முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெண்பா எனும் வளர்மதி





கலையரசி நடராஜன் வீட்டில் வெண்பா நகை திருடி விட்டார் எனும் சர்ச்சையை வெளியில் இருந்து பார்க்கையில் எனக்குத் தோன்றுவது இது:


1. வெண்பா நகையை திருடியிருக்க வாய்ப்பில்லை.  நகை திருட்டுப் போயிருந்தால் கலையரசி முதல் வேலையாக காவல் துறையில் புகார் தெரிவித்திருப்பார். மாறாக, தன்னிடம் லயோலா கல்லூரியில் படிக்கிற வளர்மதி என்றும், சமூக நீதி சேனல் ஒன்றை நடத்துவதாகவும் பொய் சொன்ன வெண்பா மீதுள்ள கடுப்பில் இந்த புகாரை கிளப்பியிருக்கிறார் என நினைக்கிறேன். மதனின் எதிர்த்தரப்புக்கு இது வசதியாகப் போய் விட்டது. திருட்டுப் பட்டத்தை வைத்து செய்கிறார்கள்.


2. கலையரசியிடம் தன்னை அறிமுகப்படுத்திய போது ஏன் பொய்ப்பெயர், தகவல் எல்லாம் தந்திருப்பார் வெண்பா? 

இது என் ஊகம் மட்டுமே - வெண்பாவின் அரசியல் நிலைப்பாடு என்னவென்றாலும் அவர் தன்னை மதன் ரவிச்சந்திரன் போன்ற ஒருவரின் யுடியூப் சேனலுடன் நேரடியாக தொடர்புபடுத்துவதை விரும்பியிருக்க மாட்டார். ஆனால் அடையாளம் தெரியாமல் பின்னிருந்து அந்த டீமில் வேலை செய்ய மட்டும் செய்கிறார். பொய்ப்புரட்டு எல்லாம் இதற்காகத் தான் இருக்கும்.


3) எப்படி வெண்பாவின் படம் தன்னிடம் சிக்கியது என்பதை கலையரசி கூறவில்லை. ஏதோ ஒரு சிசிடிவி படம் அல்லது யாரோ எடுத்த காணொலியின் மங்கலான ஸ்டில் போல தெரிகிறது. அதை வைத்து தெரியாதவர்களால் வெண்பா என அடையாளம் காண முடியாது. கலையரசியின் வட்டத்தில் வெண்பாவை முகநூலில் பின் தொடரும் யாராவது இருந்து அவர்கள் உதவியிருக்கலாம். இதை வெண்பா எதிர்பார்த்திருக்க மாட்டார். (ஒரு துப்பறியும் கதை போல இருக்கிறது இந்த இடம்.)


4) பேட்டி ஆரம்பிக்கும் முன்பு மதுவந்தியிடம் வெண்பா பேசிக்கொண்டிருந்ததை தான் கேட்டேன் என கலையரசி சொல்வது உண்மையெனில் (அதற்கான வாய்ப்பு அதிகம்) இந்த ‘சம்பவத்தின்’ திரைக்கதை மதுவந்தி போன்ற பாஜக இரண்டாம் நிலை தலைவர்களால் எழுதப்பட்டதே - கறுப்பர் கூட்டம் சர்ச்சை, ஸ்டாலின் இந்துக்களை அவமதிக்கிறார் போன்ற வெடிமருந்துகள் பற்றிக் கொள்ளாத போதும் பாஜக அணியினர் இந்து விரோத பிம்பத்தை திமுக மீது சுமத்த பிடிவாதமாக முயன்று கொண்டிருக்கிறார்கள். கலையரசியின் பேச்சு குறித்து ஒரு பரபரப்பு கிளம்பிட, அவரிடம் பேட்டி எடுத்து சம்பவம் செய்யலாம் என நினைத்திருப்பார்கள். ஆனால் மதன் தான் பேட்டியாளர் எனத் தெரிந்தால் கலையரசி ஒப்புக்கொள்ள மாட்டார் என வெண்பாவை மாற்றுப்பெயர், அடையாளத்துடன் அனுப்பியிருக்கிறார். கலையரசியின் காலில் வெண்பா விழுந்து வணங்கியது முதல் அவரிடம் பேட்டிக்காக கெஞ்சியது வரை நடந்திருக்க வாய்ப்புண்டு. ரொம்ப கெஞ்சுறாளே என மனம் கனிந்து கலையரசி ஒப்புக் கொள்ள ஆரம்பித்தது சனி. இரண்டு நாள் கழித்து பேட்டிக்காக மதனின் குழு போய் நிற்க கலையரசி சாப்பிடாத களைப்பிலும் மதனின் முட்டாள்தனமான கேள்விகளிலும் திகைத்து போய் சொதப்பி விட்டார்.


5) இது போன்ற பேட்டிகளால் பாஜகவுக்கு என்ன பலன் கிடைக்கும்? பூஜ்யம். சமூக வலைதளங்களில் உள்ள சில ஆயிரம் சங்கிகளுக்கு பார்த்து ரசிக்க இத்தகைய ரௌடியிசங்கள் உதவும். மக்களிடமோ இப்பேட்டிகள் எதிர்மறையாகவே விளைவை ஏற்படுத்தும். இதன் பின்பு மதுவந்தி இருப்பதிலும் ஆச்சரியமில்லை - அவர் பேசிய பேச்சுக்கள் இதுவரை சர்ச்சைகளை உண்டு பண்ணி, தமிழக பாஜகவுக்கு கெட்ட பெயரையே ஏற்படுத்தியது. இப்போது மதன் போன்ற கைத்தடிகளை வைத்து அதே எதிர்மறை வெறுப்பரசியலை தொடர்கிறார். 


6) இந்திய ஊடகங்களின் வரலாற்றிலேயே பொய்ப் பெயர், பொய் விபரங்களுடன் பேட்டியெடுக்க சென்ற முதல் டீம் இதுவாகத் தான் இருக்கும். இத்தனைக்கும் அந்த பாட்டிக்கு மதனையே தெரியவில்லை - மதன் டயரி சேனல் என்று உண்மையை சொல்லியிருந்தாலும் அதனால் கலையரசி பாட்டி மறுத்திருக்கப் போவதில்லை. ஏதோ ஒரு சின்ன பையன் என நினைத்திருப்பார். ஆனால் ஏதோ துப்பறியும் சாம்பு போல பயங்கரமாய் பிளான் போட்டு பாட்டியை டிராப் செய்திருக்க தேவையில்லை. மதனே போய் காலில் விழுந்திருந்தாலும் பாட்டி ஒத்துக் கொண்டிருப்பார். இவ்வளவு பில்ட் அப் பண்ணி கடைசியில் அது திருட்டுப் பட்டத்துக்கு வழிவகுத்து விட்டது. வளர்மதி, லயோலா கல்லூரி, சமூக நீதி சேனல் போன்ற பொய்களினால் தான் வெண்பா திருடியிருப்பார் எனும் எண்ணம் மக்களுக்கு வலுப்பட்டுள்ளது.


7 ) மதன் அடிப்படையில் ஒரு ‘திருடன்’ என கலையரசி சொல்வது உண்மை. அவர் பேட்டியெடுக்க வரும் போது ஒரு கிரிமினலைப் போல எதிர்கொள்வது மட்டுமே ஒரே தீர்வு. ஒழுங்காக பதில் சொல்லப் போனால் பேட்டி கொடுக்கிறவர் முட்டாள் போன்ற பிம்பம் ஏற்பட்டு விடும். கலையரசி சொல்வதைப் போலவே மதனின் வாழ்க்கை சுயமரியாதையோ, அங்கீகாரமோ இன்றி ரொம்ப கேவலமாகப் போய் முடியப் போகிறது என நினைக்கிறேன். “த்த்தூ த்த்தூ” என சூர்யா தேவி துப்பி போஸ்ட் பண்ணின யுடியூப் காணொலிகள் ஐந்தே நிமிடங்களில் 1-2 லட்சம் வியூஸ்களைப் பெற்றன. பிளாஸ்டிக் டப்பா விற்கிற காளொலிகளுக்கே 25,000 வியூஸ் கிடைக்கிறது. 50,000 வியூஸ்காக அவர் இவ்வளவு டகால்டி செய்து ஒரு பாட்டியை வதைக்கத் தேவையில்லை. இப்படியே போனாலும் எந்த சேனலிலும் வேலை தர மாட்டார்கள். பாஜக தேர்தலுக்குப் பின் சர்க்கஸை கலைத்துக் கொண்டு கிளம்பி விடும். மதன் அப்போது ஜெப்படி வேலைதான் செய்ய வேண்டும்.


8 ) வெண்பாவுக்கு ஒரு அறிவுரை - அடுத்த முறை இது போன்ற தாவூத்துகளுக்கு reconnaissance வேலை செய்ய, வேவு பார்க்க செல்லும் போது மாறுவேடம் அணியவும். புகைப்படம் சிக்கினாலும் தப்பித்துக் கொள்ளலாம். ரெபரென்ஸுக்கு பழைய ஜெய்சங்கர் படங்கள் பார்க்கவும். 


கருத்துகள்

Velu subramaniam இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை
Varadan இவ்வாறு கூறியுள்ளார்…
கரெக்ட்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...