முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொடுத்து வைத்த வாழ்க்கை!


என் கூடப்படித்த நண்பன் ஒருவனின் அப்பா சில மாதங்களுக்கு முன் காலமானார். அவன் படுமக்கு. அவர் தான் பெருந்தொகை லஞ்சம் கொடுத்து பையனுக்கு அரசு வேலை வாங்கித் தந்தார். ஆனால் அப்பாவுக்கு மகன் மீது அப்படி ஒரு பெருமை. சதா புகழ்ந்து கொண்டே இருப்பார். இன்னொரு பக்கம் பல புத்திசாலியான திறமைசாலியான மகன்களை மட்டம் தட்டும் தகப்பன்களை பார்த்திருக்கிறேன். இந்த முரண்பாட்டுக்கு ஏதோ ஒரு பொது நியதி இருக்கிறது.

பொதுவாக பெற்றோருக்கு மக்கு பிள்ளைகளை அதிகம் பிடிக்கிறது. அவர்களை கொண்டாடுகிறார்கள். பாதுகாக்கிறார்கள். திறமைசாலி பிள்ளைகளுக்கு இயல்பிலேயே கொஞ்சம் அலட்சியமும் சுதந்திர விருப்பங்களும் வந்து விடுகின்றன. அவர்கள் மீது குறிப்பாக அப்பாக்களுக்கு ஒரு அச்சமும் வெறுப்பும் வந்து விடுகிறது. வரலாற்றிலேயே பல சாதனையாளர்களுக்கு அப்பாவோடு அவஸ்தையான உறவு தான் இருந்திருக்கிறது. பலரும் தம்மை ஏன் அப்பா ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கவலையை நெஞ்சில் சுமந்தபடி தான் வாழ்நாளெல்லாம் இயங்கி இருக்கிறார்கள்.

யோசிக்க யோசிக்க மக்காய் இருப்பவர்களுக்கு வாழ்க்கை அவ்வளவு சுலபமாய் அமைந்து விடுவதை பார்க்கிறேன். கண்களில் குழப்பமில்லை, தலைக்கு மேல் பாரமில்லை. உலகில் என்ன நடந்தாலும் அவர்களை பாதிப்பதில்லை. இயல்பான பலவீங்கள் தம்மை பாதுகாக்கும் உணர்வு அபாரமாக வளர்த்து விடுகிறது. அதனால் தம்மை பாதுகாப்பதை தவிர எந்த கவலையும் ஏற்படுவதில்லை. வீட்டில், வேலை பார்க்கும் இடங்களில், நண்பர்கள் இடையே இவனை தனியே நம்பி விட முடியாது என அஞ்சி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க மாட்டார்கள். யாராவது அவர்களை உள்ளங்கையில் வைத்து தாங்கியபடி இருப்பார்கள்.

நான் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு மூளைவளர்ச்சி குன்றியவர் இருக்கிறார். அவர் எந்த வேலையில் பண்ண மாட்டார். ஏதாவது ஒரு துறைக்கு போய் தெரிந்தவர்களிடம் காசு கேட்பார். அவரது அண்ணன் அந்நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வுற்றவர் என்பதால் எல்லோருக்கும் அவர் மீது சற்று கருணை உண்டு. ஆனால் அவர் தெய்வத்திருமகன் விக்ரம் போல் தேவமகன் அல்ல. குடி, கஞ்சா பழக்கம் உண்டு. கல்யாணமாகி குழந்தைகளுக்கு கல்யாணமாகி பேரப்பையன்களும் பிறந்து விட்டார்கள். பார்க்க நாற்பது வயது எனத் தான் தோன்றும். ஆள் பலே ஜாலி ஆசாமி. பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு, விபச்சார சகவாசம் எல்லாம் உண்டு. இப்போது சொல்லுங்கள் உங்களில் எத்தனை பேருக்கு இப்படி கொடுத்து வைத்த வாழ்க்கை உண்டு?

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இன்னும் சில வருடங்களில் 'கொ(கெ)டுத்தது' எல்லாம் திரும்ப வரும்...!

Wait and See...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.