முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மரணக் கவிதைகள்


ஹைடெக்கர் குறித்த எனது ஆங்கில நூலின் ஒரு அத்தியாயத்தில் தமிழின் முக்கிய கவிஞர்களுக்கு மரணம் மீதுள்ள பிரேமையை ஹைடெக்கர் வழியாய் நாம் எப்படி புரிவது என விவாதிக்கிறேன். அதற்காக சில கவிதைகளை மொழியாக்கினேன். ஒன்று இது.
மனுஷ்யபுத்திரனின் சமீபத்தைய ஒரு அற்புத காதல் கவிதை:
She was speaking about the
lover who was no more:
“Tomorrow is his
birthday.
Mine used to be
the first wishes bestowed 
on him.
For this,
he would wait,
lying low
from other wishers
Today he keeps absconding 
from me too
But after his death
he hasn’t aged
not even by a day.
His age is unliving
like a preserved butterfly.
When he left, 
I was a year
younger to him.
Now I am 
four years older than him.
I am perplexed 
how oneday 
when I grey
he might posture 
as young as my son.”
Death is youth.
Death is undying.
இறந்துபோன காதலனைப்
பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள்:
"
நாளை அவனுக்கு
பிறந்த தினம்
எப்போதும் முதல் வாழ்த்து
என்னுடையதாகவே இருக்கும்
அதற்காகவே அவன்
யாரும் முதலில் வாழ்த்திவிடாமல்
தலைமறைவாக காத்திருப்பான்
இன்று எனக்கும் அவன்
தலைமறைவாக இருக்கிறான்
ஆனால் அவன் இறந்தபிறகு
ஒரு நாள் கூட
அவனுக்கு வயதுகூடவே இல்லை
அவன் வயது
பாடம் செய்யப்பட்ட ஒரு வண்ணத்துப்பூச்சி போல
அங்கேயே நின்றுவிட்டது
அவன் இறக்கும்போது
நான் அவனைவிட ஒருவயது
இளையவளாக இருந்தேன்
இப்போது அவனைவிட
நான்கு வயது மூத்தவளாக இருக்கிறேன்
எனக்கு முதுமை வரும்போது
அவன் எனக்கு மகனின் வயதில்
அதே இளமையில் நின்றுகொண்டிருப்பான் என்பது
என்னை திகைக்க வைக்கிறது"
மரணம் என்பது இளமை
மரணம் என்பது அழிவின்மை


கருத்துகள்

gomathy இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கவிதையும் இதற்கு முந்தய கவிதையும் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. நல்ல முயற்சி . இக்கவிதைகளுக்கு அவர்கள் கொடுத்த தலைப்புக்களையும் தரலாமே.
அன்புடன்
செல்வராஜ்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.