Skip to main content

வெண்பா எனும் வளர்மதி





கலையரசி நடராஜன் வீட்டில் வெண்பா நகை திருடி விட்டார் எனும் சர்ச்சையை வெளியில் இருந்து பார்க்கையில் எனக்குத் தோன்றுவது இது:


1. வெண்பா நகையை திருடியிருக்க வாய்ப்பில்லை.  நகை திருட்டுப் போயிருந்தால் கலையரசி முதல் வேலையாக காவல் துறையில் புகார் தெரிவித்திருப்பார். மாறாக, தன்னிடம் லயோலா கல்லூரியில் படிக்கிற வளர்மதி என்றும், சமூக நீதி சேனல் ஒன்றை நடத்துவதாகவும் பொய் சொன்ன வெண்பா மீதுள்ள கடுப்பில் இந்த புகாரை கிளப்பியிருக்கிறார் என நினைக்கிறேன். மதனின் எதிர்த்தரப்புக்கு இது வசதியாகப் போய் விட்டது. திருட்டுப் பட்டத்தை வைத்து செய்கிறார்கள்.


2. கலையரசியிடம் தன்னை அறிமுகப்படுத்திய போது ஏன் பொய்ப்பெயர், தகவல் எல்லாம் தந்திருப்பார் வெண்பா? 

இது என் ஊகம் மட்டுமே - வெண்பாவின் அரசியல் நிலைப்பாடு என்னவென்றாலும் அவர் தன்னை மதன் ரவிச்சந்திரன் போன்ற ஒருவரின் யுடியூப் சேனலுடன் நேரடியாக தொடர்புபடுத்துவதை விரும்பியிருக்க மாட்டார். ஆனால் அடையாளம் தெரியாமல் பின்னிருந்து அந்த டீமில் வேலை செய்ய மட்டும் செய்கிறார். பொய்ப்புரட்டு எல்லாம் இதற்காகத் தான் இருக்கும்.


3) எப்படி வெண்பாவின் படம் தன்னிடம் சிக்கியது என்பதை கலையரசி கூறவில்லை. ஏதோ ஒரு சிசிடிவி படம் அல்லது யாரோ எடுத்த காணொலியின் மங்கலான ஸ்டில் போல தெரிகிறது. அதை வைத்து தெரியாதவர்களால் வெண்பா என அடையாளம் காண முடியாது. கலையரசியின் வட்டத்தில் வெண்பாவை முகநூலில் பின் தொடரும் யாராவது இருந்து அவர்கள் உதவியிருக்கலாம். இதை வெண்பா எதிர்பார்த்திருக்க மாட்டார். (ஒரு துப்பறியும் கதை போல இருக்கிறது இந்த இடம்.)


4) பேட்டி ஆரம்பிக்கும் முன்பு மதுவந்தியிடம் வெண்பா பேசிக்கொண்டிருந்ததை தான் கேட்டேன் என கலையரசி சொல்வது உண்மையெனில் (அதற்கான வாய்ப்பு அதிகம்) இந்த ‘சம்பவத்தின்’ திரைக்கதை மதுவந்தி போன்ற பாஜக இரண்டாம் நிலை தலைவர்களால் எழுதப்பட்டதே - கறுப்பர் கூட்டம் சர்ச்சை, ஸ்டாலின் இந்துக்களை அவமதிக்கிறார் போன்ற வெடிமருந்துகள் பற்றிக் கொள்ளாத போதும் பாஜக அணியினர் இந்து விரோத பிம்பத்தை திமுக மீது சுமத்த பிடிவாதமாக முயன்று கொண்டிருக்கிறார்கள். கலையரசியின் பேச்சு குறித்து ஒரு பரபரப்பு கிளம்பிட, அவரிடம் பேட்டி எடுத்து சம்பவம் செய்யலாம் என நினைத்திருப்பார்கள். ஆனால் மதன் தான் பேட்டியாளர் எனத் தெரிந்தால் கலையரசி ஒப்புக்கொள்ள மாட்டார் என வெண்பாவை மாற்றுப்பெயர், அடையாளத்துடன் அனுப்பியிருக்கிறார். கலையரசியின் காலில் வெண்பா விழுந்து வணங்கியது முதல் அவரிடம் பேட்டிக்காக கெஞ்சியது வரை நடந்திருக்க வாய்ப்புண்டு. ரொம்ப கெஞ்சுறாளே என மனம் கனிந்து கலையரசி ஒப்புக் கொள்ள ஆரம்பித்தது சனி. இரண்டு நாள் கழித்து பேட்டிக்காக மதனின் குழு போய் நிற்க கலையரசி சாப்பிடாத களைப்பிலும் மதனின் முட்டாள்தனமான கேள்விகளிலும் திகைத்து போய் சொதப்பி விட்டார்.


5) இது போன்ற பேட்டிகளால் பாஜகவுக்கு என்ன பலன் கிடைக்கும்? பூஜ்யம். சமூக வலைதளங்களில் உள்ள சில ஆயிரம் சங்கிகளுக்கு பார்த்து ரசிக்க இத்தகைய ரௌடியிசங்கள் உதவும். மக்களிடமோ இப்பேட்டிகள் எதிர்மறையாகவே விளைவை ஏற்படுத்தும். இதன் பின்பு மதுவந்தி இருப்பதிலும் ஆச்சரியமில்லை - அவர் பேசிய பேச்சுக்கள் இதுவரை சர்ச்சைகளை உண்டு பண்ணி, தமிழக பாஜகவுக்கு கெட்ட பெயரையே ஏற்படுத்தியது. இப்போது மதன் போன்ற கைத்தடிகளை வைத்து அதே எதிர்மறை வெறுப்பரசியலை தொடர்கிறார். 


6) இந்திய ஊடகங்களின் வரலாற்றிலேயே பொய்ப் பெயர், பொய் விபரங்களுடன் பேட்டியெடுக்க சென்ற முதல் டீம் இதுவாகத் தான் இருக்கும். இத்தனைக்கும் அந்த பாட்டிக்கு மதனையே தெரியவில்லை - மதன் டயரி சேனல் என்று உண்மையை சொல்லியிருந்தாலும் அதனால் கலையரசி பாட்டி மறுத்திருக்கப் போவதில்லை. ஏதோ ஒரு சின்ன பையன் என நினைத்திருப்பார். ஆனால் ஏதோ துப்பறியும் சாம்பு போல பயங்கரமாய் பிளான் போட்டு பாட்டியை டிராப் செய்திருக்க தேவையில்லை. மதனே போய் காலில் விழுந்திருந்தாலும் பாட்டி ஒத்துக் கொண்டிருப்பார். இவ்வளவு பில்ட் அப் பண்ணி கடைசியில் அது திருட்டுப் பட்டத்துக்கு வழிவகுத்து விட்டது. வளர்மதி, லயோலா கல்லூரி, சமூக நீதி சேனல் போன்ற பொய்களினால் தான் வெண்பா திருடியிருப்பார் எனும் எண்ணம் மக்களுக்கு வலுப்பட்டுள்ளது.


7 ) மதன் அடிப்படையில் ஒரு ‘திருடன்’ என கலையரசி சொல்வது உண்மை. அவர் பேட்டியெடுக்க வரும் போது ஒரு கிரிமினலைப் போல எதிர்கொள்வது மட்டுமே ஒரே தீர்வு. ஒழுங்காக பதில் சொல்லப் போனால் பேட்டி கொடுக்கிறவர் முட்டாள் போன்ற பிம்பம் ஏற்பட்டு விடும். கலையரசி சொல்வதைப் போலவே மதனின் வாழ்க்கை சுயமரியாதையோ, அங்கீகாரமோ இன்றி ரொம்ப கேவலமாகப் போய் முடியப் போகிறது என நினைக்கிறேன். “த்த்தூ த்த்தூ” என சூர்யா தேவி துப்பி போஸ்ட் பண்ணின யுடியூப் காணொலிகள் ஐந்தே நிமிடங்களில் 1-2 லட்சம் வியூஸ்களைப் பெற்றன. பிளாஸ்டிக் டப்பா விற்கிற காளொலிகளுக்கே 25,000 வியூஸ் கிடைக்கிறது. 50,000 வியூஸ்காக அவர் இவ்வளவு டகால்டி செய்து ஒரு பாட்டியை வதைக்கத் தேவையில்லை. இப்படியே போனாலும் எந்த சேனலிலும் வேலை தர மாட்டார்கள். பாஜக தேர்தலுக்குப் பின் சர்க்கஸை கலைத்துக் கொண்டு கிளம்பி விடும். மதன் அப்போது ஜெப்படி வேலைதான் செய்ய வேண்டும்.


8 ) வெண்பாவுக்கு ஒரு அறிவுரை - அடுத்த முறை இது போன்ற தாவூத்துகளுக்கு reconnaissance வேலை செய்ய, வேவு பார்க்க செல்லும் போது மாறுவேடம் அணியவும். புகைப்படம் சிக்கினாலும் தப்பித்துக் கொள்ளலாம். ரெபரென்ஸுக்கு பழைய ஜெய்சங்கர் படங்கள் பார்க்கவும். 


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...