Skip to main content

பிக்பாஸ்: காதல் வரும் வேகம் (2)

தமிழ் பிக்பாஸின் இரண்டாம் பருவத்தில் காதலை விட அதிகமாய் பேசப்பட்டது நித்யா-பாலாஜியின் இல்லாத தாம்பத்ய பாசமும் இருக்கிற பரஸ்பர கசப்பும். அவர்களை ஒருவிதமாய் செயற்கையாய் சேர்த்து வைத்து, அவர்களது குழந்தையை மையமாக்கி டிராமா செய்ய வேண்டும் எனும் பிக்பாஸின் வியூகம் பரிதாபகரமாய் தோற்றது. இதை அடுத்து வீட்டில் உள்ள இளைய தலைமுறையினரில் யார் காதல் வயப்படுவார்கள் எனும் கேள்வி எழுந்தது. யஷிகா-மஹத் காதல் அப்படித் தான் மெல்ல மெல்ல வெகு தயக்கமாய்நிகழ்த்தப்பட்டது”. பிக்பாஸ் வரலாற்றின் மிக அபத்தமான காதல் இது. ஏனென்றால் மஹத் ஏற்கனவே வெளியே ஒரு காதலியை கொண்டிருக்கிறார். அதைப் பற்றி அவர் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே விவாதித்திருக்கிறார். அப்பெண் பிக்பாஸ் நிகழ்ச்சி வார இறுதியில் மேடையில் நிகழும் போது பார்வையாளர் தரப்பில் வருவதுண்டு. அவர் இருக்கையிலே, தினமும் டிவியில் மஹத்தை கவனிக்கையிலே அவர் யஷிகாவை நேசிப்பது கிட்டத்தட்ட அசாத்தியம். மேலும், இது குறித்த விசாரணையின் போது யஷிகா எந்தவொரு உணர்ச்சியும் இன்றியே தனக்கு மஹத் மீதுள்ள பிரியத்தைப் பற்றி பேசினார்

ஐஸ்வர்யா-ஷாரிக் உறவும் இப்படி வெகு தயக்கமான காதல் நாடகமாய் அரங்கேறியது. ஒருவேளை இவர்களுக்கு வெளியே காதலன்  / காதலி இருக்கலாம். இந்த காலத்தில் 13 வயது குழந்தைகளுக்கே நிலையான காதலன் / காதலிகள் உண்டு. பதினெட்டு வயதுக்குள் அவர்கள் பலவிதமான அனுபவங்களை கடந்திருப்பார்கள். பிக்பாஸ் போன்ற ஒரு ரியாலிட்டி ஷோவுக்குள் வந்து காதலைத் தேடும் அளவுக்கு அவர்கள் வறண்டு போய் இல்லை; எல்லா பங்கேற்பாளர்களும் ஓவியாவைப் போலவளர்ந்தவிடலைகள் அல்ல. இவர்கள் வெகுவாய் யோசித்து இணையை தேர்கிற முதிர்ச்சி கொண்டவர்கள். ஆக ஒரு கட்டாயத்தின் பேரில், நித்யா-பாலாஜி உறவு நமுத்துப் போன பின்னர் இவர்கள் காதல் ஜோடி வேடத்தை ஏற்கிறார்கள். அது தம்மை மக்களிடம் பிரசித்தமாக்க, இணக்கமாக்க உதவும் என நம்பியே செய்கிறார்கள். இது, பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தில் ஜோடிகள் கட்டாயமற்ற கட்டாயத்தில் காதலிப்பதைப் போன்றது. ஆனால், யஷிகா-மஹத், ஐஸ்வர்யா-ஷாரிக் விசயத்தில், தாமதமாக தயக்கமாக ஆரம்பித்ததனாலோ என்னவோ இந்த இருவரின் காதல் அவர்களது பிக்பாஸ் இடத்தை உறுதிப்படுத்தவோ இறுதிக் கட்டம் வரை கொண்டு செல்ல உதவவோ இல்லை.

ஆனால் தமிழ் பிக்பாஸ் மூன்றாம் பருவ போட்டியாளர்களைப் பாருங்கள். பட்டியலில் உள்ள இளைஞர்களைக் கண்டதுமே இவர்கள் தான் சீக்கிரம் பரஸ்பரம் காதலிக்கப் போகிறார்கள் என நமக்குத் தோன்றி விடுகிறது. ஏனென்றால், காதல் ஒரு தவிர்க்க முடியாத வியூகமாக, என்னை தரித்துக் கொள் என கோரும் ஒரு ஆடையாக, என்னை எடுத்து பயன்படுத்து எனக் கோரும் ஒரு பளபளப்பான கத்தியாக அவர்கள் முன்பு இருக்கிறது; அது அப்படி இருப்பதை நாமும் அறிந்தே இருக்கிறோம். இப்படி ஒரு வியூகம் தொடர்ந்து வெற்றிகரமாய் பயன்படுத்தப்படும் போது அதை மக்கள் தம்மை அறியாமலே பயன்படுத்த துவங்குவார்கள். அதை உட்கிரகித்து (internalize) தமதானதாக்குவார்கள் (சம்ஸ்கிருதமயமாக்கலில் ஜனங்கள் பிராமணர்களின் அடையாளத்தை தம்மையறியாமலே வரிப்பது போல). முதல் பருவத்தில் ஹிமா பண்ணியதைப் போல இனி போட்டியாளர்கள் திட்டமிட்டு காதலிக்க மாட்டார்கள். இவர்கள் இத்திட்டத்தை உள்வாங்கி திட்டமிடாமலே முன்னெடுப்பார்கள், வெகு-இயல்பாக, சரளமாக, அநிச்சையாக

உதாரணமாய்தமிழ் பிக்பாஸ் மூன்றாம் பருவத்தின் இரண்டாம் நாளென்றே அபிராமி தனக்கு கவினை பிடிக்கும் என்று தன் தோழிகளுடன் விவாதிக்கிறார். பிடிக்குமென்றால் போய் பழக வேண்டியது தானே! ஆனால் பிக்பாஸில் நாம் காதல் நிகழ்த்தப்படுவதை விட பேசப்படுவதையே, அதுவும் பெண்களால் பேசப்படுவதையே, காண்கிறோம். ஏனென்றால் நிகழ்த்துவதை விட பேசுவது சிக்கல் குறைவானது. இரு தரப்பும் ஒரு வியூகத்தை தயக்கமின்றி, தம்மையறியாது முன்னெடுக்கும் போதே நிகழ்த்துதலில் ஒரு அர்த்தம் இருக்கும். இப்போதைக்கு அபிராமியும்-கவினும் அந்த நிலையில் இல்லை. ஆக, அபிராமி காதலைபேசிநிகழ்த்துகிறார். அதன் மூலம், தன்னை முக்கியமானவராக அந்த வீட்டில் நிலைநிறுத்த முயல்கிறார். பிக்பாஸ் வீட்டுக்கு வரும் போதே இந்த திட்டத்துடன் வந்திருப்பார் என நான் கூறவில்லை. ஆனால் வீட்டுக்குள் வந்ததுமே அது ஒரு விதிமுறையாக அவரது மனதுக்குள் ஏற்றப்பட்டு, அதை யோசிக்காமலே செயல்படுத்துகிறவராகிறார் - கோயிலில் ஆராதனைத் தட்டு சுற்ற்றப்படும் போது நீங்கள் அநிச்சையாய் தீபத்தை தொட்டு வணங்குகிறீர்களே அதைப் போல. பிக்பாஸ் வீடு ஒரு நாடக அரங்கு எனில், அதன் விதிமுறைகளை இரு பருவங்களாய் பார்த்து பார்த்து, இப்போது போட்டியாளர்களை அவற்றைப் பற்றி நினைக்காமலே தம் இயல்பை அவற்றுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள்.


என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது எவ்வளவு வேகமாய் ஒரு காதல் முடிவுக்கு வருகிறார்கள் என்பது. ஒரு வாரம் பழகி கவனித்து ஏற்றுக் கொண்ட பின் காதலிக்கும் பொறுமை கூட இல்லை. பிக்பாஸில் எல்லாமே அவ்வளவு வேகமாய் உள்ளது

Comments

Ponmahes said…
வணக்கம் அண்ணா,
அருமையான அலசல் அண்ணா ...
வாழ்த்துக்கள் ....
ஒரு சிறு சந்தேகம் ...

அனால் அபிராமி தனக்கு கவினை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே தெரியும் என்றும் "சரவணன் மீனாட்சி" தொடர் நாடகம் மூலம் தான் கவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் சொன்னார். அப்பறம் எப்பிடி இதை பார்த்ததும் காதல் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியும். வேணுமென்றால் ஒரு தலைக் காதல் என்று சொல்லலாமே ???!!

அன்புடன்!!
பொன் மகேஷ்வரன்
நல்லதொரு பகிர்வு...
இந்தக் காதல் எல்லாம் பிக்பாஸின் திரைக்கதையே...
ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆரம்பிக்க எண்ணம்...

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...