முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவல் எழுத யாராவது கற்பிக்க முடியுமா சொல்லுங்கள்?


எங்கள் கல்லூரியில் மாலை வேளை நடக்கும் எலெக்டிவ் வகுப்பில் நான் இரண்டாம் வருடமாக நாவல் எழுதும் கலையை கற்பிக்கிறேன். கடந்த வருடம் 17 மாணவர்கள். இவ்வருடம் 45ஆக உயர்ந்து விட்டது. பெரிய வகுப்புகளின் சௌகரியங்கள் 45இல் ஐந்து பேராவது ஒரு நாவலை அரை கல்வியாண்டுக்குள் முடித்து விடுவார்கள் என்பது. கடந்த முறை ஒருவரே முடித்தார். இந்த முறை 12 அத்தியாயங்கள், அத்தியாயத்துக்கு 5-7 பக்கங்கள் என ஒரு இலக்கை கொடுத்திருக்கிறேன். ஆகையால் இம்முறை நாவலை எழுதி முடிப்பது சற்று சுலபமாக அமையும் என கணிக்கிறேன்.

மாணவர்களை தினமும் நாவலை எழுத வைப்பதே என் பிரதான நோக்கம். ஏனென்றால் இத்தகைய வகுப்புகளுக்கு வருவோருக்கு அதுவே பெரும் சவால் - அவர்களால் எழுத முடியும், அவர்களுக்கு மொழித்திறனும், வாசிப்பும் உண்டு, ஆனால் தினம் தினம் ஒரே புத்தகத்தில் வேலை செய்வது கடினம். அந்த பயிற்சியை எப்படியாவது கொடுத்து விட வேண்டும். இன்றைய முதல் வகுப்பில் அதை பற்றியே முக்கியமாக பேசினேன். 

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நாவல் உண்டு, அது எழுதப்படாமலே பல சமயம் போய் டுகிறது என்பது என் நம்பிக்கை. அது இலக்கிய நாவலோ, வெகுஜன நாவலோ, எளிய துப்பறியும் நாவலோ, பதின் வயதினருக்கான ரொமான்ஸ் நாவலோ - ஒவ்வொன்றும் ஒரு வகையான சவால்.

இம்முறை திரைக்கதை கலை குறித்த புத்தகங்களில் இருந்து எடுத்துக்  நிறைய விசயங்களை (ராபர்ட் மெக்கீயின் Story போன்ற புத்தகங்கள்) நாவலுக்கும் பொருத்திக் கொண்டு கற்பிக்கலாம் என நினைக்கிறேன்.  

நாவல் கலையை கற்பிக்கும் வகுப்புகளில் பொதுவாக சில சட்டகங்களை, வரையறைகளை, எளிய சூத்திரங்களை அளிப்பார்கள். அதை கவனித்தால் இவ்வளவு ஈஸியா என மூக்கில் விரல் வைப்போம். ஆனால் வீட்டுக்குப் போய் எழுதினால் அது அவ்வளவு சுலபமல்ல எனப் புரியும். எழுத்தைப் பொறுத்தமட்டில் எனக்கு கோட்பாடுகளில் நம்பிக்கை குறைவு. எளிய தவறுகள் சிலவற்றை தவிர்க்க உதவுமே ஒழிய அவை தரும் போலி நம்பிக்கை ஆபத்தானது. 

 தொடர்ந்து இத்தகைய பட்டறைகளில் கலந்து கொண்டு எப்படி நாவல் எழுதுவது என வக்கணையாகப் பேச மட்டும் கற்றுக் கொள்ளும், ஆனால் ஒரு அத்தியாயம் கூட ஒழுங்காக எழுதியிராத, பலரை எனக்குத் தெரியும். நீங்கள் கிரிக்கெட்டை கற்றுக் கொள்ள செல்லும் போது ஒரு பயிற்சியாளர் உங்களை அமர வைத்து forward defense பற்றி கோட்பாட்டு வகுப்பெடுக்க மாட்டார். பாட்டுக் கற்க போகும் போது அங்கு குரு ஸ்வர வரிசையை குறிப்புகள் தருவார், ஆனால் அதோடு விடாமல் பாட வைப்பார். ஆடியே விளையாட்டை கற்கிறோம்; பாடியே பாட்டைக் கற்கிறோம். ஆக எழுத்தை மட்டும் எப்படி பேசியே கற்க முடியும், எப்படி அதை மட்டும் விவாதித்து கற்க முடியும்?

ஆனால் அதற்காக மாணவரின் கையைப் பற்றி எழுத வைக்கவும் முடியாது. அவர்களாகவே எழுத வேண்டும். இப்படித் தான் எழுதுவது என செய்து காட்டவும் முடியும். இதெல்லாம் எழுத்துக் கலையைப் பற்றி பேசுவதன், பேசிக் கற்பிப்பதன் சிக்கல்கள்.

நான் இந்த சிக்கலுக்கு ஒரு சுலபத் தேர்வை இன்னும் காணவில்லை என்பதே ஒரு குற்றவுணர்வை, ஒருவித சோர்வை ஏற்படுத்துகிறது. சில நாட்களில் எதற்கு இந்த தேவையில்லாத வேலை, எழுதுவதே என் பணி, எழுத்தைக் கற்பிப்பதல்ல என நினைப்பேன். ஆனால் ஒரு திறமையான புது எழுத்தாளனை கண்டடையலாமே, எழுதுவது குறித்து உரையாடலாமே, நிறைய பேர்களை ஊக்கப்படுத்தலாமே என ஒரு சபலம் தோன்ற மீண்டு விடுவேன்.

 இந்த வகுப்புகள் ஒரு எழுத்தாளனாகவும் ஆசிரியனாகவும் எனக்கு அளிக்கும் உற்சாகமும் ஆற்றலும் அளப்பரியது. அதை வைத்து (கடந்து இரு வருடங்களாக எழுதி வரும்) வரும் என் நாவலையும், மாணவர்கள் தம் நாவலை நிறைவு செய்து சமர்ப்பிக்கும் போது, என்னால் முடிக்க இயன்றால் முத்தாய்ப்பாக இருக்கும்! அதுவே என் கனவு! 

கருத்துகள்

சிந்து இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு நாவல் எழுத ஆரம்பிக்கிறது எப்படி அதுக்கு முதலில் நோட்ஸ் ஏதாச்சும் எடுக்கலாமா இல்ல நமது மனதில் தோன்றுவதை எழுத ஆரம்பிக்கலாமா oru நாவல் அப்படி எனும் போது தொடக்கமும் முடிவும் எவ்வாறு இருப்பது சிறப்பாக வரும்
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
சிறிது திட்டமிடல் நல்லது. சிந்து, உங்களுக்கு ராபர்ட் மெக்கீயின் Story புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...