முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ்: காதல் வரும் வேகம் (2)

தமிழ் பிக்பாஸின் இரண்டாம் பருவத்தில் காதலை விட அதிகமாய் பேசப்பட்டது நித்யா-பாலாஜியின் இல்லாத தாம்பத்ய பாசமும் இருக்கிற பரஸ்பர கசப்பும். அவர்களை ஒருவிதமாய் செயற்கையாய் சேர்த்து வைத்து, அவர்களது குழந்தையை மையமாக்கி டிராமா செய்ய வேண்டும் எனும் பிக்பாஸின் வியூகம் பரிதாபகரமாய் தோற்றது. இதை அடுத்து வீட்டில் உள்ள இளைய தலைமுறையினரில் யார் காதல் வயப்படுவார்கள் எனும் கேள்வி எழுந்தது. யஷிகா-மஹத் காதல் அப்படித் தான் மெல்ல மெல்ல வெகு தயக்கமாய்நிகழ்த்தப்பட்டது”. பிக்பாஸ் வரலாற்றின் மிக அபத்தமான காதல் இது. ஏனென்றால் மஹத் ஏற்கனவே வெளியே ஒரு காதலியை கொண்டிருக்கிறார். அதைப் பற்றி அவர் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே விவாதித்திருக்கிறார். அப்பெண் பிக்பாஸ் நிகழ்ச்சி வார இறுதியில் மேடையில் நிகழும் போது பார்வையாளர் தரப்பில் வருவதுண்டு. அவர் இருக்கையிலே, தினமும் டிவியில் மஹத்தை கவனிக்கையிலே அவர் யஷிகாவை நேசிப்பது கிட்டத்தட்ட அசாத்தியம். மேலும், இது குறித்த விசாரணையின் போது யஷிகா எந்தவொரு உணர்ச்சியும் இன்றியே தனக்கு மஹத் மீதுள்ள பிரியத்தைப் பற்றி பேசினார்

ஐஸ்வர்யா-ஷாரிக் உறவும் இப்படி வெகு தயக்கமான காதல் நாடகமாய் அரங்கேறியது. ஒருவேளை இவர்களுக்கு வெளியே காதலன்  / காதலி இருக்கலாம். இந்த காலத்தில் 13 வயது குழந்தைகளுக்கே நிலையான காதலன் / காதலிகள் உண்டு. பதினெட்டு வயதுக்குள் அவர்கள் பலவிதமான அனுபவங்களை கடந்திருப்பார்கள். பிக்பாஸ் போன்ற ஒரு ரியாலிட்டி ஷோவுக்குள் வந்து காதலைத் தேடும் அளவுக்கு அவர்கள் வறண்டு போய் இல்லை; எல்லா பங்கேற்பாளர்களும் ஓவியாவைப் போலவளர்ந்தவிடலைகள் அல்ல. இவர்கள் வெகுவாய் யோசித்து இணையை தேர்கிற முதிர்ச்சி கொண்டவர்கள். ஆக ஒரு கட்டாயத்தின் பேரில், நித்யா-பாலாஜி உறவு நமுத்துப் போன பின்னர் இவர்கள் காதல் ஜோடி வேடத்தை ஏற்கிறார்கள். அது தம்மை மக்களிடம் பிரசித்தமாக்க, இணக்கமாக்க உதவும் என நம்பியே செய்கிறார்கள். இது, பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தில் ஜோடிகள் கட்டாயமற்ற கட்டாயத்தில் காதலிப்பதைப் போன்றது. ஆனால், யஷிகா-மஹத், ஐஸ்வர்யா-ஷாரிக் விசயத்தில், தாமதமாக தயக்கமாக ஆரம்பித்ததனாலோ என்னவோ இந்த இருவரின் காதல் அவர்களது பிக்பாஸ் இடத்தை உறுதிப்படுத்தவோ இறுதிக் கட்டம் வரை கொண்டு செல்ல உதவவோ இல்லை.

ஆனால் தமிழ் பிக்பாஸ் மூன்றாம் பருவ போட்டியாளர்களைப் பாருங்கள். பட்டியலில் உள்ள இளைஞர்களைக் கண்டதுமே இவர்கள் தான் சீக்கிரம் பரஸ்பரம் காதலிக்கப் போகிறார்கள் என நமக்குத் தோன்றி விடுகிறது. ஏனென்றால், காதல் ஒரு தவிர்க்க முடியாத வியூகமாக, என்னை தரித்துக் கொள் என கோரும் ஒரு ஆடையாக, என்னை எடுத்து பயன்படுத்து எனக் கோரும் ஒரு பளபளப்பான கத்தியாக அவர்கள் முன்பு இருக்கிறது; அது அப்படி இருப்பதை நாமும் அறிந்தே இருக்கிறோம். இப்படி ஒரு வியூகம் தொடர்ந்து வெற்றிகரமாய் பயன்படுத்தப்படும் போது அதை மக்கள் தம்மை அறியாமலே பயன்படுத்த துவங்குவார்கள். அதை உட்கிரகித்து (internalize) தமதானதாக்குவார்கள் (சம்ஸ்கிருதமயமாக்கலில் ஜனங்கள் பிராமணர்களின் அடையாளத்தை தம்மையறியாமலே வரிப்பது போல). முதல் பருவத்தில் ஹிமா பண்ணியதைப் போல இனி போட்டியாளர்கள் திட்டமிட்டு காதலிக்க மாட்டார்கள். இவர்கள் இத்திட்டத்தை உள்வாங்கி திட்டமிடாமலே முன்னெடுப்பார்கள், வெகு-இயல்பாக, சரளமாக, அநிச்சையாக

உதாரணமாய்தமிழ் பிக்பாஸ் மூன்றாம் பருவத்தின் இரண்டாம் நாளென்றே அபிராமி தனக்கு கவினை பிடிக்கும் என்று தன் தோழிகளுடன் விவாதிக்கிறார். பிடிக்குமென்றால் போய் பழக வேண்டியது தானே! ஆனால் பிக்பாஸில் நாம் காதல் நிகழ்த்தப்படுவதை விட பேசப்படுவதையே, அதுவும் பெண்களால் பேசப்படுவதையே, காண்கிறோம். ஏனென்றால் நிகழ்த்துவதை விட பேசுவது சிக்கல் குறைவானது. இரு தரப்பும் ஒரு வியூகத்தை தயக்கமின்றி, தம்மையறியாது முன்னெடுக்கும் போதே நிகழ்த்துதலில் ஒரு அர்த்தம் இருக்கும். இப்போதைக்கு அபிராமியும்-கவினும் அந்த நிலையில் இல்லை. ஆக, அபிராமி காதலைபேசிநிகழ்த்துகிறார். அதன் மூலம், தன்னை முக்கியமானவராக அந்த வீட்டில் நிலைநிறுத்த முயல்கிறார். பிக்பாஸ் வீட்டுக்கு வரும் போதே இந்த திட்டத்துடன் வந்திருப்பார் என நான் கூறவில்லை. ஆனால் வீட்டுக்குள் வந்ததுமே அது ஒரு விதிமுறையாக அவரது மனதுக்குள் ஏற்றப்பட்டு, அதை யோசிக்காமலே செயல்படுத்துகிறவராகிறார் - கோயிலில் ஆராதனைத் தட்டு சுற்ற்றப்படும் போது நீங்கள் அநிச்சையாய் தீபத்தை தொட்டு வணங்குகிறீர்களே அதைப் போல. பிக்பாஸ் வீடு ஒரு நாடக அரங்கு எனில், அதன் விதிமுறைகளை இரு பருவங்களாய் பார்த்து பார்த்து, இப்போது போட்டியாளர்களை அவற்றைப் பற்றி நினைக்காமலே தம் இயல்பை அவற்றுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள்.


என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது எவ்வளவு வேகமாய் ஒரு காதல் முடிவுக்கு வருகிறார்கள் என்பது. ஒரு வாரம் பழகி கவனித்து ஏற்றுக் கொண்ட பின் காதலிக்கும் பொறுமை கூட இல்லை. பிக்பாஸில் எல்லாமே அவ்வளவு வேகமாய் உள்ளது

கருத்துகள்

Ponmahes இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் அண்ணா,
அருமையான அலசல் அண்ணா ...
வாழ்த்துக்கள் ....
ஒரு சிறு சந்தேகம் ...

அனால் அபிராமி தனக்கு கவினை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே தெரியும் என்றும் "சரவணன் மீனாட்சி" தொடர் நாடகம் மூலம் தான் கவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் சொன்னார். அப்பறம் எப்பிடி இதை பார்த்ததும் காதல் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியும். வேணுமென்றால் ஒரு தலைக் காதல் என்று சொல்லலாமே ???!!

அன்புடன்!!
பொன் மகேஷ்வரன்
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லதொரு பகிர்வு...
இந்தக் காதல் எல்லாம் பிக்பாஸின் திரைக்கதையே...
ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆரம்பிக்க எண்ணம்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...