட்சிக்கு தடை விதிக்கப்படும்.
4)   இந்த மூன்று சட்டங்களையும் நிறைவேற்றும் பொறுப்பை அரசு எடுத்துக் கொள்ளாமல் நீதிபதிகளின் அமர்வு ஒன்றை நியமித்து அந்த அமர்விடம் ஒப்படைக்க வேண்டும்.
5)   மது உற்பத்தி, ரியல் எஸ்டேட் போன்று பணம் கொழிக்கும் தொழில்களை அரசே எடுத்து நடத்த வேண்டும். இப்படிக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு புது நலத்திட்டங்களையும் கொண்டு வர வேண்டும்; இப்போது தனியார் வசம் குவியும் கோடானுகோடிக்கணக்கான பணம் அரசு கஜானாவுக்கு போக வேண்டும்.
6)   மக்கள் நல நோக்கில் அரசுக்கு எதிராக பேசவும் போராடவுமான உரிமையை அனைவருக்கும் வழங்கும் சட்டமொன்றை இயற்ற வேண்டும். சாதி மற்றும் மதவாத கட்சிகளுக்கு மட்டும் இந்த உரிமை இல்லை (அத்தகைய போராட்டங்கள் பிரிவினையை தூண்டும் என்பதால்). பொதுச்சொத்துக்கோ அமைதிக்கோ ஒரு சமூக நல போராட்டமோ கருத்தோ குந்தகம் விளைவுக்குமானால் அவரை கைது செய்வதற்கு காவல்துறை நீதிபதிகள், அறிவுஜீவிகள், சமூக செயல்பாட்டார்களால் ஆன ஒரு அமர்விடம் முறையிட்டு அனுமதி பெற வேண்டும். இச்சட்டத்தின் படி தீவிரவாத தடைச்சட்டம் போன்ற கடும் சட்டங்களை, மதவாதிகள், சாதியவாதிகள் அல்லாத யார் மீது போடப்படக் கூடாது.
7)   தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட ஊக்குவிக்கும் வண்ணம் அரசு பாடத்திட்ட சட்டம் இயற்றப்பட வேண்டும். இதன்படி, பன்னிரெண்டாம் வகுப்பில் வேறு பாடத்திட்டங்களின் கீழ் படித்து சான்றிதழ் பெறுவோர் ஒரு அரசு பொதுத் தேர்வெழுதி வெல்ல வேண்டும். அல்லாவிடில் அவர்களால் தமிழகத்தில் எங்கும் மேற்படிப்பு படிக்கவோ வேலை செய்யவோ இயலாது. இது மைய அரசின் கீழ் வரும் கல்வி அமைப்புகளுக்கும் பொருந்தும்.
8)   பட்டப்படிப்பு முடித்தோருக்கு பொருளாதார உத்தரவாத திட்டத்தை கொண்டு வர வேண்டும். இதன்படி, பட்டப்படிப்பு முடித்தோருக்கு அரசு மாதாமாதம் ஒரு கணிசமான தொகையை (சுமார் 10,000) உதவித் தொகையாய் நல்க வேண்டும்.
9)   இதே போல மாற்றுப்பாலினத்தோருக்கும் அரசு உதவித் தொகையை வழங்க வேண்டும்.
10) தமிழகத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். இப்படி செய்ய மறுக்கும் நிறுவனங்கள் மீது இரட்டிப்பு வரியை அரசு விதிக்க வேண்டும்.

Comments

Anonymous said…
உண்மையாகவே நீங்க தான் எழுதினீங்களா ?

1.எந்த விசாரணையும் இன்றி 10 வருடம் சிறைத்தண்டனை - பாசிசத்தை தான் காட்டுகிறது, அதில் ஜனநாயக உரிமை எங்கே ?

2. ஊடகங்கள் அவர்களது அரசியல் கட்சி/ கொள்கை சார்பை வெளிபடுத்த வேண்டும் என்று ஆணை இட்டாலே போதும் மக்கள் பார்த்து புரிந்து கொள்வார்கள் .. " ஒரு தேசியக் கட்சிக்கு ஆதரவாய் செய்படுவதாய் நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் எந்த விசாரணையும் இன்றி பத்தாண்டுகள் சிறைவைக்கப்படலாம்" - மறுபடியும் பாசிசம்

3. "விசாரணை எல்லாம் இதற்கு தேவையில்லை" எதற்கும் விசாரணை தேவை இல்லை என்றால் எங்கே போய் முட்டுவது ?

4. ஸ்டாலின் நீதிபதிகளுக்கு தன் அதிகாரத்தை கொடுத்துவிட்டு வீட்டிற்கு போகலாம்

5 "மது உற்பத்தி, ரியல் எஸ்டேட் போன்று பணம் கொழிக்கும் தொழில்களை அரசே எடுத்து நடத்த வேண்டும்" இதை வரவேற்கலாம்

6."சாதி மற்றும் மதவாத கட்சிகளுக்கு மட்டும் இந்த உரிமை இல்லை" சாதி மற்றும் மதவாத கட்சிகள் என்று எப்படி கண்டு பிடிப்பீர்கள் ?

7 நமக்கு சமசீர்கல்வி இருக்கிறது. நுழைவுத் தேர்வு தேவைப்படுவோர் வைதுக்கொள்ளட்டும், இப்படி ஒவ்வொரு மாநிலமும் நடத்த முற்பட்டால் நிலைமை விளங்கிவிடும் ... பிறகு மத்திய அரசு எடுத்து நடத்த ஆரம்பிக்கும் நிலைமை மிக மோசமாகும் ""இது மைய அரசின் கீழ் வரும் கல்வி அமைப்புகளுக்கும் பொருந்தும்." மத்திய அரசை எப்படி நீங்கள் கட்டுப்படுத்த முடியும் ?


8. 10,000 ருபாயை 10,00,000 பேருக்கு கொடுத்தால் மாதம் 1000 கோடி தேவைப்படும் ... வருடத்திற்கு 12000 கோடி தேவைப்படும்... எப்படி நீங்க நிதியை சமாளிப்பீர்கள் வேலையில்லாமல் காத்திருப்போர் ஒரு கோடி எப்படி நீங்கள் இவ்வளவு பேருக்கும் நிதியை திரட்டுவீர்கள் ?


9 and 10 இந்த பாயிண்ட்ஸ் ஓகே ...

மொத்தத்தில் உங்களது கோரிக்கைகள் பல சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும்...


Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...