Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

“தவமாய் தவமிருந்து”


Related image

“தவமாய் தவமிருந்து” பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்றரை மணி நேரப் படம். சோகத்தையும் செண்டிமெண்டையும் பிழிகிறார்கள். சண்டைக்காட்சி, நகைச்சுவை போன்ற திணிப்புகளோ வில்லனோ நாயகனுக்கான நேரடி சவால்களோ இல்லை. ஆனால் நேரம் போவதே தெரியாமல் பார்க்க வைக்கிறார்கள். அதற்கு ஒரு காரணம் சாமர்த்தியமான திரைக்கதை - பத்து நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு சிக்கல் வருகிறது – அதற்கான தீர்வு, அத்தீர்வு பயனளிக்கிறதா, இல்லையென்றால் வேறு என்ன தீர்வுகள் உண்டு என கதை நகர்கிறது.

 துவக்க காட்சிகள் ஒன்றில் ராஜ்கிரண் தன் பிள்ளைகளுக்கு தீபாவளி புதுத்துணி, பட்டாசு வாங்க வேண்டும். பணமில்லை. அப்போது ஒரு அரசியல் தலைவரின் வருகையை ஒட்டி போஸ்டர் ஆர்டர் வருகிறது. ராஜ்கிரண் அதை எடுத்து மும்முரமாய் செய்து முடிக்கிறார். இரவில் அதை ஒப்படைத்து பணம் வாங்க நினைக்கும் போது தலைவர் வரவில்லை, அதனால் போஸ்டர்கள் வேண்டாம் என மறுக்கிறார்கள். “இல்லை இந்த பணத்தை நம்பித் தான் இருக்கிறேன். தயவு செஞ்சு வாங்கிக்கிங்க” என கெஞ்சுகிறார். மறுதரப்பு மறுத்து போனை துண்டிக்கிறது. ராஜ்கிரண் தளர்ந்து போய் நாற்காலியில் சாய்கிறார். அப்போது நமக்கும் சேர்ந்து மனம் பதறுகிறது. எப்படியாவது அவருக்கு பணம் கிடைத்திடாதா என ஏங்குகிறோம். அடுத்து, ராஜ்கிரண் தன் பிரஸ் வேலையாளிடம் தன்னிடம் உள்ள சொற்ப பணத்தைக் கொடுத்து பண்டிகை கொண்டாட சொல்கிறார். ஆனால் அவரோ முதலாளியின் நெருக்கடியை உணர்ந்து பணத்தை திரும்பத் தருகிறார். ஆனால் இப்போது பிரச்சனை தீரவில்லை. இன்னும் பணம் வேண்டுமே! தெரிந்தவரிடம் போய் கடன் கேட்கிறார். “தீபாவளின்னா எல்லாருக்கும் செலவிருக்கும்ணே! இப்போ போய் கேட்கிறீங்களே” என்று மறுக்கிறார்கள். அப்போது ஒரு போன் அழைப்பு வருகிறது. போஸ்டர் ஒட்ட ஆள் வேண்டும். கூலி ஆயிரம் ரூபாய். அவர் சென்று வேலையாளை அழைத்து வந்து அந்த ஆர்டரை எடுத்துக் கொண்டு இரவெல்லாம் உழைத்து பணத்தைப் பெற்று புதுத் துணி எடுத்து, பட்டாசு வாங்கி வீட்டுக்குப் போய் பகலெல்லாம் அலுப்பு தீர படுத்துறங்குகிறார்.
இந்த காட்சித் தொடர் (sequence) நெகிழ்வாகவும் வேகமாகவும் போகிறது. ஒரு பிரச்சனை எழுந்து அதற்கு தீர்வு கிடைத்து விடும் போது பார்வையாளர்களும் சுலபத்தில் பாத்திரத்துடன் ஒன்றி விடுகிறார்கள்.
மற்றொரு அருமையான காட்சி பத்மபிரியா பிரசவமாகி ஆஸ்பத்திரியில் இருக்க, கட்டணம் செலுத்த பணமின்றி சேரன் அலைய, அவரது ராஜ்கிரண் வந்து பணம் செலுத்திப் போவது. ராஜ்கிரணுக்கு தன் மகனுக்கு திருமணமானது, குழந்தை பிறந்துள்ளது அதுவரை தெரியாது. ஆகையால் அவர் வந்து உதவும் சாத்தியம் உள்ளதாகவே நாம் எண்ண மாட்டோம். ஆனால் ராஜ்கிரண் உதவுவதற்கு ஒரு வாய்ப்பை அமைத்து அழகான எதிர்பாரா திருப்பத்தை சேரன் தந்திருப்பார்.
இப்படி, காட்சிக்குக் காட்சி நம்மை வருந்திக் கலங்க வைத்து உடனே நிம்மதியாக பெருமூச்சு விடவும் வைக்கிறார்கள். “குக்கூ” போன்ற படங்களில் வருவது போல இதில் யாரும் தொடர்ந்து துன்பம் மட்டும் படுவதில்லை. அப்படி வந்தால் படம் இழுவையாகும். துன்பத்துக்கு அடுத்தபடியாய் அதில் இருந்து தற்காலிக விடுதலை. அதை அடுத்து இன்னொரு பிரச்சனை. இதில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் எனும் கேள்வி…. இந்த பாணி காட்சி அமைப்பில் பாக்யராஜ் தான் உஸ்தாத். பாக்யராஜின் ஒரு படத்தில் அவர் வாழ்க்கை வெறுத்துப் போய் தற்கொலை பண்ணுவதற்காய் மலை மீது ஏறுவார். உண்மையிலேயே குதித்து விடுவாரோ என பார்வையாளர்கள் கையை பிசைவார்கள். மலை உச்சியை அடைந்து விடுவார். அடுத்த அடியை எடுத்து வைத்தால் பள்ளத்துக்கு போகாமல் நேராக ஒரு மேட்டுக்கு சென்று விடுவார். அந்த மலையின் அமைப்பு அப்படி. ஒரு துன்பியல் காட்சி சட்டென நகைச்சுவையாகி விடும். அதுவும் பாக்யராஜின் உடல்மொழிக்கு இது அசத்தலாக பொருந்தி விடும்.
காட்சி அமைப்பில் சேரனும் பாக்ய்ராஜுக்கு அடுத்தபடியாய் ஒரு சின்ன உஸ்தாத் தான்.

Comments

Anonymous said…
I think the admin of this web site is truly working hard for
his website, as here every stuff is quality based stuff.

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...