முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் எழுத்தாளர்களைப் பார்த்தால் பயப்படுகிறேன்?



எனக்கு எழுத்தாளர்களை பார்த்தாலே குலை நடுங்கும். ஏன் என விளக்கி விடுகிறேன்.



1. அவர்கள் நம்மிடம் பேச ஆரம்பித்தால் கழுத்தில் ரத்தம் வரும் வரை விடமாட்டார்கள்.


2. எழுத்தாளனாக போஸ் கொடுத்தபடி பஞ்ச் வசனம் பேசுவார்கள்.


3. வேறு யாரிடமோ சொல்ல வேண்டியதைக் கூட நம்மிடம் சொல்லுவார்கள்.


4. தம் கவிதை, கதைகளின் பொருள் என்ன என விடாமல் வியாக்கியானிப்பார்கள் அல்லது தன் ஆளுமையை பிரஸ்தாபிப்பார்கள்.




5. இதனிடையே மறந்து கூட காப்பி தண்ணி தரமாட்டார்கள்.


6. நீங்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே ஒரு சந்தேகப் பார்வை பார்த்து “வாங்க” என்பார்கள். போகும் போது அதே பார்வையில் “வாங்க” என்பார்கள்.


7. எதிர்க்கலாச்சார்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் போனால் “நான் ஒரு வாரமாக் மூணு வேளையும் குடிக்கிறேன்” என்று சொல்லி மந்தஹசிப்பார்கள். பிறகு நான் ஒரு பொறுக்கி, உதவாக்கரை, ஒன்றும் சாதிக்காதவன், ஆனாலும் மகத்தானவன் என சொல்லி விட்டு உங்கள் கண்களை உற்றுப் பார்ப்பார்கள்.


8. நீங்கள் இடையே புகுந்து ஏதாவது சொல்லி விட்டால், “நானும் அதாங்க சொல்றேன்” என்று தான் சொல்லி வந்ததையே தொடர்வார்.


8. சுருக்கமாக மேடை நாடகத்தில் ஒரே ஒரு பார்வையாளனாக இருக்கும் நிலை ஏற்படும்.




நான் சந்தித்ததில் தேவதேவனும் மனுஷ்யபுத்திரனும் விதிவிலக்கு. தேவதேவனுடன் ஒரு கேம்பில் ஒரே அறையில் இரண்டு நாள் இருந்தேன். அவர் ஒரு சொல் கூட சொல்லவில்லை. மனுஷ் இலக்கியம் பேச மாட்டார், ரொம்ப நோண்டினால் ஒழிய. சு.ராவையும் குறிப்பிட வேண்டும். அவருக்கு நீங்க மிக அணுக்கமானால் ஒழிய இலக்கிய சங்கதிகளை வெளியே எடுக்க மாட்டார். உங்கள் பின்னணி, தொழில் வேலை படிப்பு விபரங்களை விசாரித்து அது குறித்து ரொம்ப சாதாரணமாக உரையாடிக் கொண்டிருப்பார். 8 மணிக்கு சன் செய்திகள் ஆரம்பித்ததும் உங்களிடம் தெரிவித்து விட்டு அதை போட்டு பார்ப்பார். சரியாக உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்ததும் “எனக்கு வேற வேலை” இருக்கு என விடைபெறுவார். முக்கியமாக அவர் உங்களை ஒரு ரத்தம், சதை எலும்பு உள்ள ஒரு வழக்கமான மனிதராக பாவிப்பார். தன்னையும் அப்படியே.


எல்லாவற்றையும் விட முக்கியம் சு.ராவிடம் பேசும் போது உங்களுக்கு ஒரு எழுத்தாளனிடம் உரையாடும் உணர்வே ஏற்படாது. அது எவ்வளவு பெரிய காரியம் இல்லையா?

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இவ்வளவு இருக்கா...!

நன்றி...
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
:)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.