முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொடுத்து வைத்த வாழ்க்கை!


என் கூடப்படித்த நண்பன் ஒருவனின் அப்பா சில மாதங்களுக்கு முன் காலமானார். அவன் படுமக்கு. அவர் தான் பெருந்தொகை லஞ்சம் கொடுத்து பையனுக்கு அரசு வேலை வாங்கித் தந்தார். ஆனால் அப்பாவுக்கு மகன் மீது அப்படி ஒரு பெருமை. சதா புகழ்ந்து கொண்டே இருப்பார். இன்னொரு பக்கம் பல புத்திசாலியான திறமைசாலியான மகன்களை மட்டம் தட்டும் தகப்பன்களை பார்த்திருக்கிறேன். இந்த முரண்பாட்டுக்கு ஏதோ ஒரு பொது நியதி இருக்கிறது.

பொதுவாக பெற்றோருக்கு மக்கு பிள்ளைகளை அதிகம் பிடிக்கிறது. அவர்களை கொண்டாடுகிறார்கள். பாதுகாக்கிறார்கள். திறமைசாலி பிள்ளைகளுக்கு இயல்பிலேயே கொஞ்சம் அலட்சியமும் சுதந்திர விருப்பங்களும் வந்து விடுகின்றன. அவர்கள் மீது குறிப்பாக அப்பாக்களுக்கு ஒரு அச்சமும் வெறுப்பும் வந்து விடுகிறது. வரலாற்றிலேயே பல சாதனையாளர்களுக்கு அப்பாவோடு அவஸ்தையான உறவு தான் இருந்திருக்கிறது. பலரும் தம்மை ஏன் அப்பா ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கவலையை நெஞ்சில் சுமந்தபடி தான் வாழ்நாளெல்லாம் இயங்கி இருக்கிறார்கள்.

யோசிக்க யோசிக்க மக்காய் இருப்பவர்களுக்கு வாழ்க்கை அவ்வளவு சுலபமாய் அமைந்து விடுவதை பார்க்கிறேன். கண்களில் குழப்பமில்லை, தலைக்கு மேல் பாரமில்லை. உலகில் என்ன நடந்தாலும் அவர்களை பாதிப்பதில்லை. இயல்பான பலவீங்கள் தம்மை பாதுகாக்கும் உணர்வு அபாரமாக வளர்த்து விடுகிறது. அதனால் தம்மை பாதுகாப்பதை தவிர எந்த கவலையும் ஏற்படுவதில்லை. வீட்டில், வேலை பார்க்கும் இடங்களில், நண்பர்கள் இடையே இவனை தனியே நம்பி விட முடியாது என அஞ்சி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க மாட்டார்கள். யாராவது அவர்களை உள்ளங்கையில் வைத்து தாங்கியபடி இருப்பார்கள்.

நான் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு மூளைவளர்ச்சி குன்றியவர் இருக்கிறார். அவர் எந்த வேலையில் பண்ண மாட்டார். ஏதாவது ஒரு துறைக்கு போய் தெரிந்தவர்களிடம் காசு கேட்பார். அவரது அண்ணன் அந்நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வுற்றவர் என்பதால் எல்லோருக்கும் அவர் மீது சற்று கருணை உண்டு. ஆனால் அவர் தெய்வத்திருமகன் விக்ரம் போல் தேவமகன் அல்ல. குடி, கஞ்சா பழக்கம் உண்டு. கல்யாணமாகி குழந்தைகளுக்கு கல்யாணமாகி பேரப்பையன்களும் பிறந்து விட்டார்கள். பார்க்க நாற்பது வயது எனத் தான் தோன்றும். ஆள் பலே ஜாலி ஆசாமி. பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு, விபச்சார சகவாசம் எல்லாம் உண்டு. இப்போது சொல்லுங்கள் உங்களில் எத்தனை பேருக்கு இப்படி கொடுத்து வைத்த வாழ்க்கை உண்டு?

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இன்னும் சில வருடங்களில் 'கொ(கெ)டுத்தது' எல்லாம் திரும்ப வரும்...!

Wait and See...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...