முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திமுக தலைவர் மற்றும் எதிர்கால முதல்வருக்கு சில கோரிக்கைகள்


Image result for ஸ்டாலின்
திமுக தலைவர் எதிர்காலத்தில் தமிழக முதல்வர் ஆகும் போது அவர் செய்ய வேண்டியவை:
1)   நீங்கள் முதல்வரானதும் முதல் பணியாய், மதவாத தடை சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். இதன் படி யாராவது மதக்கலவரத்தை தூண்டும்படியாகவோ மக்களிடையே பிரிவினையை தூண்டும்படியாகவோ பேசினால் அவருக்கு எந்த விசாரணையும் இன்றி 10 வருடம் சிறைத்தண்டனை அளிக்க வேண்டும். பேசுவதோடு அன்றி செயல்படவும் செய்தால் அன்னாரின் வீடு, வங்கி இருப்புத் தொகை உள்ளிட்டவற்றை அரசு உடைமை ஆக்கிக் கொள்ளலாம். அவர் எதிர்காலத்தில் எப்போதுமே தமிழகத்தில் நுழைய முடியாதபடி தடை விதிக்க வேண்டும். அவர் கட்சி நடத்தினால் அக்கட்சி தடை செய்யப்பட வேண்டும்.

2)   ஊடகங்கள் தாம் எந்த அரசியல் கட்சிக்கும் பினாமி இல்லை என அரசுக்கு உறுதியளித்து ஒரு ஒப்பந்தத்தில் ஒப்பமிட வேண்டும். இதை மீறி, ஒரு சானலோ பத்திரிகையோ மாநில நலனுக்கு விரோதமான ஒரு தேசியக் கட்சிக்கு ஆதரவாய் செய்படுவதாய் நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் எந்த விசாரணையும் இன்றி பத்தாண்டுகள் சிறைவைக்கப்படலாம். அவர்களின் சொத்தையும் அரசு பறிமுதல் செய்யலாம். (ஆனால் ஊடகங்கள் வேறு மாநில கட்சிகளை ஆதரிப்பதில் தவறில்லை. மாநிலத்துக்கு வெளியே உள்ள கட்சிகளின் பினாமியை செயல்படுவதே முக்கிய குற்றம்.)
3)   ஒடுக்கப்பட்டோர் பொறுப்புரிமை சட்டம் இயற்றப்பட வேண்டும். இச்சட்டத்தின் படி, ஒரு ஊரில் உள்ள ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் பாதுகாப்புக்கு அத்தொகுதியின் ஆளும் கட்சி எம்.எல்.ஏயும் ஆட்சியாளர், உயர் காவலதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுமே பொறுப்பு. தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாய் மேற்சொன்ன நபர்கள் (எம்.எல்.ஏ, ஆட்சியாளர் உள்ளிட்டோர்) தம் பதவிகளை இழப்பர். அதாவது இதற்கு விசாரணை எல்லாம் இதற்கு தேவையில்லை. உடனடியாய் இந்நடவடிக்கை நிலுவையில் வந்து விடும். ஒருவேளை எம்.எல்.ஏ ஆளும் கட்சியை சேர்ந்தவர் அல்லாவிடில், சம்பவத்துக்குப் பின் ஆளும்கட்சி அத்தொகுதியில் அடுத்த பத்து வருடங்களுக்கு போட்டியிட ஆளுங்கட்சிக்கு தடை விதிக்கப்படும்.
4)   இந்த மூன்று சட்டங்களையும் நிறைவேற்றும் பொறுப்பை அரசு எடுத்துக் கொள்ளாமல் நீதிபதிகளின் அமர்வு ஒன்றை நியமித்து அந்த அமர்விடம் ஒப்படைக்க வேண்டும்.
5)   மது உற்பத்தி, ரியல் எஸ்டேட் போன்று பணம் கொழிக்கும் தொழில்களை அரசே எடுத்து நடத்த வேண்டும். இப்படிக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு புது நலத்திட்டங்களையும் கொண்டு வர வேண்டும்; இப்போது தனியார் வசம் குவியும் கோடானுகோடிக்கணக்கான பணம் அரசு கஜானாவுக்கு போக வேண்டும்.
6)   மக்கள் நல நோக்கில் அரசுக்கு எதிராக பேசவும் போராடவுமான உரிமையை அனைவருக்கும் வழங்கும் சட்டமொன்றை இயற்ற வேண்டும். சாதி மற்றும் மதவாத கட்சிகளுக்கு மட்டும் இந்த உரிமை இல்லை (அத்தகைய போராட்டங்கள் பிரிவினையை தூண்டும் என்பதால்). பொதுச்சொத்துக்கோ அமைதிக்கோ ஒரு சமூக நல போராட்டமோ கருத்தோ குந்தகம் விளைவுக்குமானால் அவரை கைது செய்வதற்கு காவல்துறை நீதிபதிகள், அறிவுஜீவிகள், சமூக செயல்பாட்டார்களால் ஆன ஒரு அமர்விடம் முறையிட்டு அனுமதி பெற வேண்டும். இச்சட்டத்தின் படி தீவிரவாத தடைச்சட்டம் போன்ற கடும் சட்டங்களை, மதவாதிகள், சாதியவாதிகள் அல்லாத யார் மீது போடப்படக் கூடாது.
7)   தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட ஊக்குவிக்கும் வண்ணம் அரசு பாடத்திட்ட சட்டம் இயற்றப்பட வேண்டும். இதன்படி, பன்னிரெண்டாம் வகுப்பில் வேறு பாடத்திட்டங்களின் கீழ் படித்து சான்றிதழ் பெறுவோர் ஒரு அரசு பொதுத் தேர்வெழுதி வெல்ல வேண்டும். அல்லாவிடில் அவர்களால் தமிழகத்தில் எங்கும் மேற்படிப்பு படிக்கவோ வேலை செய்யவோ இயலாது. இது மைய அரசின் கீழ் வரும் கல்வி அமைப்புகளுக்கும் பொருந்தும்.
8)   பட்டப்படிப்பு முடித்தோருக்கு பொருளாதார உத்தரவாத திட்டத்தை கொண்டு வர வேண்டும். இதன்படி, பட்டப்படிப்பு முடித்தோருக்கு அரசு மாதாமாதம் ஒரு கணிசமான தொகையை (சுமார் 10,000) உதவித் தொகையாய் நல்க வேண்டும்.
9)   இதே போல மாற்றுப்பாலினத்தோருக்கும் அரசு உதவித் தொகையை வழங்க வேண்டும்.
10) தமிழகத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். இப்படி செய்ய மறுக்கும் நிறுவனங்கள் மீது இரட்டிப்பு வரியை அரசு விதிக்க வேண்டும்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மையாகவே நீங்க தான் எழுதினீங்களா ?

1.எந்த விசாரணையும் இன்றி 10 வருடம் சிறைத்தண்டனை - பாசிசத்தை தான் காட்டுகிறது, அதில் ஜனநாயக உரிமை எங்கே ?

2. ஊடகங்கள் அவர்களது அரசியல் கட்சி/ கொள்கை சார்பை வெளிபடுத்த வேண்டும் என்று ஆணை இட்டாலே போதும் மக்கள் பார்த்து புரிந்து கொள்வார்கள் .. " ஒரு தேசியக் கட்சிக்கு ஆதரவாய் செய்படுவதாய் நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் எந்த விசாரணையும் இன்றி பத்தாண்டுகள் சிறைவைக்கப்படலாம்" - மறுபடியும் பாசிசம்

3. "விசாரணை எல்லாம் இதற்கு தேவையில்லை" எதற்கும் விசாரணை தேவை இல்லை என்றால் எங்கே போய் முட்டுவது ?

4. ஸ்டாலின் நீதிபதிகளுக்கு தன் அதிகாரத்தை கொடுத்துவிட்டு வீட்டிற்கு போகலாம்

5 "மது உற்பத்தி, ரியல் எஸ்டேட் போன்று பணம் கொழிக்கும் தொழில்களை அரசே எடுத்து நடத்த வேண்டும்" இதை வரவேற்கலாம்

6."சாதி மற்றும் மதவாத கட்சிகளுக்கு மட்டும் இந்த உரிமை இல்லை" சாதி மற்றும் மதவாத கட்சிகள் என்று எப்படி கண்டு பிடிப்பீர்கள் ?

7 நமக்கு சமசீர்கல்வி இருக்கிறது. நுழைவுத் தேர்வு தேவைப்படுவோர் வைதுக்கொள்ளட்டும், இப்படி ஒவ்வொரு மாநிலமும் நடத்த முற்பட்டால் நிலைமை விளங்கிவிடும் ... பிறகு மத்திய அரசு எடுத்து நடத்த ஆரம்பிக்கும் நிலைமை மிக மோசமாகும் ""இது மைய அரசின் கீழ் வரும் கல்வி அமைப்புகளுக்கும் பொருந்தும்." மத்திய அரசை எப்படி நீங்கள் கட்டுப்படுத்த முடியும் ?


8. 10,000 ருபாயை 10,00,000 பேருக்கு கொடுத்தால் மாதம் 1000 கோடி தேவைப்படும் ... வருடத்திற்கு 12000 கோடி தேவைப்படும்... எப்படி நீங்க நிதியை சமாளிப்பீர்கள் வேலையில்லாமல் காத்திருப்போர் ஒரு கோடி எப்படி நீங்கள் இவ்வளவு பேருக்கும் நிதியை திரட்டுவீர்கள் ?


9 and 10 இந்த பாயிண்ட்ஸ் ஓகே ...

மொத்தத்தில் உங்களது கோரிக்கைகள் பல சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும்...


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...