முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோமதி மாரிமுத்து சர்ச்சை: இரண்டு தேசியவாதங்களின் மோதல் (2)

Image result for pt usha and other athletesImage result for indian army
ஜார்ஜ் ஆர்வல் சொன்னது போல விளையாட்டு என்பது ஒரு தேசியவாத பெருமித குறியீடு. பெருமாள் முருகனின் நாவல்கள் இன்று உலகம் முழுக்க படிக்கப்படுகின்றன. ஆனால் யாரும் அவரது எழுத்தை தேச பிரதிநுத்துவமாய் பார்க்க மாட்டார்கள். ஆனால் விளையாட்டு வீரன் தனது விருப்பத்துக்காக, பெருமைக்காக ஆடி சாதித்தால் அது தேசத்தின் சாதனையாய் பார்க்கப்படும். ஏன் என்பதை ஆர்வல் விளக்குகிறார். 

முந்தைய காலத்தில் ஒரு தேசத்தை பிரநித்துவபடுத்தியது அதன் ராணுவம். ஆனால் ஜனநாயக யுகத்தில், இரண்டு உலகப்போர்களுக்குப் பிறகு, நிலைமையே வேறு. ஓர் அளவுக்கு மேலாக நீங்கள் ராணுவத்தை முன்னிறுத்த முடியாது. ஆக இரண்டு தேசங்கள் குறியீட்டு ரீதியாய் மோதி தமது முன்னிலையை சித்தரிக்க விளையாட்டுப் போட்டிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. பெரிய ஆட்ட அரங்குகள் நிர்மாணிக்கப்பட்டு அங்கு மக்கள் குழுமி தங்கள் தேசத்துக்காக கூவி கூச்சலிட்டு ஆதரவு தெரிவிக்க வசதிகள் பண்ணப்படுகின்றன. இப்படித் தான் ஜனநாயக நாடுகளில் தேசியம் கட்ட்டமைக்கப்படுகிறது. ராணுவத்துக்கு அடுத்தபடியாய் விளையாட்டு வீரர்கள் அரசின் ஏஜெண்டுகளாய் காணப்படுகிறார்கள். ஆகையால் சர்வதேச அரங்கில் ஆடப்படும் ஒரு விளையாட்டில் பங்கேற்கும் ஒருவர் புறக்கணிக்கப்படுகிறார் எனும் வாதமே அபத்தமானது. அவர்கள் சற்று குறைவாக பாதுகாக்கப்படலாம், ஆனால் அரசு ஒருபோதும் தன் ஏஜெண்டுகளை முழுக்க கைவிடாது. புதுமைப்பித்தனை அரசாங்கம் சாக விட்டது போல பி.டி உஷாவையோ கர்ணம் மல்லேஸ்வரியையோ சாக விடாது. அரசு மட்டுமல்ல நாமும் கூட நமது தேசியவாத உணர்வின் வடிகாலாகத் தான் விளையாட்டு வீரர்களைக் காண்கிறோம். இந்தியா கோமதியை கண்டுகொள்ளவில்லை என்று சொல்லும் போதே ஒருவித எதிர் உணர்வின் வழி நாம் முன்னெடுப்பது நமக்கான ஒருவித தேசியவாதத்தையே.
 இதை ஏன் சொல்கிறேன் என்றால், அசோகமித்திரன் அனுபவித்த பசிக்கொடுமைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்றாவது ஊடகத்தில் இந்தளவுக்கு சர்ச்சிக்கப்பட்டதுண்டா? அவரைப் போன்ற கலைஞர்கள் இதே தேசத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்காகத் தானே தம்மை தாரை வார்த்திருக்கிறார்கள்? ஆனால் ராணுவத்தின் பதிலியாக விளையாட்டை பார்ப்பது போல நம்மால் கலையை பார்க்க முடியாது. ஏனென்றால் கலை என்றுமே அதிகாரத்துக்கு, தேசியவாத இறுமாப்புக்கு எதிரானது. கலை கலகம் செய்யும். விளையாட்டு வீரர் யாருக்கு எதிராகவும் கலகம் பண்ண மாட்டார். விராத் கோலியோ சச்சினோ பி.வி சிந்துவோ ஒருநாளும் மோடியையோ இந்துத்துவாவையோ விமர்சிக்க மாட்டார்கள். கோமதியும் பண்ண மாட்டார்.  
கடைசியில் கோமதிக்கு செருப்பு வாங்கித் தரவில்லையே என்ற அத்தனை ஒப்பாரிகளுக்கும் பொருள் இதுவே –சச்சின், கோலி, மல்லேஸ்வரி, சிந்து, சானியா, பி.டி உஷா, மேரி கோம் என ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தேசிய பிரதிநிதி உள்ளது போல தமிழகத்துக்கு இதுவரை இல்லை, இப்போது ஒருவர் வந்து விட்டார், அவரை விட்டு விட மாட்டோம். மத்தியின் வடக்கை ஒட்டிய அரசியலுக்கு எதிரான ஒரு தமிழ் தேசியவாதமாய் இக்கதையாடல் ஆரம்பத்தில் தோன்றினாலும் அடிப்படையில் “எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்” எனும் இறைஞ்சலாகவே இது படுகிறது.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த பதிவை ஒரு எழுத்தாளர் தனக்கு ஏன் இவைகள் கிடைக்கவில்லை தனது துறையை ஏன் இவ்வளவு பேர் கவனிக்கவில்லை என்பதன் வெளிப்பாடு. இந்த நாட்டில் கையால் மலம் அள்ளும் முறை இன்றும் உள்ளது, அவர்களுடன் ஏன் யாரும் தங்களை ஒப்பிடுவதில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...