முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனது பிக்பாஸ் கட்டுரையைக் குறித்து சுரேஷ் கண்ணன்

உயிர்மை ஜூலை 2019 இதழில் பிக்பாஸ் நிகழ்ச்சியையொட்டி ஒரு நல்ல கட்டுரையை எழுதியிருக்கிறார் அபிலாஷ் சந்திரன்.

அண்டை மாநிலங்களாக இருந்தாலும் கேரளமும் தமிழகமும் சில கோணங்களில் வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலங்களை உடையவை..

மலையாள பிக்பாஸ் மற்றும் தமிழ் பிக்பாஸ் ஆகிய இரு நிகழ்ச்சிகளில் பெண்கள் எவ்வாறு நடக்கிறார்கள், நடத்தப்படுகிறார்கள், அதன் அடுக்குகள் என்ன என்பதையெல்லாம் அதன் இரு சமூகப் பின்னணிகளோடும் அவற்றில் உள்ள சுவாரசியமான முரண்களோடும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் அபிலாஷ்.

பிக்பாஸ் என்றல்ல, தொலைக்காட்சி சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், கிரிக்கெட் விளையாட்டுக்கள், மசாலா சினிமாக்கள் என்று பல கேளிக்கைகளை ஆதரிக்கவும் எதிர்க்கவும் இங்கு தனித்தனி கோஷ்டிகள் உள்ளன. தாங்கள் ரசிப்பதை ஆதரித்தும் பிடிக்காதவற்றை ‘நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து’ மாதிரி நிராகரித்தும் பாவனை செய்யும் தனித்தனி முகாம்கள் உண்டு.

ஆனால் ஆய்வு நோக்கில் இவை அனைத்துமே பரிசிலீக்கப்பட வேண்டியதே. ஏனெனில் இவற்றுக்கும் ஒரு சமூகத்தின் கூட்டுமனநிலைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. ஒரு சமூகத்தின் பெரும்பான்மை சதவீதத்தைக் கவர்ந்திருக்கும் எந்தவொரு கேளிக்கையும் அவற்றில் இருக்கும் எதிர்மறை அம்சங்களைத் தாண்டி ஆய்விற்கு உரியதே. துளித்துளியாக இருக்கும் அவற்றின் பல்வேறு உடைந்த பிம்பங்களில் இருந்து சமூகத்தைப் பார்க்க முயலும் ஒரு சிறிய கண்ணாடியை உருவாக்கி விட முடியும்.

இந்த நோக்கில் பல்வேறு கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதி வரும் அபிலாஷ் பாராட்டிற்கு உரியவர். சில கட்டுரைகளின் கருப்பொருள், நடை, வேகம், அவசரம் போன்வற்றில் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவரின் தேடலும் உழைப்பும் புறக்கணிக்க முடியாதவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.