முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒழுங்கும் முன்னோடியும்



"நடக்கும் போது நாய்க்குட்டி உன்னை
முந்துகிறதா
எதிர்திசையில் மூர்க்கமாய் இழுத்து நட
வில்லென்று கத்தும் --
கண்டுக்காதே

வீட்டுக்குள்
படுக்கையறை போன்ற பிரத்யேக அறைகளில்
நாய்க்குட்டியை விடாதே முக்கியமது
அதுக்கு சில இடங்களில் அனுமதி இல்லைண்ணு
தெளிவாப் புரியட்டும்

உன் சாப்பாட்டில் அதுக்கு
பங்கில்லை
நீ ஏப்பம் விட்டபின் தான்
அதற்கு உணவு

ஒழுங்கு மீறி
சோபாவை கடித்து கட்டில் காலை பிறாண்டுதா
உடனே தனிக்கூட்டில் இட்டு அடை

முதல் ஆறு மாதம் கட்டாயம் சங்கிலியில்

பயிற்சி எத்தனை சீக்கிரமோ
அத்தனை நல்லது

இப்போ நம்ம குமார் சார் வீட்டு லேப்ரடார் பாத்ததில்லை
மிதியடியில் கம்முணு படித்துக்கிட்டு
இன்னா நடந்தாலும் யாரு வந்தாலும்
"come" சொல்லாங்காட்டி அசையாதே
அது பயிற்சிங்க!

Caninie Behavior and Psychology Diploma ஹோல்டர் சார் நான்
நல்லா கேளுங்க --
நாய்களுக்குன்னு ஒரு படிநிலை இருக்கு
ஒரு நாயை முன்னே போக விட்டீங்க
அது தலைவன்
நீங்க தொண்டன்னு பொருள்

அதுனால தான் திரும்ப திரும்ப சொல்றேன்
இதோ இப்போ பண்ணுனீங்க இல்லை, அதைப் போல
வீட்டுக்குள்ள நுழையறச்ச
நாய்க்குட்டியை முன்னே போக விடாதீங்க
முதல் காலடிஉங்களுது .. சரியா? "

எங்களுக்கு முன் தண்ணீர் லாரி
பின்
ஏறத்தாழ முட்டியபடி மாநகர பேருந்து
அப்பால்
ஒரு ராட்சத உறுப்பென நெளியும்
கட்டுமான வாகனம்

சிதறி ஒன்று சேரும் வரிசைகளில்
மீறும் ஜனங்கள்

ஒவ்வொரு வெற்றிடத்தையும் உடனடி
நிரப்பும்
புகை மேகம், ஒலிகள்

லாரி நகர
நாங்களும் முன்னே எத்தனிக்க
இரண்டு பைக்குகள் குறுக்கே பாய்ந்தன

காற்றில் சிறு எம்பலுடன்
கடந்து பாய்ந்தது முன்னால்
தெருநாய் ஒன்று

கருத்துகள்

Rajasurian இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக இருக்கிறது.
மதுரை சரவணன் இவ்வாறு கூறியுள்ளார்…
good. but long.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.