முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமண வரவேற்பு- கேதரின் மோக்ளர்

சொல்வனத்தில் வெளியாகி உள்ள எனது மொழிபெயர்ப்புக் கவிதை




ஒரு தூரத்து உறவினரின்

திருமணத்தின் போது

கடவுளும் சாத்தானும்

ஒரே மேசையில்

அமர்ந்திருந்தனர்

ஏனெனில்

இருவருடைய நாள் ஏற்பாடுகளும்

அத்திருமண விருந்திற்கானவை.

அது ஒரு இலவச மதுக்கூடம்;

தமது இருக்கைகளை தள்ளாடி

அடைந்த பொது

எல்லாரும்

ஒரு மெல்லரவத்தை

கொண்டிருந்தனர்.

அனைவரையும்

ஒரு ஜோக் சொல்லி

கேளிக்கை ஊட்டி

சாத்தான் இறுக்கத்தை கலைத்தது.

பழுப்பு நிறத்தில் ஒட்டும் படியாய் (sticky)

உள்ளது எது?

ஒவ்வொருவரும்

திகைத்து

கடவுளை சங்கடமாய்

பார்த்தனர்;

அவர் முறைத்தபடி இருந்தார்;

மற்ற எல்லாரையும்

போல

ஒரு கீழ்த்தரமான பதிலை

எதிர்நோக்கினார்.

ஒரு குச்சி (stick), சாத்தான்

அப்பாவியாக சொன்னது;

மொத்த மேஜையும்

களிப்பில் ஆரவாரித்தது.

உனக்கு நல்ல

நகைச்சுவை உணர்வு

இருக்கிறது, கடவுள் சொன்னார்.

உன்னை ஏன்

எனக்கு ஒருபோதும்

பிடிக்க இல்லை என்பது புரியவில்லை.

கடவுள்

சாத்தானின் தோளை

ஆதுரமாய் தட்டினார்.

எனக்கும் தெரியாதே,

சாத்தான் சொன்னது.

அது கெட்ட

சுபாவத்தினோடு

சம்மந்தப்பட்டதாக

இருக்கலாம்

என்று நினைக்கிறேன்..

கடவுள் சரிதானென்று

தலையாட்டினார்.

பிறகு

ஒரு நொடிப் பிளவில்

சாத்தான்

எல்லாரையும்

பஸ்மமாக ஆக்கியது.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல அருமையான கவிதை ..
கடவுளும் சாத்தானும் நமக்குள்ளாக இருப்பவர்கள்.. சொன்ன விதம் அற்புதம்
துரோகி இவ்வாறு கூறியுள்ளார்…
ஐயோ... என்ன சொல்றது எண்டே தெரியல்ல.... உங்கள் பணி தொடரட்டும்....
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கே.ஆர்.பி செந்தில் மற்றும் துரோகி!
பகிர்வுக்கு நன்றி

அருமை.......
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி உலவு
matsan இவ்வாறு கூறியுள்ளார்…
theemaikal mudhalil theriyathu
venkatx5 இவ்வாறு கூறியுள்ளார்…
"கடவுள் பாதி மிருகம் பாதி."

ஏதோ லிங்க் இருக்கும்போல தோணுது..
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி மேட்சன் மற்றும் வெங்கட்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.