முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோமதி மாரிமுத்து சர்ச்சை: இரண்டு தேசியவாதங்களின் மோதல் (2)

Image result for pt usha and other athletesImage result for indian army
ஜார்ஜ் ஆர்வல் சொன்னது போல விளையாட்டு என்பது ஒரு தேசியவாத பெருமித குறியீடு. பெருமாள் முருகனின் நாவல்கள் இன்று உலகம் முழுக்க படிக்கப்படுகின்றன. ஆனால் யாரும் அவரது எழுத்தை தேச பிரதிநுத்துவமாய் பார்க்க மாட்டார்கள். ஆனால் விளையாட்டு வீரன் தனது விருப்பத்துக்காக, பெருமைக்காக ஆடி சாதித்தால் அது தேசத்தின் சாதனையாய் பார்க்கப்படும். ஏன் என்பதை ஆர்வல் விளக்குகிறார். 

முந்தைய காலத்தில் ஒரு தேசத்தை பிரநித்துவபடுத்தியது அதன் ராணுவம். ஆனால் ஜனநாயக யுகத்தில், இரண்டு உலகப்போர்களுக்குப் பிறகு, நிலைமையே வேறு. ஓர் அளவுக்கு மேலாக நீங்கள் ராணுவத்தை முன்னிறுத்த முடியாது. ஆக இரண்டு தேசங்கள் குறியீட்டு ரீதியாய் மோதி தமது முன்னிலையை சித்தரிக்க விளையாட்டுப் போட்டிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. பெரிய ஆட்ட அரங்குகள் நிர்மாணிக்கப்பட்டு அங்கு மக்கள் குழுமி தங்கள் தேசத்துக்காக கூவி கூச்சலிட்டு ஆதரவு தெரிவிக்க வசதிகள் பண்ணப்படுகின்றன. இப்படித் தான் ஜனநாயக நாடுகளில் தேசியம் கட்ட்டமைக்கப்படுகிறது. ராணுவத்துக்கு அடுத்தபடியாய் விளையாட்டு வீரர்கள் அரசின் ஏஜெண்டுகளாய் காணப்படுகிறார்கள். ஆகையால் சர்வதேச அரங்கில் ஆடப்படும் ஒரு விளையாட்டில் பங்கேற்கும் ஒருவர் புறக்கணிக்கப்படுகிறார் எனும் வாதமே அபத்தமானது. அவர்கள் சற்று குறைவாக பாதுகாக்கப்படலாம், ஆனால் அரசு ஒருபோதும் தன் ஏஜெண்டுகளை முழுக்க கைவிடாது. புதுமைப்பித்தனை அரசாங்கம் சாக விட்டது போல பி.டி உஷாவையோ கர்ணம் மல்லேஸ்வரியையோ சாக விடாது. அரசு மட்டுமல்ல நாமும் கூட நமது தேசியவாத உணர்வின் வடிகாலாகத் தான் விளையாட்டு வீரர்களைக் காண்கிறோம். இந்தியா கோமதியை கண்டுகொள்ளவில்லை என்று சொல்லும் போதே ஒருவித எதிர் உணர்வின் வழி நாம் முன்னெடுப்பது நமக்கான ஒருவித தேசியவாதத்தையே.
 இதை ஏன் சொல்கிறேன் என்றால், அசோகமித்திரன் அனுபவித்த பசிக்கொடுமைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்றாவது ஊடகத்தில் இந்தளவுக்கு சர்ச்சிக்கப்பட்டதுண்டா? அவரைப் போன்ற கலைஞர்கள் இதே தேசத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்காகத் தானே தம்மை தாரை வார்த்திருக்கிறார்கள்? ஆனால் ராணுவத்தின் பதிலியாக விளையாட்டை பார்ப்பது போல நம்மால் கலையை பார்க்க முடியாது. ஏனென்றால் கலை என்றுமே அதிகாரத்துக்கு, தேசியவாத இறுமாப்புக்கு எதிரானது. கலை கலகம் செய்யும். விளையாட்டு வீரர் யாருக்கு எதிராகவும் கலகம் பண்ண மாட்டார். விராத் கோலியோ சச்சினோ பி.வி சிந்துவோ ஒருநாளும் மோடியையோ இந்துத்துவாவையோ விமர்சிக்க மாட்டார்கள். கோமதியும் பண்ண மாட்டார்.  
கடைசியில் கோமதிக்கு செருப்பு வாங்கித் தரவில்லையே என்ற அத்தனை ஒப்பாரிகளுக்கும் பொருள் இதுவே –சச்சின், கோலி, மல்லேஸ்வரி, சிந்து, சானியா, பி.டி உஷா, மேரி கோம் என ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தேசிய பிரதிநிதி உள்ளது போல தமிழகத்துக்கு இதுவரை இல்லை, இப்போது ஒருவர் வந்து விட்டார், அவரை விட்டு விட மாட்டோம். மத்தியின் வடக்கை ஒட்டிய அரசியலுக்கு எதிரான ஒரு தமிழ் தேசியவாதமாய் இக்கதையாடல் ஆரம்பத்தில் தோன்றினாலும் அடிப்படையில் “எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்” எனும் இறைஞ்சலாகவே இது படுகிறது.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த பதிவை ஒரு எழுத்தாளர் தனக்கு ஏன் இவைகள் கிடைக்கவில்லை தனது துறையை ஏன் இவ்வளவு பேர் கவனிக்கவில்லை என்பதன் வெளிப்பாடு. இந்த நாட்டில் கையால் மலம் அள்ளும் முறை இன்றும் உள்ளது, அவர்களுடன் ஏன் யாரும் தங்களை ஒப்பிடுவதில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...