முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்டண்ட் கலைஞன் அல்ல - மதிமலர்




முஷ்டியை முறுக்கி நெஞ்சு தசைகள் அனைத்தும் இறுகி முகம் கல்லாக மாறி
கோபத்தின் ஆவி பறக்க, ஒரே அடியில் ஆளைக் காலி செய்யும் புரூஸ் லீ
என்ற நடிகனின் திரைப்படங்களை திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே
இருக்கிறோம். அவனைப் பற்றிய பன்முக பிம்பத்தை இந்த நூலில் உருவாக்கி
இருக்கிறார் ஆர். அபிலாஷ். சின்ன வயதில் ஷாங்காயின் நெருக்கமான தெருக்களில்
சதா சண்டையிட்டுத் திரிந்த நோஞ்சான் இளைஞனான புரூஸ் லீ, குங்-பூ கற்று பெரும்
சண்டைக் கலைஞனாக உருப்பெறுவது இந்நூலின் பக்கங்களில் அபிலாஷுக்கே உரிய
மொழியில் கட்டமைக்கப்படுகிறது. புரூஸ்லீக்குப் பெயர் வைத்தது அவர் பிறந்த
மருத்துவமனையின் மருத்துவர் என்பதில் ஆரம்பித்து சமீபத்தில் தமிழில் புரூஸ் லீக்கு
மிஷ்கின் செலுத்தும் மரியாதை வரைக்கும் இந்நூலில் கொண்டு வந்துள்ளார். நான்
அமெரிக்காவில் அதிகம் சம்பாதிக்கும் ஆசிய நடிகன் ஆவேன். பத்து ஆண்டில் ஒரு
கோடி டாலர் பணம் சம்பாதிப்பேன் என்று தான் படுத்த படுக்கையாகக் கிடந்தபோது
எழுதி வைத்து, அதன் படியே வென்றவர் புரூஸ் லீ. அவரிடம் ஆயிரக்கணக்கணக்கான
புத்தகங்கள் இருந்தன. வாஷிங்டன் பல்கலையில் அவர் தத்துவம் பயின்றவர்- ஆகிய
புரூஸ் லீ பற்றிய பெரிதும் அறியப்படாத தகவல்களும் அவரது காதல், ஜென்
ஞானியைப் போன்ற ஒட்டாத நடவடிக்கைகள், அவர் குங் பூ ஆசானாக அமெரிக்காவில்
புகழ் பெற்ற கதைகள், அவர் பங்குகொண்ட சண்டைகள், சவால்கள்- படிக்கப் படிக்க
புரூஸ்லீ பெரும் காவிய நாயகனாக நம்முன் எழுந்து நிற்கிறார். எல்லாவிதமான
முரண்களும் கொண்ட ஒரு சாதாரண மனிதனாக இருந்த அவர் அவற்றுடனே
அவற்றைக் கடந்து சென்றிருக்கிறார் என்பதே இந்நூல் விளக்கும் செய்தி.

நன்றி: அந்திமழை மார்ச் 2013

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
புரூஸ் லீ பற்றிய அறியாத செய்தி...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.