முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மரணக் கவிதைகள்


ஹைடெக்கர் குறித்த எனது ஆங்கில நூலின் ஒரு அத்தியாயத்தில் தமிழின் முக்கிய கவிஞர்களுக்கு மரணம் மீதுள்ள பிரேமையை ஹைடெக்கர் வழியாய் நாம் எப்படி புரிவது என விவாதிக்கிறேன். அதற்காக சில கவிதைகளை மொழியாக்கினேன். ஒன்று இது.
மனுஷ்யபுத்திரனின் சமீபத்தைய ஒரு அற்புத காதல் கவிதை:
She was speaking about the
lover who was no more:
“Tomorrow is his
birthday.
Mine used to be
the first wishes bestowed 
on him.
For this,
he would wait,
lying low
from other wishers
Today he keeps absconding 
from me too
But after his death
he hasn’t aged
not even by a day.
His age is unliving
like a preserved butterfly.
When he left, 
I was a year
younger to him.
Now I am 
four years older than him.
I am perplexed 
how oneday 
when I grey
he might posture 
as young as my son.”
Death is youth.
Death is undying.
இறந்துபோன காதலனைப்
பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள்:
"
நாளை அவனுக்கு
பிறந்த தினம்
எப்போதும் முதல் வாழ்த்து
என்னுடையதாகவே இருக்கும்
அதற்காகவே அவன்
யாரும் முதலில் வாழ்த்திவிடாமல்
தலைமறைவாக காத்திருப்பான்
இன்று எனக்கும் அவன்
தலைமறைவாக இருக்கிறான்
ஆனால் அவன் இறந்தபிறகு
ஒரு நாள் கூட
அவனுக்கு வயதுகூடவே இல்லை
அவன் வயது
பாடம் செய்யப்பட்ட ஒரு வண்ணத்துப்பூச்சி போல
அங்கேயே நின்றுவிட்டது
அவன் இறக்கும்போது
நான் அவனைவிட ஒருவயது
இளையவளாக இருந்தேன்
இப்போது அவனைவிட
நான்கு வயது மூத்தவளாக இருக்கிறேன்
எனக்கு முதுமை வரும்போது
அவன் எனக்கு மகனின் வயதில்
அதே இளமையில் நின்றுகொண்டிருப்பான் என்பது
என்னை திகைக்க வைக்கிறது"
மரணம் என்பது இளமை
மரணம் என்பது அழிவின்மை


கருத்துகள்

gomathy இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கவிதையும் இதற்கு முந்தய கவிதையும் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. நல்ல முயற்சி . இக்கவிதைகளுக்கு அவர்கள் கொடுத்த தலைப்புக்களையும் தரலாமே.
அன்புடன்
செல்வராஜ்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.